204திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
ஓதக் கண்டே னுன்னை மறவே னுமையாள்கணவா வெனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூ ராலக் கோயி லம்மானே.
 

(9)

 
அன்ன மன்னும் வயல்சூழ் கச்சூ ராலக் கோயி லம்மானை
யுன்ன முன்னு மனத்தா ரூர னாரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயனா வலர்கோன் செஞ்சொ னாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூன் மாலை வல்லா ரவரெந் தலைமேற் பயில்வாரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- முன்னர் (3336) ஆசிரியர் காட்டி யருளியவாறு. இறைவர் தம்பாற் செய்த பெருங் கருணையிற் றிளைத்து மகிழ்ந்து வணங்கியது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண்டாடல் முயல்வானே - ஓரி - குள்ளநரி. நண் பகற்பொழுது பாலைக்குரியது; "காலவேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப், பாலையுஞ் சொலாவன" (1092). இங்கு நண்பகற் பொழுதின்கண் இறைவர் போந்து திருவருட்செய்கை செய்கின்றாராதலின் அந்நிகழ்ச்சிக்குரிய எரிகாடு - ஓரி - பேய் (6) முதலியவை பற்றிக் கூறுகின்ற தமிழ்மணமும், இறைவரையேபற்றிக் கூறுகின்ற சிவமணமும் கண்டுகொள்க. புலவன் - செஞ்சொல்" "தமிழ்நூல் மாலை" (10) புதுவீ - புதிய பூ; முயலுதல் - ஈண்டுச் செய்தல் என்னும் பொருளில் வந்தது; கதுவாய் - விரிந்தகன்ற வாய்; அடியார் கவலாரே - ஏகாரம் வினா; கவல்வார் என உடன்பாடு குறித்தது; இரக்கச் சுவை; உருகாரே (2); (6); அடியாரிருக்க ஐயங்கொள்வதழகிதே (9); இப்பதிகம் இச்சரிதப் பகுதிக்கு மிக்க அகச்சான்றாகிய ஆதரவு தருவது; "அதுவே யாமா றிதுவோ?" பெருங்கருணை யதுவாம் இது (3336) என்று ஆசிரியர் இதன் பொருளை விரித்துக் காட்டி யருளினர்; மேற்பாட்டிலு மிவ்வாறே; அது - கருணை; இது - காட்டிச் செய்த செயல்; கச்சூர் - ஊர்ப் பெயர்; ஆலக்கோயில் - கேயிலின் பெயர்; 3-ம் பாட்டுப் பார்க்க;- (2) கச்சேர் அரவு - கச்சாகிய அழகிய பாம்பு; கழலும் சிலம்பும் கலிக்க - "உருநாதச் சிலம்பணி சேவடி" (3335); உச்சம் போதால் - இறைவர் போந்து மனைதோறும் சோறிரந்த நேரம்; ஊரூர் - மனைதோறும்; உருகாரே - மனமுருகி வருந்தாரோ; இச்சை - இவ்வாறு செய்யலாகாத செயலை அருள் பற்றிச் செய்வதற்குரிய உமது இச்சாசத்தி; ஏழேழ் பிறப்பு - ஏழுலகத்தும் வரும் ஏழ்வகைப் பிறப்பு; எழுகின்ற எழுவகை என்றலுமாம்; எழுதல் - பிறத்தல். வடபால் - கோயில் ஊரின் வடக்கிருப்பது. "வடபாலை"- (3) சால - மிகுதியாக; அவை...துரந்தேன் - திருக்கோயில்களின் வழிபாட்டினால் வரும் பயன் கூறப்பட்டது; மால் - மயக்கம்; ஆணவ மறைப்பு; வினை - கன்மமலம்; வாசனா மலமும் மூலகன்மமும் உள்ளிட்டுக் கூறியவாறு; கோலக் கோயில்....ஆலக்கோயில் - இக்கோயிலின் அழகும் சிறப்பும் எடுத்துப் போற்றியனுபவித்தவாறு; கல்லால் - இத்தல மரம் ஆல்; அதனால் இப்பெயர் பெற்ற தென்பர். ஆல் நிழற்கீழ் அறங்களுரைத்த - தலம் பற்றிய இக்குறிப்புப்படக் கூறியருளியது;- (4) சடையும்...ஒளியானே - இறைவரைப் போற்றியது; கடையும்...கலந்தெங்கும் நகரச் சிறப்பினையும், புடையும்...சழனி - நாட்டு வளத்தினையும் போற்றியபடி; மேல் 5-9-10- பார்க்க. திருமாமகள் புல்கியடையும் - இவ்வளங்களை இந்நாட்டுக்கும் நகருக்குத் தருவதற்கன்றி, அவ்வாறு தந்து தழுவித் தான் பயன் பெறுதற்குத் திருமகள் வந்தடைகின்ற என்பதாம்; கழனி - வயல்; பழனம் -