|
  |  |  | 
  |  | யன்றி, அவை போந்தவாறும், வகையும், பிறவும் அறியமுடியாதபடி உள்ளத்தெழும் பெருமித உணர்ச்சி.   "அற்புத மறியேனே" (திருவா). மேற்பாட்டுப் பார்க்க. | 
  |  | 25 | 
  | 3180 |                       | அவ்விரவு புலர்காலை யாரூரில் வாழ்வார்கண் "டெவ்வுலகில் விளைந்தனநென் மலையிவை"யென் றதிசயித்து
 "நவ்விமதர்த் திருநோக்கி னங்கைபுகழ்ப் பரவையார்க்
 கிவ்வுலகு வாழவரு நம்பியளித் தன"வென்பார்,
 |  | 
  |  | 26 | 
| 3181 |                       | நீக்கரிய நெற்குன்று தனைநோக்கி நெறிபலவும் போக்கரிதா யிடக்கண்டு மீண்டுந்தம் மில்புகுவார்
 "பாக்கியத்தின் றிருவடிவாம் பரவையார்க் கிந்நெல்லும்
 போக்குமிட மரிதாகு"மெனப்பலவும் புகல்கின்றார்;
 |  | 
  |  | 27 | 
| 3182 |                       | வன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு         மகிழ்சிறப்பார் "இன்றுங்கண் மனையெல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம்
 பொன்றங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்க"வென
 வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.
 |  | 
  |  | 28 | 
  |  | 3180. (இ-ள்) அவ்விரவு புலர்காலை - பூதங்கள் அவ்வாறு ஆரூர் அடங்க நென்மலையாக்கிய   அந்த இரவு விடியும் காலையில்; ஆரூரில்...அதிசயித்து - திருவாரூரில் வாழ்வார்கள் பார்த்து   "இந்நெல் மலைகள் எவ்வுலகில் விளைந்தன?" என்று அதிசயப்பட்டு; நவ்வி...என்பார் -   "மானின் கண்போன்ற மதர்த்த திருநோக்கினை உடைய நங்கையாராகிய புகழினை உடைய பரவையாருக்கு   இவ்வுலகம் வாழும் பொருட்டு வந்தருளிய நம்பிகள் அளித்தன இவை" என்று பற்பலவும்   சொல்வார்களாகி; | 
  |  | 26 | 
  |  | 3181. (இ-ள்) நீக்கரிய...நோக்கி - விலக்குதற்கு அரிதாகிய நெற்குன்றினை நோக்கி;   நெறிபலவும்...புகுவார் - வழிகள் பலவும் போதற்கு அரியன வாயிடலான் அதனைக் கண்டு மீளவும்   தமது வீடுகளிற் புகுவார்களாய்; பாக்கியத்தின்....புகல்கின்றார் - "பாக்கியத்தின் திருவுருவேயாகிய   பரவையாருக்கும் இந்த நெல்லினைக் கொண்டு சேர்க்கும் இடம் அரிதாகும்" என்று இவ்வாறு பலவும்   சொல்வார்களாக; | 
  |  | 27 | 
  |  | 3182. (இ-ள்) மிக்கபுகழ்ப் பரவையார் - மிகுந்த புகழினையுடைய பரவையார்; வன்றொண்டர்....சிறப்பார்   - தமக்கு வன்றொண்டராகிய நம்பிகள் அளித்த நெல்லினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி பொருந்தியவராய்;   "இன்று...அறைவித்தார் - "இன்று உங்கள் மனைகளின் எல்லைக்குட்படும் நெல் எல்லாம் அவ்வவரும்   தத்தம் செல்வமிக்க மாளிகைகளினுட் புகும்படி எடுத்துப் பெய்து கொள்க" என்று வெற்றி முரசம்   அறையும்படி செய்வித்தார். | 
  |  | 28 | 
  |  | இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன. | 
  |  | 3180. (வி-ரை) அவ்விரவு - இறைவரது ஏவலினால் பூதங்கள் நெல்லினைக் குண்டையூரினின்றும்   திருவாரூரின்கண் கொண்டுய்த்த அந்த இரவு என அகரம் முன்னறிசுட்டு. "அவ்விரவு" (3178).   புலர்காலை - இரவு நீங்கி விடியும் நேரத்தில். | 
  |  | எவ்வுலகின்...அதிசயித்து - இது திருவாரூர் வாழ்வார்கள் நெல்லினைக் கண்டபோது முதலில்   எழுந்த அவர்களது மன நிகழ்ச்சி; கண்டு அதிசயித்து - கண்டதனால் அதிசயமடைந்து; "அதிசயம்   கண்டாமே" (திருவா). |