192திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  3326. (இ-ள்.) தண்டகமாந் திருநாட்டில்...போய் - திருத்தொண்டை நன்னாட்டிலே ஒப்பற்ற இடபத்தையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும், அங்கங்கும் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு அழைத்துக்கொண்டு உள்ளே செல்லத், தொழுதபடியே சென்று; தூயநதி....கடந்தே - தூய நீரினையுடைய ஆறுகளும், வண்டுகள் சந்திக்கும் பூக்களையுடைய முல்லைப்புறவு நிலங்களும், மலைகளும் மருத நிலங்களும் ஆகிய பலவற்றையும் கடந்து சென்றே; எண்டிசையோர்...எய்தினார் - எண்டிசையோர் - எட்டுத்திசைகளினுமுள்ள மக்களும் துதித்துப் பாராட்டும் திருக்கழுக் குன்றத்தினை அடைந்தருளினர்.
 

172

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
  3325. (வி-ரை.) நலம் பெருகும் - நன்மைகள் பெருகுதற்குக் காரணமாகிய பெருகும் - பெருக்கும் - பெருகச்செய்யும் எனப் பிறவினையாகக் கொள்வதுமாம்.
  நாடிய அன்பு - நாடி வந்தடைந்த அன்பு.
  குலம் பெருகும் திருத்தொண்டர் குழாம் - குலம் இனமாவது ஈண்டு அவ்வவர் செய்யும் சரியையாதி தொண்டுகளின் வகை குறித்தது. குழாம் - எல்லாம்கூடிய தொகுதி; குலம் - உலகியற் குலமரபு குறித்ததாகக்கொண்டு பல குலத்தவரும் என்ற குறிப்புப்பட உரைத்தலுமாம்; "நாடவர் நாடறி கின்றகுலமிலராகக் குலம்துண்டாக" (தேவா); "தேவர் பெருமா னெழுச்சி...யாவ ரென்னா துடன்சேவித் தெல்லாக் குலத்தி லுள்ளோரு, மேவ வன்பர் தாமுமுடன் சேவித்து" (1887); "எழுச்சி சேவித் துடனண்ண, வெங்கு மெல்லா ரும்போத விழிவு தொடக்கிற் றெனையென்று" (1889) "ஆத லாலே குளித்தடுத்த தூய்மை செய்தே யகம் புகுந்து, வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும்" (1890) என்ற வரலாற்றின் கருத்துக்களை ஏற்ற பெற்றி ஈண்டு வைத்துக்காண்க. குலம் - பெருமை என்றலுமாம்.
  சலம் பெருகும்....சலம் - கங்கையாறு; பெருகுதலாவது பெருகிப் புகுந்து, சிறு பனி போலாகச் செறிந்து, பின் உலகிற் கேற்கப் பெருகி வீழ்தல்; "சலமுகத்தா லவன்சடையிற் பாயுமது" (திருவா - சாழல்?).
  பொலம்புரி நூல்மணி மார்பர் - பொலம் - அழகு; மணி - நவமணி மாலைகள்; "மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க" (165); "சுடர்மணிக் கலன்கள் சாத்தி" (330); "மெய்யினிற் றுவளு நூலும்" (331) என்றபடி திருமணக்கோலத்துடனே சரிப்பவர் நம்பிகள்.
  போவார் தொழுது - கடந்தே - எய்தினார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
  3326. (வி-ரை.) தண்டகமாந் திருநாடு - தொண்டை நாடு; (2858 பார்க்க.)
  தனிவிடையார் - தனி - ஒப்பற்ற; ஒன்று என்றலுமாம். "ஊர்வதோர் விடையொன் றுடையானை" "நரைவெள்ளே றொன்றுடை யானை" (தேவா).
  மகிழ் விடங்கள் தொழுது - இவை திருப்புறவார் பனங்காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின என்பது கருதப்படும். இவற்றுள் முன்னையவிரண்டும் நடுநாட்டுத் தலங்கள்; திருநாவலூரினின்றும் திருக்கழுக்குன்றம் செல்லும் வழியிடையில் உள்ளன.
  நதி - புறவு - மலை - வளமருதம் - பல - நதியும், புறவும், மலையும், மருதமும் ஆகிய பலவற்றையும் என்று எண்ணும்மை விரிக்க; நதி - பெண்ணையாறு, வராகநதி பாலாறு முதலியன: புறவு - இடையே பரந்துகாணும் சிறுகாடுகள்; மலை - திண்டிவனம், செஞ்சிமலை, அச்சிறுபாக்கம்.