[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்267

  ளும் வண்ணமு மாதி மாண்பும், கேட்பான் புகிலளவில்லை; கிளக்க வேண்டா" என்பது ஆணையாதலின்.
 

237

3392
தோற்றும் பொழுதிற் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற வன்பு பொங்கியெழுந் "தடியே னுய்ய வெழுந்தருளும்
பேற்றுக்கென்யான்செய்வ?" தெனப், பெரிய கருணைபொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரு நேர்நின் றருளிச் செய்கின்றார்,
 

238

3393
"சாருந் தவத்துச் சங்கிலிகேள்! சால வென்பா லன்புடையான்;
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யானாள உரியா; னுன்னை யெனையிரந்தான்;
வார்கொண் முலையாய்! நீயவனை மணத்தா லணைவாய்மகிழ்ந்" தென்றார்.
 

239

  3392. (இ-ள்.) தோற்றும்...எழுந்து - அவ்வாறு இறைவர் தமது கனாவிலே தோன்றக் கண்டபொழுது சங்கிலியார் தொழுது நிலமுறவிழுந்து பரவசராகி மிகவும் அன்பு வெள்ளமாகப் பொங்கி நிகழ எழுந்து; அடியேன்....என - அடியேன் உய்யும் பொருட்டுத் தேவரீர் எழுந்தருளி வரப்பெற்ற பெரும் பேற்றுக்கு யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன் என்று துதிக்க; பெரிய...அருளிச்செய்கின்றார் - பெரிய கருணையே மேலே பொழிந்தாற் போல விளங்கும் திருநீற்றுக் கோலத்தினை உடைய வேதியராகித் தோன்றிய இறைவரும் நேரே நின்று சொல்லியருள்கின்றாராகி;
 

238

  3398. (இ-ள்.) வெளிப்படை. "சார்கின்ற பெரிய தவத்தினையுடைய சங்கிலியே! கேட்பாயாக; என்னிடத்தில் மிகவும் அன்புடையவன்; மேருமலையினும் மேம்பட்ட தவத்தினை உடையவன்; திருவெண்ணெய் நல்லூரில் எல்லாரும் காண யான் ஆளாகக் கொள்ளும் உரிமைபெற்றவன்; உன்னை வேண்டி என்பால் இரந்தனன்; வாரணிந்த முலையுடையாய்! நீ அவனை மணஞ் செய்து மகிழ்ந்து அணைவாயாக" என்று அருளிச் செய்தனர்.
 

239

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3392. (வி-ரை.) தோற்றும்பொழுது....என - இந்நிகழ்ச்சிகளும் மேல் (3393 - 3396; 3405 - 3407;) வருவனவும் சங்கிலியார்பாற் கனாநிலையில் நிகழ்ந்தவை; மேல் "எய்தியபே ரதிசயத்தா லுணர்ந்து எழுந்து" (3407) என்பது காண்க.
  "அடியேனுய்ய எழுந்தருளும் பேற்றுக்கு என் யான் செய்வது?" என - இது சங்கிலியார் கனாவிற்கண்ட இறைவரை நோக்கிக் கூறியது; யான் என் செய்வது என்க. கைம்மாறு என்பது சொல்லெச்சம்; "எதிர் செய்குறை யென் கொல்?" (1338).
  கருணை பொழிந்தனைய நீற்றுக்கோல வேதியர் - இஃது இறைவர் காட்சிதந்த கோலம்; ஆளுடைய அரசுகளுக்குத் திருமறைக் காட்டிலும் (1541) திருக்கயிலையிலும் (1628), நம்பிகளுக்குத் திருவெண்ணெய் நல்லூரிலும், திருவாதவூரடிகளுக்குத் திருப்பெருந் துறையிலும் நனாவிற் காட்டிய திருக்கோலங்கள் இங்கு நினைவு கூர்தற் பாலன. இஃது அவருக்குக் கைவந்த பழங்கோலம் போலும்,