242திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  ஒருவர்க் குரியேன் - இது இசையாது என்றதற்குக் காரணம் கூறியவாறு; முன்னமே உரியேனாய் விட்டமையால் இசையாது என்றபடி; ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம்.
  அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் - எனது உரிமை நாயகர் முன்னமே சிவபெருமானால் அருளிச் செய்யப் பட்டுள்ளார் என்றது செய்தார் என்ற இறந்த காலக் கூற்றின் குறிப்பு.
  இனிமேல்...செல்வன் - இனிமேல், அத்திருமணம் கூடும் வரையில் திருவொற்றியூரில் அணைந்து அருள்வழியே இருந்து அருள்வழியே அதனைப் பெறுவேன் என்பதாம். யான் - உரியேன் என்றும், (ஆதலின்), யான் செல்வேன் என்றும் இருவழியும் காரணப் பொருள்படக் கூட்டுக.
  என - என்று சொல்ல.
 

213

  3368. (வி-ரை.) மாற்றம் - சொல்; விடை; தாம் எண்ணிய நிலையினின்று மாறிய தன்மை என்ற குறிப்பும் காண்க; தமது சுற்றப்பாசத் தொடர்பாகிய தன்மையினின்று மாறும் பண்பு என்றதும் குறிப்பு. மேலும் மற்ற மாற்றம் என்பது காண்க.
  அயர்வும் பயமும் அதிசயமும் - "இது என் பரிசுக்கு இசையாது" என்று தொடர்பறக் கூறியமையால் அயர்வும்; "ஒருவர்க்குரியேன்" என்றமையால் அதனை யறியாது நாம் சொன்னவை சிவாபராத மாதலின் பயமும்; "இனித் திருவொற்றியூர் சேர்ந்து சிவனருளிற் செல்லேன்" என்றது கேட்க அதிசயமும் முறையே விளைந்தன.
  மற்ற மாற்றம் மறைத்தொழுக - உலகினர்க்கு இவை விளங்கலாகாமையின் உலகரறியாதபடி மறைத்து ஒழுகினர்; அம்மையார் விரும்பியவாறு திருவொற்றியூரில் அவரை வைத்துப் பிரிய மனம் ஒருப்படாமையானும் மறைத் தொழுகினர் என்க.
  பந்தம் நீடும்...ஒருவன் பந்தம் - சுற்றத் தொடர்பு மட்டும்; பந்தம் - பாசத் தொடர்பு என்ற குறிப்புமாம். நீடுதல் - பலவாற்றானும் நீண்டு செல்லுதல்; குலத்து நிகராம் - குலப்பெருமையளவில் ஒப்புடையவன்; முன்னர் "அருள் செய்தார் ஒருவர்" (3367) என்றதுடன் இதனை ஒப்புநோக்கி வேற்றுமை கண்டு கொள்க.
  பரிசறியான் - பரிசு - அம்மையாரின் பண்புகள். அவையாவன: "மரபில் வருஞ் செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை, பாரி - லெவரு மதிசயிக்கும் பண்பும்" (3363); குணமும் - மண்ணுளோர்க்கிசையும் படிவமன்றி மேற்பட்ட பரிசாம் பான்மையும் (3364); முன் (3364 - 3367) உரைத்த நிகழ்ச்சியும் முதலியவை. இவற்றுள், முன்கூறிய நிகழ்ச்சியினை உலகரறியாது மறைத்து ஒழுகினர் பெற்றோராதலின் அதனைப் பிறர் அறியாமை இயல்பேயெனினும், அதன் முன்னர்க்கூறிய பண்புகளும் பரிசும் உலகரறியக் கிடந்தமையால்இவனும் அறிந்து தன்தகைமையேலாமை தெரிந்து அதனிற் கருத்துச் செலுத்தாது ஒதுங்க வேண்டியவன் எண்ணாது கருமந் துணிந்தமையின் அறியான் என்ற இக்குறிப்புப்படக் கூறினார்; அம்மையார் பரிசேயன்றித் தன்பரிசுமறியான் என்பதும் குறிக்கப் பரிசு என்று பொதுமையிற் கூறினார்; அறியாது துணிந்த இச்செயல் தன் உயிருக்கே யன்றித், தன்னேவல் வழிச்சென்றோர் உயிர்க்கும் கேடாய் விளையத்தக்க பரிசும் அறியான் என்ற குறிப்புமாம்.