[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்151

(இ-ள்.) மீட்டும் அவர் பரவுதலும் - மீண்டும் நம்பிகள் அதுபற்றித் துதித்தலும்; மெய் அன்பர்...காட்டுதலும் - மெய் அன்பராகிய அவரது அன்பினில் ஊற்றெடுத்து வருகின்ற பாட்டினை மகிழ்ந்து கூத்துவந்த பெருமானார் உண்டாகிய குறைவு நீங்கிய மாற்றுயர்ந்த செம்பொன்னை ஒரு மாப்பொன் தன்மையும் குறையாமல் காட்டுதலும்; மகிழ்ந்தெடுத்துக் கொண்டு கரை ஏறினார் - மகிழ்ச்சியுடன் கைக்கொண்டு குளத்தின் கரையினை ஏறியருளினார்.
(வி-ரை.) மீட்டும் அவர் பரவுதலும் - பின்னும் "வழுத்தினார்" என்றபடி மேலும் பரவியவுடனே.
  மெய் அன்பர் - "மெய்யுணர்ந்தார்" (3282) என்றவிடத் துரைத்தவை பார்க்க; மெய் இயற்கை யடைமொழி.
  அன்பில் வரும் பாட்டு - அன்பே காரணமாக ஊறி வெளிவரும் பாட்டு.
  பாட்டுவந்து கூத்துவந்தார் - பாட்டுக் கேட்கும் காரணமாக ஓர் திருவிளையாட்டினை மேற்கொள்பவர். உவந்து - உவத்தலினால்; "பாட் டுவந்து திருவிளையாட்டினின்று" (3285) என்று முன்னர்ப் பொன் வருவியா தொழிந்த நிலையிற் கூறியதும் காண்க; "கூத்தா" என்ற பதிகமும், அது குறித்தே முன்னரும் (3288) கூறியதும் காண்க.
  படுவாசி - உளதாக்கிய மாற்றுக் குறைவு; வாசி - குறைவு என்ற பொருளில் வந்தது; "வாசி தீரவே" (தேவா).
  வாசி குறைவெய்தும் - மாற்றுக் குறைவு நீங்கிய.
  ஓட்டுஅறு - ஒட்டு என்பது எதுகை நோக்கி ஓட்டு என நின்றது; ஓட்டு - ஒப்பு.
  ஒருமாவும் குறையாமல் - மா - மிகச் சிறிய அளவு. ஒன்றில் இருபதில் ஒரு பங்கு 1/20 கொண்ட அளவு என்பர்.
  காட்டுதலும் - எனவே முன்னர் உரைதாழ நின்றது அவ்வாறு காட்டிய அளவேயன்றிப் பொன்னின் தன்மையிற் குறைவின்று என்றபடி. இறைவர்உண்ணின்று காட்டிய அளவே உயிர் காணவல்லது என்பது ஞான நூன்முடிபு.
  எடுத்துக்கொண்டு கரை ஏறினார் - அதுவரை குளத்தின் வடகீழ்பாற் படித்துறையில் நீரினுள் நின்றிருந்த நம்பிகள் கரை ஏறினார் என்பதாம். இந்த இடத்தில் இப்போது "மாற்றுரைத்த பிள்ளையார்" கோயில் விளங்குகின்றது.
  கரை ஏறினார் - நம்பிகள் கரை ஏறியவதனால் உலகம் உண்மை அருள் நெறியினை உணர்ந்து கரையேறிற்று; ஆதலின் ஏறினார் என்பது ஏற்றினார் எனப் பிறவினைப் பொருள் கொள்ளவும் நின்றது.
  பாட்டுத் தந்த கூத்தனார் - என்பதும் பாடம்.
 

137

3292
ரையேறிப் பரவையா ருடன்கனக மானதெலாம்
நிரையாளிற் சுமையேற்றி நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத் திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந் தொழுதணைந்தார் வீதியினில்.
 

138

  (இ-ள்.) கரையேறி - கரையினில் ஏறிப்போந்து; பரவையாருடன்......போக்கி - பொன்னெல்லாம் வரிசைப்பட ஆள்களின்மேற் சுமையாக ஏற்றுவித்துப் பரவையம்மையாருடனே நீண்ட நிலையினையுடைய திருமாளிகையிற் செல்லவிடுத்து; திரையேறும்...தொழுது - அலை வீசும் கங்கையைத் தாங்கிய சடையினையுடைய திருமூலட்டானேசுவரரது மணமுடைய மலர் போன்ற திருவடிகளைச் சென்று