|
|  | முறையே தமது ஆருயிர்த் தோழராகிய சிவன் பாற் பெறுவேன் என்று போனார் என்ற குறிப்புப்பட நிற்றலும்   காண்க. மேல் "நண்பா னினைந்து" (3388) என்பதும் கருதுக. | 
  |  | 230 | 
  | 3385 |                       | மலர்மே லயனு நெடுமாலும் வானு நிலனுங் கிளைத்தறியா நிலவு மலருந் திருமுடியு நீடுங் கழலு முடையாரை
 உலக மெல்லாந் தாமுடையா ராயு மொற்றி யூரமர்ந்த
 இலகு சோதிப் பரம்பொருளை யிறைஞ்சி முன்னின் றேத்துவார்,
 |  | 
  |  | 231 | 
  | 3386 |                       | "மங்கை யொருபான் மகிழ்ந்ததுவு மன்றி மணிநீண்         முடியின்கட் கங்கை தன்னைக் காத்தருளுங் காத லுடையீ! ரடியேனுக்
 கிங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் னுள்ளத் தொடைவிழ்த்த
 திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தந் தீரு"மென,
 |  | 
  |  | 232 | 
| 3387 |                       | அண்ண லார்முன் பலவுமவ ரறிய வுணர்த்திப்         புறம்பணைந்தே, "எண்ண மெல்லா முமக்கடிமை யாமா றெண்ணு மென்னெஞ்சிற்
 றிண்ண மெல்லாமுடைவித்தாள்; செய்வ தொன்று மறியேனியான்
 தண்ணிலாமின் னொளிர்பவளச்சடையீ! ரருளு"மெனத்தளர்வார்,
 |  | 
  |  | 233 | 
| 3388 |                       | மதிவாண்முடியார்மகிழ்கோயிற் புறத்தோர்         மருங்கு வந்திருப்பக், கதிரோன் மேலைக் கடல்காண மாலைக் கடலைக் கண்டயர்வார்,
 முதிரா முலையார் தம்மைமணம் புணர்க்க வேண்டி முளரிவளை
 நிதியா னண்பர் தமக்கருளு நண்பா னினைந்து நினைந்தழிய,
 |  | 
  |  | 234 | 
| 3389 |                       | உம்ப ருய்ய வுலகுய்ய வோல வேலை விட முண்ட தம்பி ரானார் வன்றொண்டர் தம்பா லெய்திச் "சங்கிலியை
 இம்ப ருலகி லியாவர்க்கு மெய்த வொண்ணா விருந்தவத்துக்
 கொம்பையுனக்குத்தருகின்றோங்; கொண்டகவலையொழி"கென்ன,
 |  | 
  |  | 235 | 
| 3390 |                       | "அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய வாண்டு         கொண்டருளி ஒன்று மறியா நாயேனுக் குறுதி யளித்தீ ருயிர்காக்க,
 இன்று மிவளை மணம்புணர்க்க வேன்று நின்றீ!" ரெனப்போற்றி
 மன்றன்மலர்ச்சேவடியிணைக்கீழ்வணங்கிமகிழ்ந்தார்வன்றொண்டர்.
 |  | 
  |  | 236 | 
  |  | 3385. (இ-ள்.) மலர்மேல்...உடையாரை - தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமதேவனும்   நெடிய விட்டுணுவும் முறையே ஆகாயத்தினும் நிலத்தின் கீழும் கிளைத்து அறியமாட்டாத, பிறைவளர்கின்ற   திருமுடியினையும் நீடிய கழலினையும் உடைய இறைவரை; உலகமெல்லாம்......ஏத்துவார் - உலகங்களை   யெல்லாம் தாம் உடையவராயிருந்தும் ஒற்றிஊரில் விரும்பி எழுந்தருளிய விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகிய   பரம்பொருளை வணங்கித் திருமுன்பு நின்று துதிப்பாராகி, | 
  |  | 231 | 
  |  | 3386. (இ-ள்.) மங்கை...உடையீர்! - மலை மங்கையாராகிய உமையம்மை யாரை ஒரு பாகத்தில்   மகிழ்ந்து வைத்ததுமல்லாமல் அழகிய நீண்ட திருமுடியினிடத்தே கங்கை யம்மையாரையும் மறைத்து வைத்தருளும்   பெரு விருப்ப முடையீரே!; இங்கு....சங்கிலியை - இங்கு உமக்குத் திருமாலையினைத் தொடுத்துக்  கட்டியும் |