180திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3315
ண்ணிறந்த பரிசனங்க ளெல்லாரு மினிதருந்தப்
பண்ணியபின் னம்மருங்குப் பசித்தணைந்தார் களுமருந்த
உண்ணிறைந்த வாரமுதா யொருகாலு முலவாதே
புண்ணியனார் தாமளித்த பொதிசோறு பொலிந்ததால்.
 

161

  3313. (இ-ள்.) ஆலநிழல்...எதிர் நோக்கி - வடவாலமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த இறைவர் முன் சொன்னவாறு இருந்த நம்பிகளை எதிர் நோக்கி, "சாலமிக...தீரும்" என - நீர் மிகஅதிகமாய்ப் பசித்தீர்; என்னிடம் உள்ள இந்தப் பொதிசோறு தருகின்றேன்; இனியும் காலம் தாழ்க்காமல் இதனை ஏற்றுக் கொண்டு இங்கு இனிமையாய் உண்டு பொருந்தும்படி நல்ல குளிர்ந்த தண்ணீரினைக் குடித்து இளைப்பை தீர்வீராக" என்று சொல்ல,
 

159

  3314. (இ-ள்.) வன்றொண்டர்...இசைந்தருளி - வன்றொண்டர் அதனைக்கேட்டு "மறைவேதியராகிய இவர் தருகின்ற இந்தப் பொதிசோற்றினைக் கைக்கொள்ள இசையாது இன்று மறுப்பது நமக்குத்தகாது" என்று கருதி இசைந்தருளிச் செய்து; பொன்தயங்கு...வாங்கி - பொன் விளங்கும் நூலணி மார்பினையுடைய இறைவர் தருகின்ற பொதிசோற்றினை வாங்கிக்கொண்டு; சென்ற.........செய்தருளி - உடன்சென்ற திருத்தொண்டர்களுடனே திருவமுது செய்தருளி,
 

160

  3315. (இ-ள்.) எண்ணிறந்த...பண்ணியபின் - அளவில்லாத பரிசனங்கள் எல்லாரும் இனிதாக உண்ணும்படி செய்த பின்பு; அம்மருங்கு...அருந்த - அந்தப் பக்கத்துப்பசித்து வந்தணைந்தவர்களும் உண்ண; உண்ணிறைந்த...பொலிந்தது - உள்ளே நிறைந்த இனியஅமுதம் போல ஒரு சிறிதும் எவ்வாற்றானும் குறைவில்லாதபடி புண்ணிய மறைவேதியர் தாம் கருணையுடன் தந்த பொதிசோறு விளங்கிற்று; (ஆல் - அசை).
  இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3313. (வி-ரை.) ஆலு நிழற் கீழ் இருந்தார் - மறையவராகிய சிவபெருமான்; வினைப்பெயர்; அங்கு ஏனையோர் பந்தரின்கீழ் இருந்தார். இவர் ஆலநிழற்கீழ் இருந்தார் என்றதொரு தொனியும் காண்க.
  அவர் தம்மை - "சிவாயநம" எனப்பேசித் தம்பால் வந்திருந்த நம்பிகளை; அவர் - முன்னறிசுட்டு.
  சால மிகப் பசித்தீர் - சால மிக - மிகவும் அதிகமாக; ஒருபொருட் பன்மொழி மிகுதி குறித்தது. பசியினை, முகவாட்டம் - மேனியிளைப்பு - முதலிய புறத்தே தோற்றும் மெய்ப்பாடுகளாலன்றி உள்ளே நின்றபடி அறிந்தார் என்பதுமுன்னர்க் கருத்தறிந்து (3310) என்றதனால் அறியப்பட்டது.
  இப்பொதிசோறு - தம்முன் இருந்த பொதி சோற்றினைக் காட்டி இப்பொதி என்றார்; தருகின்றேன் - தருதல் ஒப்பவனது உரை; நான் அநாதிசைவன்; நீர் நம்மருளால் அதிகரித்து வழிவழிவரும் ஆதிசைவர்; இவ்வொப்புமையால் நான்தரும் சோறு கொள்ளத்தகும் என்பது குறிப்பு; மறையவர் சொல்லியவாறேமேல் நம்பிகளும் "மறை முனிவர் தரும் பொதிசோறு" (3314) என்பதும் காண்க.
  காலம் இனித் தாழாதே - இனியும் தாழ்த்தலால் பசியும்அதனால்வரும் வருத்தமும் மிகும் என்று பரிவுடன் கூறிய கருணைமொழி.