|
|  | (இ-ள்.) அண்டர்...நம்பி - தேவதேவராகிய இறைவர் ஒரு வேதியராக வந்து நேரே ஆட்கொண்டருளிய   நம்பிகள்; அங்கணரை.....போந்து - சிவபெருமானை முன்னைய முறைமையினாலே வணங்கிப் பாடித் துதித்துப்   புறத்திற் போந்து; தொண்டு....செல்கின்றார் - பலவகையாலும் திருத்தொண்டுகள் செய்வார்களாகிய   அடியவர்களது திருத்தொழில்களைக் கண்டு வணங்கிச் செல்கின்றாராய்; புண்டரீகத்தடம்...புகுந்தார்   - தாமரைப் பொய்கைபோன்ற திருப்பூமண்ட பத்தினுள்ளே புகுந்தருளினர். | 
  |  | (வி-ரை.) அந்தணராய் ஆண்ட - கிழவேதியராக வந்து தடுத்தாட் கொண்டருளிய; தடுத்தாட்கொண்ட   புராணம் பார்க்க. | 
  |  | பண்டைமுறைமையாற் பணிதலாவது முன்னர்த் "திருப்பாதங் கூடுங்காலங்களி லணைந்து பரவிக்   கும்பிட்டு" (3359) என்றவாறு அம்முறைமைப் படியே வழிபட்டு வருதல்; பண்டை முறைமையால் -   முறை - ஊழ் - நியதி - எனக் கொண்டு சிவனருளிய முன்னை விதியினாலே என்றும், திருக்கயிலையிற்   றொடர்ந்த மரபினாலே என்றும் கூடிய முற்குறிப்புக்களும் காண்க. | 
  |  | முன்னர் "முந்தை விதியால்" (3378) என்றதும், "மேல் விதியால்" (3380)   என்பதும் காண்க; முன்கூறியது அந்த ஒரு நாள் கோயிலுள் வந்து புகுந்த செயலுக்கும், ஈண்டுக்கூறுவது   பணிந்து திருத்தொழில் கண்டு செல்கின்ற செயலுக்கும், மேற்கூறுதல் சங்கிலியாரைக்   காணலுறுதற்கும் ஆமாதலின் கூறியது கூறலன்மையும் உணர்க; அன்று நிகழ்ந்த அச்செயல்கள் ஒவ்வொன்றும்   முந்தை விதி செலுத்த நிகழ்ந்தன என்பதாம். | 
  |  | புறம் போந்து - இறைவரது திருமாளிகையின் புறத்தே சுற்றுமுள்ள புறத்திருமுற்றத்தினுள் சென்று. | 
  |  | தொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது - இறைவர்க்காகச் செய்யும் திருத்தொண்டின்   தொழில்களும் கண்டு வணங்கற்குரியன என்பது; இவைதிருநந்தனவனத் தொழில்கள்; திருமுற்றம்   விளக்குதல்; திருப்பரிவட்டம், பொற்புடைப்பணிகள், விளக்குக்கள், முதலியவற்றை விளக்குதல்,   திருவுழவாரமிடுதல், முதலாகவரும் சரியைத்திருத்தொழில்கள்; இவை வெவ்வேறாகப் புறத்திரு முற்றத்தில்   பல இடங்களில் நிகழ்வனவாகலின் தொழில்கள் என்று பன்மையாற் கூறியதுமன்றிக்,   கண்டு - தொழுது - என்று பிரித்துக்காட்டியருளிச், செல்கின்றார் என நிகழ்காலத்துத்   தொடர்ந்த வினைமுற்றெச்சமுந் தந்தோதினார். | 
  |  | புண்டரீகத்தடம் நிகர் திருப்பூமண்டபம் - என்க; பற்பல வகைப்பூக்களும் சேர்ந்திருப்பதாலும்,   எங்கும் நீருடன் படுத்துக் குளிர்ந்திருப்பதாலும், திருப்பூமண்டபம் தாமரைத்தடம் போன்ற தென்றார்,   வினையும் மெய்யும் பற்றியெழுந்த உவமம். ஞானத்திருவாகிய அம்மையார் இருக்குமிடம் என்றதும்   குறிப்பு. | 
  |  | திருப்பணிகள் - என்பதும் பாடம். | 
  |  | 225 | 
  |  | திருப்பூமண்டபமும்; சங்கிலியாரைக் காணுதலும் | 
  | 3380 |                       | அன்பு நாரா வஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க வலர்தொடுத்தே என்புள் ளுருகு மடியாரைத் தொழுது நீங்கி வேறிடத்து
 முன்பு போலத் திரைநீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
 மின்போன் மறையுஞ் சங்கிலியார் தம்மை விதியாற் கண்ணுற்றார்.
 |  | 
  |  | 226 |