| வணங்குமுன் அடியார்கள் வணங்க, அதனால் நம்பிகளின் வணக்கம் எதிர்வணக்கமாயிற்று என்ற குறிப்புடன் நின்றது; "வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்வன்றொண்ட ரஞ்சலி கூப்பி வந்து" (269) என்று திருவாரூரில்அடியவர் எதிர் கொண்டது பற்றிக் கூறியதும், "அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியா ரவர்களோ நம்பி யாரூரர் தாமோ, முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமை யாலெதிர் வணங்கி" (244) என்று திருத்தில்லையில் அடியார்கள் எதிர்கொண்ட முறைபற்றிக் கூறியதும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. |
| நீண்ட - என்பதனைக் கோபுரத்துடனும் கூட்டுக. |
| நிரை மாளிகை வீதி - வரிசையாக விளங்கும் மாளிகைகளையுடைய மாடவீதி; இறைவர் திருத்தேர் விழாவில் உலாப் போதும் திருவீதி. |
| வாழ்த்தினுடன் தூரியம் ஒலிப்ப - காதல் வாழ்த்தினுடன் ஒத்தியைந்து மங்கலப் பொருள் புலப்படுத்துதலால் தூரியம் ஒலிப்ப என்றார். |
| காதல் வாழ்த்து - நம்பிகள்பாற் கொண்ட காதலால் மக்கள் வீதியில் இருமருங்கும் வாழ்த்தும் ஒலி. |
| ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் - ஈண்டுதல் - திருக்கோயிலில் வந்து கூடுதல்; பெருகு - பலவாறும் வருதலால் பெருகும்; காஞ்சிபுரமும் திருவாரூரினைப் போலவே தொண்டர் கூட்டம் பெருகும் சிறப்புடையது என்ற குறிப்புமாம். |
| திருஏகாம்பரம் - திருஏகம்பர் எழுந்தருளியுள்ள திருக்கோயில்; திரு ஏகம்பம் எனப்படும்; இது வேறு; திரு ஏகாம்பரம் என்ற பெயர் வழக்கு வேறு; ஏகாரம்பரம் - ஆம்பரம் - மாமரம்; ஏகம் - ஒப்பற்றது - ஒன்று; ஏகம் ஆம்பரம் - ஏகாம்பரம் என மருவி வழங்குவது. இத்திருக்கோயிலில் உள்ள அம்மை தவமிருந்த மாவடி என்னும் மாமரத்தினாற் போந்த பெயர்; ஏகம்பரம் - கம்பம் - இறைவர் எழுந்தருளிய இடம் - கோயில்; கம்பர் - கம்பன் - "கச்சி மாநகர்க் கம்ப மிருப்பதே" - "கம்பவாணர் என்பன முதலிய வழக்குக்கள் காண்க. |
| 186 |
3341 | ஆழி நெடுமா லயன்முதலா மமரர் நெருங்கு கோபுரமுன் பூழி யுறமண் மிசைமேனி பொருந்த வணங்கிப் புகுந்தருளிச் சூழு மணிமா ளிகைபலவுந் தொழுது வணங்கி வலங்கொண்டு வாழி மணிப்பொற் கோயிலினுள் வந்தா ரணுக்க வன்றொண்டர். | |
| 187 |
| (இ-ள்.) ஆழி....புகுந்தருளி - சக்கரத்தினையுடைய நெடிய விட்டுணு பிரமன் முதலாகிய தேவர்கள் நெருங்கியிருக்கும் திருக்கோபுரத்தின் முன்பு புழுதி படிய நிலத்தின்மேல் தமது திருமேனி பொருந்தும்படி வணங்கி உள்ளே புகுந்தருளி; சூழும்...வலங்கொண்டு - சூழ்ந்துள்ள அழகிய திருமாளிகைகள் பலவற்றையும் தொழுது வணங்கிக்கொண்டு சுற்றி வலமாக வந்து; வாழி....வன்றொண்டர் - திருவணுக்கன் றொண்டராகிய வன்றொண்டர் வாழ்வுடைய மணிப்பொற் கோயிலாகிய திருவேகம்பர் திருமாளிகையினுள் வந்தருளினர். |
| (வி-ரை.) ஆழி....அமரர் நெருங்கு கோபுரம் - அமரர்கள் கோபுரவாய்தலில் உட்புகும் காலம் பார்த்துத் திருநந்திதேவ ராணையினை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர் என்பது. "வாய்தல் பற்றித், துன்றிநின்றார் தொல்லை வானவரீட்டம் பணியறிவான், வந்துநின் றாரய னுந்திரு மாலும்" (கச்சி - திருவிருத்தம்). |
| பூழி பொருந்த - கோபுரத்தின் முன்பு திருமேனி நிலம் பொருந்துதலாற் பூழி படிய வணங்கும் நிலை குறித்தது. |