160திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  யும் அதன் காரணமாயும் உள்ள உரைகள்; சத்தப் பிரபஞ்சம் என்பர்; பொருள் - உரையால் நுதலப்படும் பொருட் பிரபஞ்சம்; "உரையின் வரையும் பொருளினளவும் இருவகைப் பட்ட எல்லை" (பட்டினத்து அடிகளார் - கோயி னான்மணிமாலை); இருள் அறுத்தலாவது இவை மயக்கங்களை உணர்த்தாது உண்மைஞான முணர்த்தும்படி காட்டுதல்; வெண்ணெய்நல்லூரில்...ஆனது கொண்டநற்பதம் - நம்பிகளைத் தடுத்தாட் கொண்ட சரிதவரலாற்றின் அகச்சான்று; நற்பதம் - திருவடி; பதம் - சொல் என்று கொண்டு, "இவன் என் அடியான்" என்று சொன்ன நல்ல திருவாக்குடையவர் என்றலுமாம்;- (7) மறவன் - வேடன்; பன்றிப்பின் சென்ற - அருச்சுனன் பொருட்டு வேடனாகிப் பன்றியைத் துரத்தி ஓடிய வரலாறு; நால்வர் - சனகாதி முனிவர்கள்; அறவன் - அறமுரைத்தவன்; அறம் உரைத்தவனை என்று விகுதி பிரித்துக் கூட்டுக. அமரர் - சேனைக்கு நாயகன் - முருகப்பெருமான்; தேவசேனாபதி; நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் - "துரிசுகள்" என மேற்பாட்டிற் கூறுவதும், "யான் செய்யுந் துரிசுகளுக் குடனாகி" (தேவா) என்பதும் காண்க;- (8) உடம்பு - இடம் - உடம்பில் ஒரு இடம் என்றும், இடப்பாகம் என்றும் சிலேடை நயம்பட உரைக்க நின்றது; வேதன் - வேதங்களைச் சொன்னவன், வேதங்களாற் சொல்லப்பட்டவன் என்றும், வேதிப்பவன்என்றும் உரைக்க நின்றது; வேதித்தல் - வினைகெடுத்து உயிரைத் தன் மயமாக்குதல்; அடியேற் கெளிவந்த தூதன் - பரவையார் ஊடல் தீர்க்கத் தூது சென்ற வரலாறு; இது பின்னர் நிகழ்வது; துரிசுகள் - குற்றங்கள்; இப்பதிகம் பின்னர் அருளப்பட்டதாமென்று கொள்ள நின்ற ஆதரவுகள் இவை;- (9) நாமம் - இராவணன் (அழுபவன்) என்ற பெயர்;- (10) "மறந்து...நான்மற்று - நினைப்பதேது என்று பதிகக் கருத்தும் குறிப்புமாம்; சிந்தை வல்லார்க்குப் பதிகத்தினைப் பயிலும் முறை; இறந்துபோக்கு இறப்பு; வரவு - பிறவி; இன்ப வெள்ளம் - மீளா நெறியில் துய்க்கப்படும் சிவானந்தம்.
  தலவிசேடம் :- திருநள்ளாறு - III - பக்கம் 407 பார்க்க.
  திருக்கடவூர்த் திருமயானம்
  திருச்சிற்றம்பலம்

பண் - பழம்பஞ்சுரம்

 
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரம னிந்திரற்குந் தேவர் நாகர் தான வர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
 

(1)

 
மாட மல்கு கடவூரின் மறையோ ரேத்து மயானத்துப்
பீடை தீர வடியாருக் கருளும் பெருமா னடிகள் சீர்
நாடி நாவ லாரூர னம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- அடியார்க்குப் பீடை தீர அருளுபவர் திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே. (பதிகம் - 10 பார்க்க.)