| |
3281 | "நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியந் தூயமணி முத்தாற்றிற் புகவிட்டேந்; துணைவரவர் கோயிலின்மா ளிகைமேல்பாற் குளத்திலவ ரருளாலே போயெடுத்துக் கொடுபோதப் போதுவா" யெனப்புகல,. | |
| 127 |
3282 | "என்னவதி சயமிதுதா? னென்சொன்ன வா?" றென்று மின்னிடையார் சிறுமுறுவ லுடன்விளம்ப, மெய்யுணர்ந்தார் "நன்னுதலா! யென்னுடைய நாதனரு ளாற்குளத்திற் பொன்னடைய வெடுத்துனக்குத் தருவதுபொய் யா"தென்று, | |
| 128 |
3283 | ஆங்கவரு முடன்போத வளவிறந்த விருப்பினுடன் பூங்கோயி லுண்மகிழ்ந்த புராதனரைப் புக்கிறைஞ்சி, ஓங்குதிரு மாளிகையை வலம்வந்தங் குடன்மேலைப் பாங்குதிருக் குளத்தணைந்தார் பரவையார் தனித்துணைவர். | |
| 129 |
| 3280. (இ-ள்.) பொங்குபெரு....அடி வணங்கி - மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்பத்தினுடனே பின்னிய புரிந்த கூந்தலையுடைய தோழியர்கள் பலரும் துதிக்கத் தாமரை மலரைப் போன்ற கண்களையும், கொவ்வைச் செங்கனி போன்ற வாயினையுமுடைய பரவையம்மையார் வந்து (நம்பிகளது) திருவடிகளில் வணங்கி; எங்களையும்...இயம்ப - எங்களையும் நினைந்து எழுந்தருளிய தேவரீரது கருணைக்கு யாம் தகுதியுடையோமா என்று கூற; இனிதளித்து...வைகுநாள் - அவருக்கு இனிய மொழியுரைத்து மங்கைநல்லாராகிய அவருடனே மகிழ்ச்சியுடன் வதிந்திருக்கு நாளிலே, |
| 126 |
| 3281. (இ-ள்.) வெளிப்படை; "தலைவராகிய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளிய சிவபெருமான் நமக்கு அருளிய நன்னிதியமாகிய பொன்னினைத் தூய திருமணிமுத்தாற்றிலே புகும்படி இட்டோம்; அதனைத் துணைவராகிய அப்பெருமானது இத்திருக் கோயிலின் மாளிகையின் மேல்பாலுள்ள (கமலாலயத்) திருக்குளத்திலே அவர் திருவருளாலே போய் எடுத்துக்கொண்டு வருதற்குஉடன் போதுவாயாக!" என்று (நம்பிகள்) சொல்ல. |
| 127 |
| 3282. (இ-ள்.) மின்னிடையார் - அதுகேட்ட மின்போலும் இடையினை உடைய பரவையம்மையார்; என்ன...என்று - இதுதான் என்ன அதிசயம்! சொல்லியவாறுதான் என்னே! என்று அற்புதத்துடன்; சிறுமுறுவலுடன் விளம்ப - புன்முறுவலுடன் நம்பிகள் "நல்லநுநதலினை யுடையவளே! என்னுடைய நாயகனாரது திருவருளாலே இக்குளத்தினிலே பொன் முழுதும் எடுத்து உனக்கு நான் தருவது பொய்யாகாது"என்று கூறி, |
| 128 |
| 3283. (இ-ள்.) ஆங்கு அவரும் உடன் போத - ஆங்குத் தம்முடன் அப்பரவையாரும் வர; அளவிறந்த...வலம் வந்து - அளவு கடந்த விருப்பத்துடன் பூங்கோயிலினுள் மகிழ்ந்தெழுந்தருளியுள்ள புனிதராகிய இறைவர் திருவடிகளை அக்கோயிலுட் புகுந்து வணங்கி ஓங்கிய திருமாளிகையினை வலமாகச் சுற்றி வந்து; பாவையார் தனித் துணைவர் - பரவையாருடைய தனித் துணைவராகிய நம்பிகள்; அங்கு...அணைந்தார் - அவ்விடத்தினின்றும் உடனே மேலைப்பக்கத்திலுள்ள கமலாலயத் திருக்குளத்தில் அணைந்தருளினர்; |
| 129 |
| இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்றன. |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |