| கண்ணார்ந்த - கையார - "கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்" (அம்மை. அற். அந்.); "கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்" (திருவிசைப்பா) |
| பண்ணார்ந்த திருப்பதிகம் பாடியே - இப்பதிகம் கிடைத்திலது! |
| உள்நாடும் பெருங்காதலுடையவர் - உள் நாடுதல் - சிவயோக நிலையில் இறைவரை உள்ளத்தில் கண்டு கூடிச் சிவானந்த நுகர்ச்சியில் திளைக்கும் பேரார்வமுடையவர் நம்பிகள்; "பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" (327) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; "தேடுவன் றேடுவன் றிண்ணெனப் பற்றிச் செறிதர, ஆடுவ னாடுவ னாமாத் தூரெம் மடிகளைக், கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்போடே" "ஓர்ந்தன னோர்ந்தன னுள்ளத்துள்ளேநின்ற வொண்பொருள்" "தேடுவன் றேடுவன் செம்மலர்ப் பாதங்கணாடொறும், நாடுவ னாடுவ னாபிக்கு மேலேயோர் நால்விரல்....மகிழ்ந்துளேயாடுவ னாடுவன்" (திருவாமாத்தூர்) என்பனவாதி நம்பிகள் திருவாக்குக்கள் காண்க; "தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர், சென்னியிலுஞ் சிந்தையிலு மலர்வித்து" (328) முதலியவையும் பார்க்க. |
| பெருங் காதலுடையவர் - இது நம்பிகளது இயல்பு குறித்தது. |
| நண் ஆர்வத் திருத்தொண்டர் - நண் - நம்பிகளுடன்கூட இறைவர்பாற் பொதிசோறுண்டு இறைவர் கரந்தமை யறிந்து கூடவே வந்து பொருந்திய; ஆர்வம் - இறைவரது அந்தஅருளிப்பாட்டில் ஈடுபட்டதனால் அன்புமிக் உடன் நண்ணிய. |
| நயந்து - விரும்பி; இனிது - இன்பம் பொருந்தி. |
| 165 |
3320 | அந்நாளிற் றம்பெருமா னருள்கூடப் பணிந்தகன்று மின்னார்செஞ் சடைமுடியார் விரும்புமிடம் பலவணங்கிக், கன்னாடு மெயில்புடைசூழ் கழிப்பாலை தொழுதேத்தி, தென்னாவ லூர்மன்னர் திருத்தில்லை வந்தடைந்தார். | |
| 166 |
| (இ-ள்.) அந்நாளில்...அகன்று - அந்நாளிலே தமது பெருமானது திருவருள்விடை பெற்றுப் பணிந்து அங்கு நின்றும் நீங்கிப் போய்; மின்னார்....வணங்கி - ஒளிவிளங்கும் சிவந்த சடையினையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் வணங்கிக்கொண்டு; கல்நாடும்...ஏத்தி - கல்லினாலியன்ற அழகிய மதில் பக்கத்திற் சூழ்கின்ற திருக்கழிப்பாலையினைத் தொழுது துதித்து; தென்நாவலூர்....அடைந்தார் - தென்நாவலூரில் அவதரித்த தலைவராகிய நம்பிகள் திருத்தில்லை நகரின்கண் வந்து அடைந்தனர். |
| (வி-ரை.) அருள்கூட - திருவருள் பொருந்த விடைபெற்று; அருள் - கூடும் படி பணிந்து என்று கூட்டி உரைத்தலுமாம். |
| இடம்பல வணங்கி - இவை (தென்) திருமுல்லைவாயில், திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப் பெருமணம் முதலாயின என்பது கருதப்படும். இவற்றிற்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! இவற்றை வணங்கிக் கொள்ளிடத் திருநதி கடந்து நம்பிகள் வடக்கு நோக்கிச் சென்றருள்கின்றார். |
| கல்நாடும் எயில் - கல் எயில் - நாடும் எயில் - என்று தனித்தனிக் கூட்டுக; கல்எயில் - கல்லாலியன்ற மதில். நாடும் - நாடத்தக்க; அழகிய. |
| கழிப்பாலை - திருக்கழிப்பாலையினை; கன்னாடு மெயில் புடைசூழ் கழிப்பாலை - இத்திருக்கோயில் முன்னர்ப் பெருந் திருக்கோயிலாகக் கொள்ளிட நதியின் வட |