|
  |  |  | 
  |  | பாங்கு அமைந்த பதிகள் - பாங்கு பக்கம்; இவை முன்னர் உரைக்கப்பட்டன. திருவிளமர்,   திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும். | 
  |  | துரிசறு நற் பெருந் தொண்டர் - திருவாரூர் நம்பிகள். துரிசு அறும் - வந்து   அடைந்து வழிபடும் மக்களது துரிசுகள் அறுதற் கேதுவாகிய; அறுவிக்கும். | 
  |  | புரிவுறும் - இறைவரது பணிகளையும் அடியார் பணியினையுமே எப்போதும் நினைந்திருப்பவர்;  புரிதல் - இடைவிடாது செய்தல்; திருத்தொண்டர் - திருநள்ளாற்றில் உள்ள தொண்டர்கள்;  எதிர்கொள்ள - வந்து எதிர்கொள்ளச் சென்று. | 
  |  | புக்கு - திருநள்ளாற்றினுள்ளே புகுந்து. | 
  |  | 143 | 
  | 3298 |                       | விண்டடவு கோபுரத்தைப் பணிந்துகர மேற்குவித்துக் கொண்டுபுகுந் தண்ணலார் கோயிலினை வலஞ்செய்து
 மண்டியபே ரன்பினொடு மன்னுதிரு நள்ளாறர்
 புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில மிசைப்பணிந்தார்.
 |  | 
  |  | 144 | 
  |  | (இ-ள்.) விண்தடவு...புகுந்து - ஆகாயத்தை அளாவிய திருக்கோபுரத்தின் முன்பு நிலமுறப்   பணிந்து எழுந்து கைகளை உச்சிமேற் குவித்துக்கொண்டுஉள்ளே புகுந்து; அண்ணலார்....வலஞ் செய்து   - நம்பிகள் திருக்கோயிலினை வலமாக வந்து; மண்டிய.....பணிந்தார் - மிக்கெழுந்த பேரன்பினோடும்   நிலை பெற்ற திருநள்ளாற்றிறைவரது தாமரை போன்ற அழகிய திருவடிகளிலே பொருந்தும்படி நிலமுற   வீழ்ந்து வணங்கினார். | 
  |  | (வி-ரை.) விண் தடவுதல் - விண்ணின்மேல் மிக உயர்தல். அண்ணலார் - நம்பிகள்;  அண்ணலார் கோயில் என்று கூட்டி இறைவரது கோயில் என்றுரைப்பாரு முண்டு; | 
  |  | மண்டிய - செறிந்து மிக்கு மேலெழுந்த. | 
  |  | நள்ளாறர் - "நள்ளாறனை அமுதை" என்பது பதிக ஆட்சி. | 
  |  | சேவடிக்கீழ்ப் பொருந்த நிலமிசைப் பணிந்தார் - அடி யென்பது நிலமுற உள்ள தென்பது   ஏனையோர்க்கு ஒக்குமாயினும் இறைவர்பால் உபசார மாத்திரையாய் நிற்கும்; அவ்வுபசார வழக்கே   பற்றி இவ்வாறு கூறினார். இறைவர் திருமுன்பு நிலமுற வீழ்ந்து பணிதல் தம்மை முழுதும் அவர் வசமாக்கும்   நிலைகாட்டுவதாம். | 
  |  | 144 | 
  | 3299 |                       | அங்கணரைப் பணிந்தேத்தி யருளினாற்         றொழுதுபோய் மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித்
 திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும் பணிந்து
 பொங்குமிசைப் பதிக"மரு வார்கொன்றை" யெனப்போற்றி,
 |  | 
  |  | 145 | 
  | 3300 |                       | திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின் பொருவீரந் தொலைத்தகழல் பணிந்து "பொடி யார்மேனி"
 மருவீரத் தமிழ்மாலை புனைந்தேத்தி மலைவளைத்த
 பெருவீரர் வலம்புரத்துப் பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
 |  | 
  |  | 146 | 
  |  | 3299. (இ-ள்.) அங்கணரை...போய் - இறைவரை வணங்கித் துதித்துத் திருவருள் விடை பெற்றுத்   தொழுது சென்று; மங்குலணி....வந்தெய்தி - மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில்   வந்து சேர்ந்து; திங்கள்...பணிந்து - சந்திரன் வளர்தற்கிடமாகிய திருமுடியினை உடைய இறைவரது   திருக் |