[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்219

  வதத்துடன் மயங்கா திருத்தற் பொருட்டு இது கச்சி யனேகதங்காவதம் என்று கச்சியுடன் சேர்த்துப் பெயர் வழங்கப்படும்.
3348
செல்வ மல்கு திருப்பனங்காட் டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்ல லறுக்கு மருமருந்தை வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்க நின்று "விடையின்மேல் வருவா" ரெனும்வண்டமிழ்ப்பதிகம்
நல்ல விசையி னுடன்பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்,
 

194

3349
ன்னு திருமாற் பேறணைந்து வணங்கிப் பரவித் திருவல்லந்
தன்னுளெய்தி யிறைஞ்சிப்போய்ச் சாரு மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னன் முடியா ரிடம்பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகிறோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
 

195

  3348. (இ-ள்.) செல்வ மல்கு...வணங்கி - செல்வம் நிறைந்த திருப்பனங்காட்டூரிலே எழுந்தருளிய செம்பொன் போன்ற ஒளியுடைய செழுஞ்சுடரைப், பிறவித் துன்பத்தினை அறுக்கும் அரிய மருந்துபோல்பவரைப் பணிந்து; அன்பு....நின்று - அன்பு மேலீட்டினாலே பொழியும் கண்ணீர் பெருக நின்று; விடையின் மேல்...பாடி - "விடையின்மேல் வருவானை" என்று தொடங்கும் வன்மையுடைய பதிகத்தினை நல்ல இசை பொருந்தப் பாடி; போந்து புறம்பு நண்ணுவார் - புறம்பு போந்து சேர்வாராகி,
 

194

  3349. (இ-ள்.) மன்னு...போய் - நிலைபெற்ற திருமாற் பேறு என்னும் பதியினை அணைந்து வணங்கிச் சென்று, திருவல்லத்தினைச் சேர்ந்து வணங்கிப் போய்; சாரும் மேல்பால்...வணங்கி - சார்கின்ற மேற்குப் பக்கத்தில் சடைக்கற்றை பின்னி விளங்கும் முடியினையுடைய இறைவர் எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் விரும்பி வணங்கி; பெருந்தொண்டர்...சேர்ந்தார் - பெருந்தொண்டராகிய நம்பிகள் உச்சியில் மேகங்கள் தோய்கின்ற பெரிய முடிகளையுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தருளினர்.
 

195

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன
  3348. (வி-ரை.) செல்வம் - அருட் செல்வம்; திருப்பனங்காட்டூர் - திருவன்பார்த்தான் பனங்காட்டூர்.
  செம்பொற் செழுஞ்சுடர் - செம்பொன் போன்ற செழிய சுடர் போன்றவர்.
  அல்லல் - துன்பங்களுள் எல்லாம் மிக்க கொடுமையுடைய பிறவித் துன்பம்; மருந்து - மருந்து போன்றாரை மருந்தென்ற துபசாரம்.
  அன்பு பொழி - அன்பு காரணமாக வருகின்ற; "அன்பிற்கு முண்டோ வடைக்குந் தாழ்" (குறள்).
  "விடையின்மேல் வருவான்" இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
  வண் தமிழ்ப் பதிகம் - வண்மையாவது சிறந்த உறுதிப் பொருள் பயத்தல். சாராதார் சார்வென்னே - உணராதார் உணர்வென்னே - அறியாதார் அறிவென்னே - என்பன முதலிய உறுதிப் பொருள்களை உணர்த்துதல் காண்க.
  நல்ல இசை - பதிகப் பண்ணாகிய இனிய சீகாமரப் பண்.
  செல்வச் செழுஞ்சுடர் - பிறவும் நண்ணுவார் - என்பனவும் பாடங்கள்.
 

194