| சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி - கச்சித் திருக்கோயிலினுள் புறச்சுற்றிலே திருக்கச்சி மயானம் முதலாகிய பல திருமாளிகைகள் உள்ளனவாதலின் அவற்றைத் தனித்தனி வணங்கிக்கொண்டு திருக்கோயிலை அவ்வாறு வலமாக வந்தருளினர் என்பதாம். |
| மணிப்பொற் கோயில் - திருவேகம்பர் திருமாளிகை. |
| வாழி - வாழ்வு தருவது என்ற பொருளில் நின்றது; அசையெனினுமாம். |
| அணுக்க வன்றொண்டர் - முன்னைய நிலையிற் றிருக்கயிலையினும், இந்நிலையில் வழியடிமை செய்யும் வேதிர் குலத்துட் டோன்றிய நிலையினும் அணுக்கன் றொழில் செய்யும் உரிமையுடையவர் என்பதாம். |
| வந்தார் - பயனிலை முன்வந்தது விரைவு குறித்தது. |
| 187 |
3342 | கைகள் கூப்பி முன்னணைவார் கம்பை யாறு பெருகிவர ஐயர் தமக்கு மிகவஞ்சி யாரத் தழுவிக் கொண்டிருந்த மையு லாவுங் கருநெடுங்கண் மலையா ளென்றும் வழிபடுபூஞ் செய்ய கமலச் சேவடிக்கீழ்த் திருந்து காத லுடன்வீழ்ந்தார். | |
| 188 |
| (இ-ள்.) கைகள்...அணைவார் - கைகளை சிரமேற் கூப்பிக் கொண்டு திருமுன்பு அணைவாராகிய நம்பிகள்; கம்பையாறு....சேவடிக்கீழ் - கம்பை நதி பெருக்கெடுத்து வரக்கண்டு இறைவரது திருமேனிக்காக மிகவும் பயந்து தமது திருஉடம்பு நிறையத் தழுவிக்கொண்டிருந்த மை பொருந்திய கரிய நீண்ட கண்களையுடைய மலைமகளாகிய அம்மையார் நித்தமாக வழிபடுகின்ற செம்மையுடைய தாமரை போலும் சேவடிகளின் கீழே; திருந்து....வீழ்ந்தார் - திருந்தும் பெருவிருப்புடனே வீழ்ந்தனர். |
| (வி-ரை.) முன் - திருமுன்பு; திருஏகம்பர் சந்நதியின் முன்பு. |
| அணைவார் வீழ்ந்தார் - என்று கூட்டி முடிக்க; அணைவார் - அணைவாராகிய நம்பிகள்; வினைப்பெயர். |
| பெருகிவர ஐயர் தமக்கு மிக அஞ்சி - பெருகி வருதலால் இறைவர் திருமேனிக்கு வெள்ளத்தாற் பழுது நேரும் என அஞ்சி; ஐயர் தமக்கு - ஐயரது திருமேனிக்காக. |
| ஆரத் தழுவிக்கொண்டிருந்த - ஆர - நிறைய; முழுதும். |
| தழுவிக்கொள்ளுதல் - வெள்ளத்தால் அலைக்கப்படாதபடி காக்கத் தாமே தழுவிக் காவலாக மறைத்துக் கொள்ளுதல். |
| என்றும் வழிபாடு - சேவடி - உன் பூசை எப்போதும் நம்பால் முடிவதில்லை என்று பெருமான் அருளியபடி நித்தமாக நிகழும் பூசை; இவ்வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் (1134 - 1145) காண்க. |
| 188 |
3343 | வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி யெழுந்து மெய்யன்பால் வாழ்ந்த சிந்தை யுடன்பாடி மாறா விருப்பிற் புறம்போந்து சூழ்ந்த தொண்ட ருடன்மருவு நாளிற் றொல்லைக் கச்சிநகர்த் தாழ்ந்த சடையா ராலயங்கள் பலவுஞ் சார்ந்து வணங்குவார். | |
| 189 |
3344 | சீரார் காஞ்சி மன்னுதிருக் காமக் கோட்டஞ் சென்றிறைஞ்சி, நீரார் சடையா ரமர்ந்தருளு நீடு திருமேற் றளிமேவி | |