| |
| பாங்கு அமைந்த பதிகள் - பாங்கு பக்கம்; இவை முன்னர் உரைக்கப்பட்டன. திருவிளமர், திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும். |
| துரிசறு நற் பெருந் தொண்டர் - திருவாரூர் நம்பிகள். துரிசு அறும் - வந்து அடைந்து வழிபடும் மக்களது துரிசுகள் அறுதற் கேதுவாகிய; அறுவிக்கும். |
| புரிவுறும் - இறைவரது பணிகளையும் அடியார் பணியினையுமே எப்போதும் நினைந்திருப்பவர்; புரிதல் - இடைவிடாது செய்தல்; திருத்தொண்டர் - திருநள்ளாற்றில் உள்ள தொண்டர்கள்; எதிர்கொள்ள - வந்து எதிர்கொள்ளச் சென்று. |
| புக்கு - திருநள்ளாற்றினுள்ளே புகுந்து. |
| 143 |
3298 | விண்டடவு கோபுரத்தைப் பணிந்துகர மேற்குவித்துக் கொண்டுபுகுந் தண்ணலார் கோயிலினை வலஞ்செய்து மண்டியபே ரன்பினொடு மன்னுதிரு நள்ளாறர் புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில மிசைப்பணிந்தார். | |
| 144 |
| (இ-ள்.) விண்தடவு...புகுந்து - ஆகாயத்தை அளாவிய திருக்கோபுரத்தின் முன்பு நிலமுறப் பணிந்து எழுந்து கைகளை உச்சிமேற் குவித்துக்கொண்டுஉள்ளே புகுந்து; அண்ணலார்....வலஞ் செய்து - நம்பிகள் திருக்கோயிலினை வலமாக வந்து; மண்டிய.....பணிந்தார் - மிக்கெழுந்த பேரன்பினோடும் நிலை பெற்ற திருநள்ளாற்றிறைவரது தாமரை போன்ற அழகிய திருவடிகளிலே பொருந்தும்படி நிலமுற வீழ்ந்து வணங்கினார். |
| (வி-ரை.) விண் தடவுதல் - விண்ணின்மேல் மிக உயர்தல். அண்ணலார் - நம்பிகள்; அண்ணலார் கோயில் என்று கூட்டி இறைவரது கோயில் என்றுரைப்பாரு முண்டு; |
| மண்டிய - செறிந்து மிக்கு மேலெழுந்த. |
| நள்ளாறர் - "நள்ளாறனை அமுதை" என்பது பதிக ஆட்சி. |
| சேவடிக்கீழ்ப் பொருந்த நிலமிசைப் பணிந்தார் - அடி யென்பது நிலமுற உள்ள தென்பது ஏனையோர்க்கு ஒக்குமாயினும் இறைவர்பால் உபசார மாத்திரையாய் நிற்கும்; அவ்வுபசார வழக்கே பற்றி இவ்வாறு கூறினார். இறைவர் திருமுன்பு நிலமுற வீழ்ந்து பணிதல் தம்மை முழுதும் அவர் வசமாக்கும் நிலைகாட்டுவதாம். |
| 144 |
3299 | அங்கணரைப் பணிந்தேத்தி யருளினாற் றொழுதுபோய் மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித் திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும் பணிந்து பொங்குமிசைப் பதிக"மரு வார்கொன்றை" யெனப்போற்றி, | |
| 145 |
3300 | திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின் பொருவீரந் தொலைத்தகழல் பணிந்து "பொடி யார்மேனி" மருவீரத் தமிழ்மாலை புனைந்தேத்தி மலைவளைத்த பெருவீரர் வலம்புரத்துப் பெருகார்வத் தொடுஞ்சென்றார். | |
| 146 |
| 3299. (இ-ள்.) அங்கணரை...போய் - இறைவரை வணங்கித் துதித்துத் திருவருள் விடை பெற்றுத் தொழுது சென்று; மங்குலணி....வந்தெய்தி - மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில் வந்து சேர்ந்து; திங்கள்...பணிந்து - சந்திரன் வளர்தற்கிடமாகிய திருமுடியினை உடைய இறைவரது திருக் |