|
  |  |  | 
  |  | 3172. (இ-ள்.) மனிதரால்.....என்ன - இத்த நெல்மலையின் பெருக்கம் மனிதர்களால் சுமந்தெடுக்கும்   அளவுட்பட்டதன்று; இனி, இது என்னாற் செய்யக் கூடிய பணியன்று என்று சொல்ல; கேட்டு - (நம்பியாரூரர்)   அதனைக் கேட்டு; பனிமதி....மொழிந்து - "குளிர்ந்த சந்திரனை முடித்த சிவபெருமானன்றே அருள்   சுரந்து இந்நெல்லினை உமக்கு அளித்தார்" என்று இனிய மொழிகளைக் கூறி; தாமும்....வந்தார்   - தாமும் குண்டையூரினைச் சார வந்தருளினார். | 
  |  | 16 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன. | 
  |  | 3171. (வி-ரை) எதிர்கொண்டு - நம்பியாரூரரை எதிர்கொண்டு வந்து. | 
  |  | கோதில் வாய்மை - கோதில் - என்றது தன்மை விளக்கி நின்றது. | 
  |  | பண்டெல்லாம்....பணி - முன்னாளிலெல்லாம் அடியேன் உமக்கு அமுதுபடி சமைத்து வந்த பணி. | 
  |  | அண்டர் தம்பிரானார் தாமே - நான் வேண்டிக்கொள்ளாமலே அவர் தாமே தமது கருணைப்   பெருக்கினாலே. என்று - என்ன - என வரும் பாட்டுடன் முடிக்க. | 
  |  | அளித்தார் - கருணையினால் அருளினார்என்ற குறிப்பு. | 
  |  | 17 | 
  |  | 3172. (வி-ரை.) மனிதரால்.....ஆக்கம் - மனிதரால் சுமந்தெடுத்து இங்குக் கொண்டு வந்து உய்க்கும்   அளவில் அடங்குவதன்றெனவே, இறைவரருளப் பூதங்களாலேதான் இயல்வது என்றது. ஆக்கம் - பெருக்கம். | 
  |  | இனி....இது - இது - இந்நெல்லைச் சுமந்து வந்து திருமாளிகையில் உய்க்கும் பணி. செய்யலாகும்   - செய்யக்கூடிய. | 
  |  | பனிமதில்......நெல் என்று - இறைவர்தாமே உமக்கு நெல் அளித்தார் என்பது என்பொருட்டளித்தாராயின்   திருவாரூரில் அளித்திருப்பர்; அவ்வாறன்றிக் குண்டையூரில் அளித்து உமக்கு அருளியமையால் உமது   அன்பின் பொருட்டேயளித்தனர் என்றவாறாம். இனியன - இனிமையான மொழிகளை. தாமும் -   அவருடனே தாமும் கூடி. | 
  |  | நென் மலையினோக்கம் - என்பதும் பாடம். | 
  |  | 18 | 
  | 3173 |               | விண்ணினை யளக்கு நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலைத் தொழுது போற்றி யதிசய மிகவு மெய்தி
 "எண்ணில்சீர்ப் பரவை யில்லத் திந்நெல்லை யெடுக்க வாளுந்
 தண்ணில வணிந்தார்தாமே தரிலன்றி யொண்ணா" தென்று,
 |  | 
  |  | 19 | 
  |  | வேறு | 
  | 3174 |                       | ஆளிடவேண் டிக்கொள்வா ரருகுதிருப் பதியான கோளிலியிற் றம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
 "வாளன கண்மடவாள் வருந்தாமே" யெனும்பதிகம்
 மூளவருங் காதலுடன் முன்றொழுது பாடுதலும்,
 |  | 
  |  | 20 | 
  | 3175 |                       | "பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை யளவன்றி மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியவா ரூர்நிறையப்
 புகப்பெய்து தருவனநம் பூதங்க" ளெனவிசும்பில்
 நிகர்ப்பரிய தொருவாக்கு நிகழ்ந்ததுநின் மலனருளால்.
 |  | 
  |  | 21 |