| வழிச்சார்கின்றார் - வழி - நம்பிகள் எழுந்தருளி வரும் வழியில்; சார்கின்றாராகி - முற்றெச்சம். சார்கின்றார் - வேடங்கொண்டிருந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. "தன்கடன் அடியேனையுந் தாங்குதல், என்கடன் பணிசெய்து கிடப்பதே" என்று ஆண்டானுக்கும் அடிமைக்கும் முறையே கடமைகள் வகுத்த அரசுகள் திருவாக்கும், ஆண்டவன் கடமையை முன்வைத்த வைப்பு முறையும்கருதுக. |
| கண்நுதலார் - சார்கின்றார் - வேதியராய் - வரவு பார்த்து இருந்தார் என்று மேற்பாட்டுடன் கூட்டி அமைத்துக்கொள்க. | | காதல் வர - என்று பாடங் கொள்வாருமுண்டு. | | 156 |
| 3311. (வி-ரை.) வேனிலுறு வெயில் வெம்மை தணிப்பதற்கு - வேனிற் காலமாதலின் வெயிலில் நடந்துவந்த வெப்பத்தினையும், இங்குத் தங்கிப் பொதிசோறுண்டு இளைப்பாறுதற்குரிய நேரத்தில் மூளும் வெப்பத்தினையும் தணிக்க. |
| தடம் - தடாகம்; மலர்வாவி; தடம் போலும் பந்தர் - குளிர்ச்சிதரும் தொழில் பற்றிய உவமம்; ஒருபால் - நம்பிகள் வரும் வழியில் ஒரு பக்கம்; வரும் வழியில் அவர் உட்புகும்படி அமைத்தார் என்பது; அமைத்து - எண்ணமாத்திரையில் உளதாகக் கண்டு. |
| ஆன மறைவேதியராய் - ஆன - விதி முறைப்படி அமைவதான; மறைவேதியர் - மறை என்பது தொழில் முதலிய பண்பினைப் புலப்படுக்க என்றும், வேதியர் - என்பது சாதியினையும் உணர்த்தலிற் கூறியது கூறலன்மையுணர்க; மறை - உண்மை நிலையினை மறைக்கும் என்றலுமாம்; இப்பொருளில் மறை ஆன என்று கூட்டி உரைத்துக் கொள்க; ஆன - மேற்கொண்ட. |
| அருள் வேடம் கொண்டு - கருணை புலப்படக் கொள்ளும் திருவேடத்தினை மேற்கொண்டு; இவ்வேடம் ஏனையோர் வேடம்போல மாயாகாரிய உருவமன்று; கருணையே திருமேனியாகக் காட்டி என்பது; "குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும்...நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே" (சித்தி 1. 95) என்பது ஞானநூலின் முடிபு. |
| பார்த்து இருந்தார் - என்று கூட்டுக. இறைவர் செயலை முன்னும், வன்றொண்டர் தமை என்று தொண்டர் செயலைப் பின்னும் வைத்து வினைமுற்றினையும் முன்வைத்த வைப்புமுறை குறிக்கற்பாலது. "அவனரு ளாலே அவன்றாள் வணங்கி" (திருவா); "ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே" (தேவா) என்பன முதலிய திருவாக்குக்களா லறியப்படுமாறு இறைசெயல்...உயிரின் செய லிரண்டனுள் இறைவரருளும் செயலே முன்னிகழ்வதாம் என்பது உண்மை; "குழகர் வழி பார்த்திருப்ப" "....தம்பிரான் தோழர் புகுந்து இருந்தார்" என மேல்வரும் பாட்டிற்கூறும் முறையும் காண்க. |
| வன்றொண்டர் - வலிமையாய்ப் பேசினும் விடாது தாமே வலிந்து தொண்டாக - ஆளாகக் கொண்டமையால், அவர் வருந்தாமைக் காத்தல் தமது கடமையாயிற்று என்ற குறிப்புப் பெற இப்பெயராற் கூறினார். "வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்" (நம்பி - திருவெண்ணெய் நல்லூரும் திருநாவலூரும் - 2) |
| வன்றொண்டர் தமைப் பார்த்து - "தம்மை யடைந்தார் வினைதீர்ப்ப தன்றோ தலையா யவர்தங் கடனா வதுதான்" (அரசு) என்ற இறைவர் கடமையும்காண்க. |
| 157 |
3312 | குருகாவூ ரமர்ந்தருளுங் குழகர்வழி பார்த்திருப்பத் திருவாரூர்த் தம்பிரான் றோழர்திருத் தொண்டருடன் | |