[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்163

  பதிகம் "எனக்கினி" - ஓதி - எனக்கினி என்று தொடங்கும் பதிகம் பாடியருளி; முதற் குறிப்பு.
  போய் - அத்திருப்பதியினை அகன்று மேற் சென்று;
  சங்கநிரையோடு...கொண்டிறைஞ்சும் - சங்கநிரை - வாத்தியமாக; இது வழிபாட்டு முறையில் வரும் ஒரு உபசார வகை; தூபம், தீபம், பூ இவை இன்றியமையாத வேறு வகை; இன்றியமையாத உபகரணங்களின் வகையாம். ஆதலின் முன்னதனை ஓடு உருபு தந்து வேறு பிரித்துக் கூறினார்.
  துமித்தூபம் - அலைநீர்த் திவலைகள் தூபப் புகையாகவும்; மணித்தீபம் - நவ - மணிகள் தீபங்களாகவும், நித்திலப்பூ - முத்துக்கள் வெண் மலர்களாகவும், திரை இவற்றை ஏந்தும் கைகளாகவும், ஓதம் - வழிபடும் அன்பராகவும் உருவகப் படுத்தினார்; இஃதே கதேசவுருவகம். சிவமயமாகிய தெய்வக்கண் கொண்டு காண்பார்க்கே இவ்வுருவக நிலை காணப்படும்; 1905 - 1907 முதலியவை பார்க்க. ஓதம் - பூசைக்குரிய நீரும் குறித்தது. "வம்பு லாமலர் நீரால்வழிபட்டு....இறைஞ்சலின்" (57) என்று காவிரிக்குச் சொல்லியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. தற்குறிப்பேற்ற அணியும் உருவகமும் விரவி வந்தது.
  ஓதம் தூப தீபம் பூக்கொண்டிறைஞ்சும் - திருச்சாய்க்காடு - இப்பதி கடற்கரையில் உள்ள நிலையும் உணர்த்தப்பட்டது.
 

147

  திருவலம்புரம்
  திருச்சிற்றம்பலம்

பண் - காந்தாரம்

 
எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்றமர்க் கினியவ னெழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
 

(1)

 
வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை
அங்குலத் தருந்தமி ழூரன்வன் றொண்டன்சொற்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.
 

(11)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- "எழுமையும் எனக்கினியவன் றன திடம்வலம்புரமே" என்ற பதிக மகுடம் பார்க்க.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இனி எனக்குத் தினைத்தனைப் புகலிடம் - இதுவரை எனக்குப் பற்றுக்கோடாகிய புகலிடம் காணாதிருந்த நான் ஒரு சிறிது பற்றுக்கோடு உள்ளதென்று; தினைத்தனை - தினையின் அளவு; "தினைத்தனையுள்ளது" (திருவா) தனை - அளவு; பனைக்கனிப் பழம் - பனையின் கனிந்த பழம்; பரவை - கடல்; எழுமை - எழுவகைப் பிறப்பு; மனக்கு - உயிருக்கு; மனம் - உயிர்; "மனமணி யிலிங்கமாக" (தேவா) வலம்புரமேயிடம் என்க; இடம் வலம்புரம் - சொல்லணி; பனை - நெய்தற்கரு;- (2) வளைந்த - பயன்படுத்தப் படாது வளைந்த மட்டில் அமைந்து புரம் எரிதர; அரவுரியிரந்தவன் - பாம்பும் யானை உரியும் அணிந்து பிச்சை ஏற்பவன்? (3) நெருப்புமிழ் - தீப்போன்ற மூச்சுக்காற்று; தீவிடம் என்றலுமாம்; கூறணி கொடுமழு - துண்டப்படுத்தும் வளைந்த வடிவுடைய மழுவாயுதம்; அழல்வளர் -