|
  |  |  | 
  |  | யும் அதன் காரணமாயும் உள்ள உரைகள்; சத்தப் பிரபஞ்சம் என்பர்; பொருள் - உரையால்   நுதலப்படும் பொருட் பிரபஞ்சம்; "உரையின் வரையும் பொருளினளவும் இருவகைப் பட்ட எல்லை" (பட்டினத்து   அடிகளார் - கோயி னான்மணிமாலை); இருள் அறுத்தலாவது இவை மயக்கங்களை உணர்த்தாது   உண்மைஞான முணர்த்தும்படி காட்டுதல்; வெண்ணெய்நல்லூரில்...ஆனது கொண்டநற்பதம் -   நம்பிகளைத் தடுத்தாட் கொண்ட சரிதவரலாற்றின் அகச்சான்று; நற்பதம் - திருவடி;  பதம் - சொல் என்று கொண்டு, "இவன் என் அடியான்" என்று சொன்ன நல்ல திருவாக்குடையவர்   என்றலுமாம்;- (7) மறவன் - வேடன்; பன்றிப்பின் சென்ற - அருச்சுனன்   பொருட்டு வேடனாகிப் பன்றியைத் துரத்தி ஓடிய வரலாறு; நால்வர் - சனகாதி முனிவர்கள்;  அறவன் - அறமுரைத்தவன்; அறம் உரைத்தவனை என்று விகுதி பிரித்துக் கூட்டுக.  அமரர் - சேனைக்கு நாயகன் - முருகப்பெருமான்; தேவசேனாபதி; நான் செய்த குற்றங்கள்   பொறுக்கும் - "துரிசுகள்" என மேற்பாட்டிற் கூறுவதும், "யான் செய்யுந் துரிசுகளுக் குடனாகி"   (தேவா) என்பதும் காண்க;- (8) உடம்பு - இடம் - உடம்பில் ஒரு இடம் என்றும், இடப்பாகம்   என்றும் சிலேடை நயம்பட உரைக்க நின்றது; வேதன் - வேதங்களைச் சொன்னவன், வேதங்களாற்   சொல்லப்பட்டவன் என்றும், வேதிப்பவன்என்றும் உரைக்க நின்றது; வேதித்தல் - வினைகெடுத்து   உயிரைத் தன் மயமாக்குதல்; அடியேற் கெளிவந்த தூதன் - பரவையார் ஊடல் தீர்க்கத்   தூது சென்ற வரலாறு; இது பின்னர் நிகழ்வது; துரிசுகள் - குற்றங்கள்; இப்பதிகம் பின்னர்   அருளப்பட்டதாமென்று கொள்ள நின்ற ஆதரவுகள் இவை;- (9) நாமம் - இராவணன் (அழுபவன்)   என்ற பெயர்;- (10) "மறந்து...நான்மற்று - நினைப்பதேது என்று பதிகக் கருத்தும்   குறிப்புமாம்; சிந்தை வல்லார்க்குப் பதிகத்தினைப் பயிலும் முறை; இறந்துபோக்கு   இறப்பு; வரவு - பிறவி; இன்ப வெள்ளம் - மீளா நெறியில் துய்க்கப்படும்   சிவானந்தம். | 
  |  | தலவிசேடம் :- திருநள்ளாறு - III - பக்கம் 407 பார்க்க. | 
  |  | திருக்கடவூர்த் திருமயானம் | 
  |  | திருச்சிற்றம்பலம் | பண் - பழம்பஞ்சுரம் | 
  |  |                       | மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
 திருமால் பிரம னிந்திரற்குந் தேவர் நாகர் தான வர்க்கும்
 பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
 |  | 
  |  | (1) | 
  |  |                       | மாட மல்கு கடவூரின் மறையோ ரேத்து மயானத்துப் பீடை தீர வடியாருக் கருளும் பெருமா னடிகள் சீர்
 நாடி நாவ லாரூர னம்பி சொன்ன நற்றமிழ்கள்
 பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
 |  | 
  |  | (10) | 
  |  | திருச்சிற்றம்பலம் | 
  |  | பதிகக் குறிப்பு :- அடியார்க்குப் பீடை தீர அருளுபவர் திருக்கடவூர் மயானத்துப் பெரிய   பெருமானடிகளே. (பதிகம் - 10 பார்க்க.) |