|
  |  | னூடி விடும்" (குறள்). இப்பெயர் பெரும்பாலும் ஊர்பற்றியே   வழங்கப்படும்; செங்குன்றூர்கிழார் - கோவூர்கிழார் - குண்டையூர்கிழார் முதலியவை காண்க;   அவ்வூரில் முதன்மைபெற்று எல்லாராலும் விளக்கமாயறியப்படுதல் கருத்து. ஞாயிறு என்னுமூரின் முதன்மையடையோர்   என்பதாம். | 
  |  | ஆதரவு தரு மகளாராகி - ஆதரவு - அன்பு - மேம்பாடு என்றலுமாம். தரும் - அவரால் ஆதரவு பெறும்   மகளார் என்பதன்றி, அவருக்கு ஆதரவு - பெருமை - சிறப்பு - தரும் மகளாராயினார் என்பதாம். | 
  |  | பார் மேல் - கன்மபூமியாகிய நிலவுலகத்தில்; புவனியில். | 
|  | அருளால் முன்னை அநிந்திதையார் - முன்னர்த் திருமலைச்சருக்கத்திற் போந்த முன்னை வரலாற்றின்   றொடர்பு முற்றும் அறிவித்த கவிநயம் கண்டுகொள்க (33-37); இப்பாட்டால் ஊரும், மரபும், பெற்றோரும்,   முன்சரிதமும் கூறியவாறு. | 
|  | 207 | 
  | 3362 |                       | மலையான் மடந்தை மலர்ப்பாத மறவா வன்பின் வந்தநெறி தலையா முணர்வு வந்தணையத் தாமே யறிந்த சங்கிலியார்
 அலையார் வேற்கட் சிறுமகளி ராயத் தோடும் விளையாட்டு
 நிலையா யினவப் பருவங்க டோறு நிகழ நிரம்புவார்,
 |  | 
  |  | 208 | 
  | 3363 |                       | சீர்கொண் மரபில் வருஞ்செயலே யன்றித்         தெய்வ நிகழ்தன்மை பாரி லெவரு மதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
 வாரு மணிய வணியவாம் வளர்மென் முலைக ளிடைவருத்தச்
 சாரும் பதத்திற் றந்தையார் தங்கண் மனைவி யார்க்குரைப்பார்.
 |  | 
  |  | 209 | 
| 3364 |                       | "வடிவுங் குணமு நம்முடைய மகட்கு மண்ணு         ளோர்க்கிசையும் படிவ மன்றி மேம்பட்ட பரிசாம் பான்மை யறிகிலோம்;
 கடிசேர் மணமு மினிநிகழுங் கால" மென்னக் கற்புவளர்
 கொடியே யனைய மனைவியா "ரேற்கு மாற்றாற் கொடு" மென்றார்.
 |  | 
  |  | 210 | 
  |  | 3362. (இ-ள்.) மலையான்....நெறி - மலையரசன் மகளாராகிய உமையம்மையாரது மலர்   போன்ற பாதங்களை மறவாத அன்பு பூண்டுவந்த ஒழுக்கத்தின்; தலையாம்...அணைய - முன்னை யுணர்வு   வந்து பொருந்த; தாமே அறிந்த சங்கிலியார் - அதனைத்தாமே இயல்பில் அறிந்தவாறே வந்தவதரித்துச்   சங்கிலியார் என்னும் திருநாமம் பூண்ட அம்மையார்; அலையார்...நிகழ - அலைத்தற்றொழில்   பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய சிறு மகளிர் கூட்டத்தோடும் விளையாட்டுக்களின் நிலைமைகள்   அவ்வப் பருவங்கள் முறையே வந்து நிகழ; நிரம்புவார் - வயது நிரம்புவாராக, | 
  |  | 208 | 
  |  | 3363. (இ-ள்.) சீர்கொள்...அன்றி - (அவ்வாறு பருவ நிரம்புநாளில்) சிறப்புக்கொண்ட   குல வொழுக்க நெறியில் வரும் செயல்களே யல்லாமல்; தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை   விளங்கும் பண்புகளும் (விளங்க); பாரில்....பைந்தொடியார் - உலகில் எல்லாரும் அதிசயப்படும்   பண்பிலே வளர்ந்து வருகின்ற பைந்தொடியாராகிய சங்கிலியம்மையார்; வாரும்....பதத்தில் -   கச்சுமணியும்படி சமீபித்த பருவமுடைய வளர்கின்ற தனங்கள் இடையினை அலைக்கும் படி சார்கின்ற   பருவத்தில்; தந்தையார்....உரைப்பார் - அவரது தந்தையார் தமது மனைவியாருக்கு எடுத்துச்   சொல்லுவாராய், | 
  |  | 209 |