[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்233

  கூடும் காலங்கள் - வழிபாட்டுக் குரிய பூசைக்காலங்கள்.
  காலங்களிலணைந்து கும்பிட்டு - பூசைக்காலங்களில் எல்லாம் திருக்கோயிலில் அணைந்து வழிபட்டு.
  இனிது இருந்தார் - மன ஒருமைப்பாட்டினில் மகிழ்ந்து அமர்ந்தருளினர்.
  பரவசமாய் - என்பதும் பாடம்.
 

205

  I. திருவொற்றியூர்
  திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி

 
பாட்டும் பாடிப் பரவித் திரிவார், ஈட்டும் வினைக டீர்ப்பார் கோயில்,
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே, ஓட்டுந் திரைவா யொற்றி யூரே.
 

(1)

 
ஒற்றி யூரு மரவும் பிறையும், பற்றி யூரும் பவளச் சடையார்
ஒற்றி யூர்மே லூர னுரைத்த, கற்றுப் பாடக் கழியும் வினையே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- வினைகள் தீர்ப்பார் கோயில் திருவொற்றியூரே. பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் (1); தன்னை முன்னம் நினைக்கத் தருவான் (4); வினையை வீட்ட (7) என்பன நம்பிகளது முன்னை நிலைச் சரிதக் குறிப்பும், அதனைத் தொடர்ந்து இனிஇங்கு நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் குறிப்பும் பட நிற்கின்றமை காண்க.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாட்டும் பாடிப் பரவித் திரிவார் - பாட்டும் - சொலவல கீதம் பாடுதலன்றிப் பாட்டும் பாடி; பரவி - பாட்டினாலும் உரையினாலும் துதித்து; திரிவார் - அதுவன்றி வேறு தொழில் செய்யாது அதுவே தொழிலாய்த் தலங்கள் தோறும் திரிபவர்; இது நம்பிகள் சரிதக் குறிப்புப்பட நிற்றல் காண்க; ஈட்டும் வினைகள் - முன் ஈட்டியவையும் இனி ஈட்டப்படுவனவும் ஆகிய வினைகள்; இதுவும் நம்பிகள் சரிதக் குறிப்புப்பட நிற்றல் கண்டுகொள்க; கயிலையில் பெற்ற இறைவராணையின் வழிவந்த இப்பிறவியின் எஞ்சிய பகுதி இங்கு அனுபவித்துத் தீரநின்றதும் காண்க. இக்கருத்தினை மேல் (3383-ல்) நம்பிகள் திருவாக்கில் வைத்து ஆசிரியர் விரித்தலும் காண்க. காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஓட்டும் திரை - கலம் - மரக்கலம்; திமில் - சிறு படகு; திரை - இவற்றைச் கரையிற் செலுத்தும் அலைகள்; காட்டும் - உலக அண்டம்; கோள வடிவினதாதலால் கடல் வளைவுக்குள் நின்று மேலேறி வரவர முதலில் உச்சிமட்டும் தோன்றிப், பின்னர்ச் சிறிது சிறிதாக முழுமையும் தோன்றும் நிலைகுறித்தது. "விடுங்கலங்க ணெடுங்கடலி னின்று தோன்றும்" (ஒற்றி - தாண் 4); ஓட்டும் - செலுத்தும்; கரைக்கே திரை ஓட்டும் - பிறவிக்கடலுட்பட்டு அலையும் உயிர்களைக் கரைசேர்த்தும் குறிப்பு; திரையின்மேல் வைத்துக் கூறப்பட்டது. "மனமெனுந் தோணிபற்றி....கடலோடும்போது - உனையுனு முணர்வை நல்கா யொற்றியூருடைய கோவே" என்ற திருநேரிசை ஈண்டுக் கருதத்தக்கது;- (2) பந்தும்....பாவை சிந்தை கவர்வார் - அகப்பொருட்டுறை; தாய்கூற்று; பந்தும் கிளியும் பயிலுதல் - இளமங்கைப் பருவம் குறித்தது; "பூவை தந் தாள்பொன்னம் பந்து தந்தா ளென்னைப் புல்லிக் கொண்டு, பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளென்றன் பைந்தொடியே" (திருக்கோவை - 200); "கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயரும்" (தேவா); "மாதராள், பொற்கூட்டிற் பூவையை வாங்கியதனோடுஞ், சொற்கோட்டிக் கொண்டிருந்த வேல்வைக்கண்-" (ஞானவுலா); பாவை - பாவைபோன்ற பெண்; பாவை சிந்தை கவர்வார் - எந்தம்