[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்183

  அங்கு அருளாற் பள்ளி அமர்ந்து - அருளால் - அருள்வயப்பட்டு; அருள் வயத்தாலன்றி அது துயிலுதற் கான இடமும் காலமுமல்ல என்பது குறிப்பு. "அருளாலோ?" (3202) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அங்கு - வரும் வழியிடைக் கண்ட அப்பந்தரிடையே; பள்ளி அமர்ந்து - துயின்று; நம்பிகள் என்றஎழுவாய் தொக்குநின்றது. அருகணைந்தார்களும் - உம்மை இறந்ததுதழுவிய எச்சவும்மை.
  சடைக்கரந்தார்....தாம்கரந்தார் - கரந்தார் - முன்னையது வினைப்பெயர்; பின்னையது வினைமுற்று; சொற்பின் வருநிலை.
 

162

3317
சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி யுணர்ந்தவரைக் காணாமை
"இத்தனையா மாற்ற மறிந்திலே" னெனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றடைந்தார்.
 

163

  (இ-ள்.) சித்தநிலை...பள்ளியுணர்ந்து - மனநிலையின் ஒருசிறிதும் திரிதல் இல்லாத திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் அவ்வாற்றினிலே துயிலுணர்ந்து. அவரைக் காணாமை - அந்த மறைவேதியரைக் காணாமையால்; "இத்தனையாம்....எடுத்து" இத்தனை யாமாற்றம் அறிந்திலேன்" என்று தொடங்கி; மெய்த்தகைய....சென்றடைந்தார் - சத்தாந் தன்மையுடைய திருப்பதிகத்தினைப் பாடியருளியவாறே திருக்குருகாவூரினைச் சென்றடைந்தார்.
  (வி-ரை.) சித்தநிலை திரியாத - துயிலும்போதும் சித்தம் திரியாது அறிதுயில் கொண்டு சிவயோக நிலையில் சிவனை மறவாநிலையில் உள்ள; திரியாதவராயினும் இறைவர் காட்டினாலன்றி அறியுமாறில்லை என்பது குறிப்பு.
  அத்தகுதியினிற்பள்ளி உணர்ந்து - அந்த நிலையில் நின்றவாறே துயிலுணர்ந்து -
  காணாமை - காணாதபடியால்; அவரை - மறைவேதியராய்க் காணநின்று பொதிசோறும் நீரும் அளித்த அவரை; முன்னறிசுட்டு.
  "இத்தனையா மாற்ற மறிந்திலேன்" என இப்பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; மாற்றம் - மாறுதல்; எடுத்து - தொடங்கி.
  மெய்த்தகைய - மெய்விளங்கும் தன்மையுடைய; சென்று - அவ்விடத்தினின்றும் திருக்குருகாவூருக்குச் சென்று.
  திருக்குருகாவூர் வெள்ளடை
  திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

 
இத்தனையா மாற்ற மறிந்திலே னெம்பெருமான்
பித்தரே யென்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
 

(1)

 
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கோண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
 

(2)

 
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக வுண்பலிக் குழல்வானே