[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்175

  நிலை; மால்விடையான் - காத்தற்றொழில் குறித்தது; நீற்றுத் தீயுரு - ஊழித்தீ; நீற்று - நீற்றுகின்ற தீ; தொழுமவன் - மார்க்கண்டர்; போக்குவான் வந்த கூற்றை என்று கூட்டுக வந்த - சொல்லெச்சம்; போக்குவான் - போக்கும் பொருட்டு; கூற்றை உயிர் நீக்கிடத் தாளால் தீங்கு செய் என்று கூட்டு; கழல் - வெற்றிக் குறிப்பு;-(7) குழகன் - அழகன்; "குழகன் கோலக்கா" (பிள். தேவா - 3);- (8) திருஞான சம்பந்த நாயனாருக்கு இப்பதியிற் றிருப்பொற்றாளம் அளித்த சரிதம் போற்றப்பட்டது. ஆசிரியர் (3308) எடுத்துக்காட்டி யருளினர்; சரித ஆதரவு. ஆளும் பூதங்கள் - சிவபெருமானால் ஆளப்படும் எனப் பிறவினைப் பொருள் கொள்க; "குழுக்கொள் பூதப்படையான்" (பிள். தேவா. கோலக். 4); இறைவராணைப்படி உலகை ஆளும் என்றலுமாம்;- (9) இரங்கியவென்றி - ஆற்றல் அழித்ததற்கு மேலாய், இரக்கங் கொண்டதே பெருவெற்றி என்பது குறிப்பு. பரக்கும்....அரியானை - பாரளிக்கும் அரசர் தமது உலகபோக உயர்வு தோன்றச் செயல் செய்கின்றமையால் அவர்கள் வந்து பணிதற்கரியவன் என்றார்; உலகபோகம் நிலையழிந்தபோதேஇறைவர்பாற் பணிவு வரும் என்பது; சிரக்கண்....தீர்த்த - சிரம் கண் வாய் செவி மூக்கு என்ற அவயவங்களைக் கொண்ட உடம்பினைக் கொடுத்து, அதனுள்ளே வாழும்உயிருடன் அறியவாராதபடி தாமும் பிணைந்து நின்று, தீவினைகளைப் பயன் தூய்ப்பித்துத் தீர்க்கும்; தக்க யாகத்தில் தேவர்கள்பால் செய் வீரங்கள் என்றலுமாம்;- (10) கோடரம் - கோடர் - சிகரம்; (குவடு?) அம் - சாரியை; கோடரம்பயில் - சிகரமாக முடித்துக் கட்டிய; மெய்ம்மானப் பாடர் - உண்மையும் பெருமையும் கொண்ட பாட்டுக்களைப் பாடுபவர்களாகி; பாட்டர் - என்பது பாடர் என நின்றது. பாடு - பெருமையெனக் கொண்டு பெருமையையுடையோர் என்றலுமாம். இப்பொருளில் மானப்பாடு - இருபெயரொட்டு; அம்குடி அடியவர் - அழகிய குடிமைக் கண் அடியினை அடைந்தவர்; அடியே குடியாகஅடிந்தவர்; அம் - அழகிய; நாடிரங்கி...நெறியால் - உலகம் உய்ய; இரங்கி - அன்பினாற் குழைந்து; காடு அரங்கென - சுடுகாடே ஆடரங்காக; நடநவிலுதல் - கூத்தாடுதல். நவிலுதல் - மரபு வழக்கு; பதி - நிலையான இருப்பிடம்; பதி - பதிந்த என்றதும் குறிப்பு; அது நடமுடையான்பாற் சாருநிலை.
  தலவிசேடம் :- திருக்கோலக்கா - காவிரி வடகரை 15வது பதி; IV - பக்கம் 132 பார்க்க. (பாட்டு 2002-ன் கீழ்).
3309
மூவாத முழுமுதலார் முதற்கோலக் காவகன்று
தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார்,
 

155

3310
ண்ணீரின் வேட்கையுட னுறுபசியான் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறுங் கொண்டுவழிச் சார்கின்றார்.
 

156

3311
வேனிலுறு வெயில்வெம்மை தணிப்பதற்கு விரைகுளிர்மென்
பானன்மலர்த் தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே