| |
| கொள்ளும் ஆசாரியராம் தன்மைப் பெரு நலம் குறித்தற் கென்க; தனி என்ற குறிப்புமிது. பொன்னைத் தாமே சென்றெடுத்துத் தரலாமாயினும் நம்பிகள் அவரையும் "உடன் போதுவாய்" என்று கூட்டிச்சென்ற குறிப்பு மிதுவே என்க; பிறர் பிறவா றெல்லாமெண்ணி அபசாரப்படுதல் உண்மையறிவில்லாமையாலா மென்க; இது பற்றிய மேல் அருட் சரித விளைவு வரலாறும் காண்க; துணைவர் என்ற குறிப்பும் கருதுக; தனித் துணைவர் - தம்மையடைந்த அடியார்கள் யாவர்க்கும் நல்லாறு செலுத்தும் துணைவரே யாயினும், பரவையாருக்குச் சிறப்பாகிய துணைவர் என்பது. |
| புராதனர் - கால எல்லை கடந்த பழமை; "முன்னோ பின்னோ" என்ற திருத்தாண்டகக் கருத்துக் காண்க. |
| புனிதர் கழல் - என்பதும் பாடம். |
| 129 |
3284 | மற்றதனில் வடகீழ்பாற் கரைமீது வந்தருளி முற்றிழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர் கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்திலிழிந் தற்றைநா ளிட்டெடுப்பார் போலங்குத் தடவுதலும், | |
|
| 130 |
3285 | நீற்றழகர் பாட்டுவந்து திருவிளையாட் டினினின்று மாற்றுறுசெம் பொன்குளத்து வருவியா தொழிந்தருள "ஆற்றினிலிட் டுக்குளத்திற் றேடுவீ! ரருளிதுவோ? சாற்று"மெனக் கோற்றொடியார்மொழிந்தருளத்தனித்தொண்டர். | |
|
| 131 |
3286 | "முன்செய்த வருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை தன்செய்ய வாயினகை தாராமே தாரு"மென மின்செய்த நூன்மார்பின் வேதியர்தா முதுகுன்றிற் "பொன்செய்த மேனியினீ" ரெனப்பதிகம் போற்றிசைத்து, | |
|
| 132 |
3287 | முட்டவிமை யோரறிய முதுகுன்றிற் றந்தபொருள் சட்டநான் பெறாதொழிந்த தளர்வினாற் கையறவாம் இட்டளத்தை யிவளெதிரே கெடுத்தருளு" மெனுந்திருப்பாட் டெட்டளவும் பொன்காட்டா தொழிந்தருள வேத்துவார், | |
|
| 133 |
3288 | "ஏத்தாதே யிருந்தறியே" னெனுந்திருப்பாட் டெவ்வுலகுங் காத்தாடு மம்பலத்துக் கண்ணுளனாங் கண்ணுதலைக் "கூத்தா!தந் தருளாயிக் கோமளத்தின் முன்"னென்று நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும், | |
|
| 134 |
3289 | கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால் வந்தெழுபொன் றிரளெடுத்து வரன்முறையாற் கரையேற்ற, அந்தரத்து மலர்மாரி பொழிந்திழிந்த தவனியுள்ளோர் "இந்தவதி சயமென்னே! யார்பெறுவா" ரெனத்தொழுதார். | |
|
| 135 |
| 3284. (இ-ள்.) மற்றதனில்...வந்தருளி - அக்குளத்தின் வடகிழக்குப் பக்கம் உள்ள கரையின்மேல் வந்தருளி; முற்றிழையார் தமை நிறுத்தி - பரவையாரை நிறுத்தி; முனைப்பாடித் திருநாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; கற்றைவார்...தடவுதலும் - கற்றையாகிய நீண்ட சடையினையுடைய சிவபெருமானைக் |