| |
| குக்கும் சான்றாக மண்ணவ ரன்றி விண்ணவர் உள்ளார்; நீர் மறுக்க இயலாது" என்று தோழமைத்திறத்தால் அவருக்கு நினவூட்டுவார் போன்ற குறிப்புடையது. |
| சட்டநான் பெறாதொழிந்த தளர்வினால் - சட்ட - செப்பமாக - செவ்வியதாய்; "சட்டவினியுளது சத்தேகாண்" (போதம். 9-2); "சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச்சொல்" (போதம் - மாபாடியம்); சட்ட - விரைவாக என்றலுமாம்; "சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்" (திருவா). |
| பெறாதொழிந்த தளர்வு - பெறாமை காரணமாக வந்த தளர்ச்சி. |
| கையறவாம் இட்டளம் - கையறவு - செயலற்ற தன்மை; இட்டளம் - துன்பம். |
| இவள் எதிரே - இவள் - என்ற அணிமைச் சுட்டுப் பரவையாரும் அங்கு உடனிருத்தலைக் குறிக்கும். "இவள் தன் முகப்பே" "இவள் வாடுகின்றாள்" என்பன பதிகம்; எதிரே - இவள் கண் முன்னே - இவள் காணும்படி; இவள் கொண்ட ஐயப்பாடும் (3282) துணிவு (3285) மாகியவற்றுக்கு மாறாக உணர்ந்துகொள்ளும்படி. |
| பொன்பெறாத - கையறவாம் - இட்டளத்தைக் கெடுத்தருளும் - துன்ப நீங்குமாறு பொன் கொடுத்தருளும் என்றபடி. "தந்தருளாய்" என்பது பதிகம். |
| எனும் - என்ற கருத்துடைய. |
| திருப்பாட்டு எட்டளவும் - "உம்பரும்" என்ற 2-வது பாட்டு முதல் "பரசாருங் கரவா" என்ற எட்டாவது பாட்டுவரை; இப்பாட்டுக்கள் எல்லாம் இக்கருத்துடையன என்பது இட்டளங்கெடவே (யருளீர்) என்ற பதிக மகுடத்தினால் அறியப்படும். இங்கு எட்டுப் பாட்டளவும் இறைவர் பொன் காட்டா தொழிந்தருளினர் என்பதும், அதன் மேல் ஒன்பதாவது பாட்டில் அரிது வேண்டின அளவிற் பொன் கொடுத்தருளினர் என்பதும் மேல் வரும் பாட்டிற் கூறுவார். இவ்வாறு ஒரு பதிகத்தினுள் இன்னின்ன பாட்டில் இன்னின்ன நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்று எடுத்துக் காட்டியருளுதல் ஆசிரியரது தெய்வ வருட்கவி நலம்; "பண்ணினேர் மொழி" என்ற பதிகம் பற்றி "உண்ணீர்மை"; (1533) என்ற விடத்தும், "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பற்றி "எடுத்த பாட்டினில்" (2987) என்ற இடத்தும் ஆசிரியர் உரைத்தவையும், பிறவும் ஒப்பு நோக்குக. |
| காட்டா தொழிந்தருள - பொன் காட்டாமையும், பின்னர்க் காட்டுவது போலவே அருளிப்பாடேயாம் என்பது, "எக்கிர மத்தி னாலு மிறைசெய லருளேயென்றும்" என்று வருவனவாதி ஞான நூன்முடிபுகளாற் கண்டுகொள்க. |
| ஏத்துவார் பரவுதலும் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக; ஏத்துவார் - ஏத்துவாராகி - முற்றெச்சம். |
| 133 |
| 3288. (வி-ரை.) "ஏத்தாதிருந்தறியேன்" என்னும் திருப்பாட்டு; இது பதிகத்துள் ஒன்பதாவது திருப்பாட்டு. அதன் கருத்தினை இங்கு ஆகிரியர் உரைத்தருளுகின்றமை காண்க. |
| "எனும்" திருப்பாட்டு - என்று தொடங்கும் பாட்டு; முதற் குறிப்பு. |
| எவ்வுலகும் காத்து ஆடும் - இறைவரது ஆடல் எல்லா வுலகங்களையும் சிருட்டி முதலிய ஐந்தொழில் செய்து காத்தலேயாம் என்பது. |
| அம்பலத்துக் கண்ணுளன் - அம்பலம் - திருமன்று; (1) கண்ணுளன் - அத்திருமன்றத்தின் கண்ணே உள்ளவன். கண் - ஏழனுருபு; (2) கண்ணுள் - கூத்து; கண்ணுளள் - கூத்தாடுபவன்; (3) கண் - அருட்கண்; கண்ணுளன் - அருட்கண். அருணோக்க முடையவர் என்று மூன்று பொருளும் பெற வைத்த தமிழ் நலம் கண்டு கொள்க. |