|
| அவர்....சென்றாள் - விடுத்தார் தம்மை விடுத்தானிடம் சென்று சேர்ந்து சொல்வதன்முன் அவன் அவருடனே இறந்து பட்டான். அவர்கள் அங்குச் சேர்வதில்லையாதலின் எய்துமுன் என்னாது எய்தாமுன் என்றார். |
| ஆங்கு - விடுத்தானிடம்; இவ்வாறன்றி எய்த உடனே இறந்தான் என விரைவுப் பொருளில் வந்தது; மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என்புழிப்போல - என்பர் ஆறுமுகத்தம்பிரானார். |
| தீது அங்கு இழைத்தான் போல் - அங்கு - சங்கிலியார் திறத்து; மிக்க தீதுபட ஒரு செயல் இழைத்தாரே மரண தண்டனைக்குள்ளாகுவர்; இங்கு அவன் மரணத்திற் குள்ளாயினமையால் தீதிழைத்ததன் பயனாக இறந்தான் என்னும்படி தோன்றிற்று என்பார் போல் என்றார்; இழைத்தான் போல் - அவன் செயல் அங்குச் சாராமையானும், தீமை என்று அறியாமையானும் போல் என்றார்; அறியாது உண்ணினும் நஞ்சு கொன்றே விடுமாதலின் தீமை இழைத்ததே போலப் பலன் தந்தது என்க. |
| செல்ல விடுத்தாருடன் சென்றான் - விடுத்தார் - விடுக்கப்பட்டார்; தன்னால் விடுக்கப்பட்ட அச்சிலருடன் தானும், இறந்தான்; சென்றான் - இங்கு இயமனூருக்குச் சென்றான் - இறந்தான் - என்ற பொருளில் வந்தது; மங்கல வழக்கு; எண்ணத்தகாததை எண்ணியதும், அதனை ஏவல் வழி உடன்பட்டுச் சொல்லியதும் ஒன்று போலவே குற்றங்களாம்; ஈண்டுச் சிவாபராதமும் கற்புநிலை பற்றிய அபராதமும் கூடி உயிர் நீக்கும் தண்டத்திற் குள்ளாக்கின; பேசத்தகா வார்த்தை, உய்ய வேண்டு நினைவுடையா ருரையார்" என மேற்கூறுதல் குறிக்க. |
| மாதரார் - சங்கிலியம்மையார். |
| உடன் சென்றார் - என்பதும் பாடம். |
| 215 |
3370 | "தைய லார்சங் கிலியார்தந் திறத்துப் பேசத் தகாவார்த்தை உய்ய வேண்டு நினைவுடையா ருரையா" ரென்றங் குலகறியச் செய்த விதிபோ லிதுநிகழச், சிறந்தார்க் குள்ள படிசெப்பி, நையு முள்ளத் துடனஞ்சி, நங்கை செயலே யுடன்படுவார். | |
| 216 |
3371 | "அணங்கே யாகு மிவள்செய்கை யறிந்தோர் பேச வஞ்சுவரால்; வணங்கு மீசர் திறமன்றி வார்த்தை யறியாள் மற்றொன்றுங்; குணங்க ளிவையா; மினியிவடான் குறித்தபடியேயொற்றிநகர்ப் பணங்கொ ளரவச் சடையார்தம் பாற்கொண் டணைவோ" மெனப்பகர்வார், | |
| 217 |
3372 | பண்ணார்மொழிச்சங் கிலியாரை நோக்கிப்பயந்தாரொடுங்கிளைஞர் "தெண்ணீர் முடியார் திருவொற்றி யூரிற் சேர்ந்து செல்கதியுங் கண்ணார் நுதலார் திருவருளா லாகக் கன்னி மாடத்துத் தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற் றங்கிப் புரிவீர் தவ" மென்று. | |
| 218 |
3373 | பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலே மற்றுச் செயலொன் றறியாது மங்கை யார்சங் கிலியார்தாஞ் சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து, துதைந்த செல்வத் தொடும், புரங்கள் செற்ற சிலையார் திருவொற்றி யூரிற் கொண்டு சென்றணைந்தார். | |
| 219 |