| னூடி விடும்" (குறள்). இப்பெயர் பெரும்பாலும் ஊர்பற்றியே வழங்கப்படும்; செங்குன்றூர்கிழார் - கோவூர்கிழார் - குண்டையூர்கிழார் முதலியவை காண்க; அவ்வூரில் முதன்மைபெற்று எல்லாராலும் விளக்கமாயறியப்படுதல் கருத்து. ஞாயிறு என்னுமூரின் முதன்மையடையோர் என்பதாம். |
| ஆதரவு தரு மகளாராகி - ஆதரவு - அன்பு - மேம்பாடு என்றலுமாம். தரும் - அவரால் ஆதரவு பெறும் மகளார் என்பதன்றி, அவருக்கு ஆதரவு - பெருமை - சிறப்பு - தரும் மகளாராயினார் என்பதாம். |
| பார் மேல் - கன்மபூமியாகிய நிலவுலகத்தில்; புவனியில். |
| அருளால் முன்னை அநிந்திதையார் - முன்னர்த் திருமலைச்சருக்கத்திற் போந்த முன்னை வரலாற்றின் றொடர்பு முற்றும் அறிவித்த கவிநயம் கண்டுகொள்க (33-37); இப்பாட்டால் ஊரும், மரபும், பெற்றோரும், முன்சரிதமும் கூறியவாறு. |
| 207 |
3362 | மலையான் மடந்தை மலர்ப்பாத மறவா வன்பின் வந்தநெறி தலையா முணர்வு வந்தணையத் தாமே யறிந்த சங்கிலியார் அலையார் வேற்கட் சிறுமகளி ராயத் தோடும் விளையாட்டு நிலையா யினவப் பருவங்க டோறு நிகழ நிரம்புவார், | |
| 208 |
3363 | சீர்கொண் மரபில் வருஞ்செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை பாரி லெவரு மதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார் வாரு மணிய வணியவாம் வளர்மென் முலைக ளிடைவருத்தச் சாரும் பதத்திற் றந்தையார் தங்கண் மனைவி யார்க்குரைப்பார். | |
| 209 |
3364 | "வடிவுங் குணமு நம்முடைய மகட்கு மண்ணு ளோர்க்கிசையும் படிவ மன்றி மேம்பட்ட பரிசாம் பான்மை யறிகிலோம்; கடிசேர் மணமு மினிநிகழுங் கால" மென்னக் கற்புவளர் கொடியே யனைய மனைவியா "ரேற்கு மாற்றாற் கொடு" மென்றார். | |
| 210 |
| 3362. (இ-ள்.) மலையான்....நெறி - மலையரசன் மகளாராகிய உமையம்மையாரது மலர் போன்ற பாதங்களை மறவாத அன்பு பூண்டுவந்த ஒழுக்கத்தின்; தலையாம்...அணைய - முன்னை யுணர்வு வந்து பொருந்த; தாமே அறிந்த சங்கிலியார் - அதனைத்தாமே இயல்பில் அறிந்தவாறே வந்தவதரித்துச் சங்கிலியார் என்னும் திருநாமம் பூண்ட அம்மையார்; அலையார்...நிகழ - அலைத்தற்றொழில் பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய சிறு மகளிர் கூட்டத்தோடும் விளையாட்டுக்களின் நிலைமைகள் அவ்வப் பருவங்கள் முறையே வந்து நிகழ; நிரம்புவார் - வயது நிரம்புவாராக, |
| 208 |
| 3363. (இ-ள்.) சீர்கொள்...அன்றி - (அவ்வாறு பருவ நிரம்புநாளில்) சிறப்புக்கொண்ட குல வொழுக்க நெறியில் வரும் செயல்களே யல்லாமல்; தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை விளங்கும் பண்புகளும் (விளங்க); பாரில்....பைந்தொடியார் - உலகில் எல்லாரும் அதிசயப்படும் பண்பிலே வளர்ந்து வருகின்ற பைந்தொடியாராகிய சங்கிலியம்மையார்; வாரும்....பதத்தில் - கச்சுமணியும்படி சமீபித்த பருவமுடைய வளர்கின்ற தனங்கள் இடையினை அலைக்கும் படி சார்கின்ற பருவத்தில்; தந்தையார்....உரைப்பார் - அவரது தந்தையார் தமது மனைவியாருக்கு எடுத்துச் சொல்லுவாராய், |
| 209 |