|
| 3376. (இ-ள்.) காதல்...அமர்கின்றார் - பேரன்புடன் இடைவிடாது நினைந்து தவம் செய்யும் கன்னியாராகிய சங்கிலியிம்மையார் அங்குக் கன்னிமாடத்தில் விரும்பித் தங்குவாராய்; பூதநாதர்....இறைஞ்சி - பூதநாதராகிய இறைவரது திருக்கேயிலில் வழிபாட்டுக்குரிய காலங்களிலெல்லாம் புக்கு வணங்கி; நீதி.....பணிசெய்ய - அமைத்த நீதி மரபு முறைமை வழுவாமல் தமக்கு நேர்ந்த திருப்பணியினைச் செய்யும் பொருட்டு; சீத...சென்றிருந்து - குளிர்ச்சியுடைய மலர்கள் நிறைந்த திருப்பூ மண்டபத்துள் சுற்றிலும் திரையாற் சூழப்பட்ட ஒருபக்கத்தில் சென்று சேர்ந்து |
| 222 |
| 3377. (இ-ள்) பண்டு...தலைநிற்ப - முன்னாளில் கயிலைத் திருமலையிற் செய்யும் திருப்பணியின் தன்மையே தொடர்ந்து மனத்துட் கொண்ட முன்னையுணர்ச்சி தம்முள் ஓங்கி நிற்க; குலவுமலர் மென் கொடியனையார் - விளக்கமுடைய மலர்கள் பூத்த கொடி போன்ற சங்கிலியார்; வண்டு...அமரும்நாள் - வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் திருமலர்களாலாகிய மெல்லிய மலர்களைக் காலங்களுக்கு ஏற்றபடி தேவதேவரது திருமுடியிலே சாத்துதற்கு அமைத்துக் கொடுத்து விரும்பி வீற்றிருக்கும் நாளிலே; |
| 223 |
| 3378. (இ-ள்) அந்தி...ஆரூரர் - அந்திபோலும் வண்ணமுடைய ஒருவராகிய இறைவரது திருவருளினாலே வந்த நம்பியாரூரர்; கந்தமாலை...ஆதலால் - மணமுடைய மாலையணிந்த சங்கிலியாரைக் காதல் மணத்தினாற்பொருந்த வந்த பருவம் இதுவாதலினால்; வகுத்த...விதியால் - இறைவர் வகுத்த தன்மையினின்று வழுவாத நியதியின்படி முந்தை விதியினாலே; வந்து...புகுந்தார் - ஒருநாள் தமது திருமாளிகையினின்றும் வந்து இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்தருளினர். |
| 224 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3376. (வி-ரை.) காதல் புரிந்து - காதலால் இடைவிடாது நினைந்து; புரிதல் - இடைவிடாது நினைத்தல்; விரும்புதல்; எப்போதும் சொல்லுதல் என்றலுமாம்; காதல் - பெருவிருப்பம்; அங்கு - கன்னிமாடத்தில்; சங்கிலியார் அங்கு அமருநாளில் செய்யும் செயல்கள் இரண்டுவகையின; அவை கன்னிமாடத்திலும் திருக்கோயிலிலும் செய்யப்படுவன; கன்னிமாடத்தில் செய்வது காதல் புரிந்து செய்யும் தவம்; இது சிவபூசை, தியானம், தோத்திரம் முதலாயின; கோயிலிற் செய்வது திருமாலைத்திருப்பணி; இவை இங்கு வேறுவேறாக வகுத்துக் காட்டப்படுதல் கண்டுகொள்க. |
| காலம் - வழிபாட்டுக்குரியனவாய்த் திருப்பள்ளியெழுச்சி முதல் திருப்பள்ளியறைக்காலம் வரையில் உள்ள காலங்கள்; காலந்தோறும் - புக்கு என்க; இக்காலங்களிலன்றி ஏனைக்காலங்களில் கன்னிமாடத்தில் அமர்ந்திருந்தனர் என்க. |
| நீதிமுறைமை - செய்ய - தமது மரபுக்கும் பருவத்துக்கும் தன்மை நிலைக்கு நியமித்த முறை தவறாதபடி தமக்குக் கூடிய பணியினைச் செய்யும் பொருட்டு; சிவபெருமான் பணிகளும் அவ்வவர் நீதிமுறைப்படி இயற்றல் வேண்டுமென்க;"மறந்துமய னினைவின்றி வருபிறப்பின் வழிவந்த, அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டி னெறிநின்றார்" (1052) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அவ்வாறே திருநாளைப்போவார்சென்ற அவ்வழியேநின்ற திருநீலகண்டர், கலியர், அதிபத்தர்முதலாகிய நாயன்மார்களும் செய்த திருப்பணி முறைகளின் தகுதிகளை |