| |
| இம்பருட னும்பர்களும் - தேவர்கள் திருவாரூருக்கு வந்து தேவாசிரியனில் முறையிருந்தும் தியாகேசரை வணங்கியும் நலம்பெறத் திரண்டுள்ளாராதலின் இவ்வுலகத்தாரோடு அவர்களும் கூடிக் கண்டு அதிசயித்தனர். 3186 பார்க்க. |
| இம்பர் - இவ்வுலகம். உம்பர் - அவ்வுலகம். அஃதாவது மேல் - விண் - உலகம். |
| ஏத்தினார் - ஏத்தியிருந்தருளினர். |
| 30 |
3185 | குலவுபுகழ்க் கோட்புலியார் குறையிரந்து தம்பதிக்கண் அலகில்புக ழாரூர ரெழுந்தருள வடிவணங்கி நிலவியவன் றொண்டரஃ திசைந்ததற்பின் னேர்ந்திறைஞ்சிப் பலர்புகழும் பண்பினார் மீண்டுந்தம் பதியணைந்தார். | |
| 31 |
| (இ-ள்) குலவுபுகழ்க் கோட்புலியார் - விளங்கும் புகழினையுடைய கோட்புலியார்; குறையிரந்து...அடி வணங்கி - தமது பதியினிடத்து அளவற்ற புகழினையுடைய நம்பியாரூரர் எழுந்தருள வேண்டுமென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் குறையிரந்து நின்று; நிலவிய...இறைஞ்சி - நிலைபெற்ற வன்றொண்டர் அதனை இசைந்த பின்னே மீண்டும் அவர் திருமுன்பு வணங்கி; பலர் புகழும்...அணைந்தார் - எல்லாரும் புகழத் தக்க பண்புடைய அக் கோட்புலியார் மீளவும் தமது திருப்பதியினுள் சென்று அணைந்தனர். |
| (வி-ரை) குறையிரத்தல் - தமது குறையாகிய விருப்பத்தைக் கூறி வேண்டுதல்; இக்குறையாவது தமது பதியில் நம்பி ஆரூரர் எழுந்தருளுதல். |
| குலவுபுகழ் என்றது அவரது அன்பின் மேன்மையும் சரித வரலாறும் குறிக்க எழுந்தது. அவர்தம் புராணம் பார்க்க. |
| அலகில்புகழாராதலின் எனக் கோட்புலியார் குறையிரந்து விண்ணப்பித்ததற்குக் காரணக் குறிப்புப்படக் கூறியவாறு. |
| அடி வணங்கிப், பின்....அவர் இசைந்தருள, இறைஞ்சி அணைந்தார் - எனக் கூட்டி முடிக்க. |
| பண்பினார் - கோட்புலியார்; இறைஞ்சிப்பின், அப்பண்பினார் - எனக் கூட்டுக. |
| தொண்டரது விசைந்ததற்பின் - நேர்ந்ததற்பின் -என்பனவும் பாடங்கள். |
| 31 |
| வேறு |
3186 | தேவ ரொதுங்கத் திருத்தொண்டர் மிடையுஞ்செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனியாளுங் கடவுட் பெருமான் கழல்வணங்கி நாவலூர ரருள்பெற்று நம்பர் பதிகள் பிறநண்ணிப் பாவை பாகர் தமைப்பணிந்து பாடும் விருப்பிற் சென்றணைவார், | |
| 32 |
3187 | மாலு மயனு முணர்வரியார் மகிழும் பதிகள் பலவணங்கி ஞால நிகழ்கோட் புலியார்தந் நாட்டி யத்தான் குடிநண்ண ஏலும் வகையா லலங்கரித்தங் கவருமெதிர் கொண்டினிதிறைஞ்சிக் கோல மணிமா ளிகையின்க ணார்வம் பெருகக் கொடுபுக்கார். | |
| 33 |
| 3186. (இ-ள்) தேவர்...அருள்பெற்று - தேவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி வழிவிட்டு நிற்கத் திருத் தொண்டர்கள் உட்சென்று நெருங்கி வழிபடும் செல்வ |