[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்273

  3399. (வி-ரை.) செய்ய நின்ற குறை - செய்யக் கடவதாய் எஞ்சிநின்ற செயல் - கடமை; செய்து நிறைவாக்க நிற்பதாதலின் குறை எனப்பட்டது.
  ஒன்றி உடனே நிகழ - ஒன்றுதல் - சேர்தல். உடனே நிகழ்தல் - பிரியாது உடனிருத்தல்.
  ஒன்றுதல் - அகமாகிய மனவொருமைப்பாடும், உடனிகழ்தல் புறமாகிய உடனுறைதலும் குறித்தலின் கூறியது கூறலன்மை யுணர்க; இது திருவொற்றியூரில் பிரியாது அமர்தல் குறித்தது; 3414 பார்க்க.
  அவள் முன்பு சென்று கிடைத்து இவ்விரவே செய்க - அவள் முன்பு - என்றது அவள் நேரில் கண்டும் கேட்டும் நிற்க என்றதாம்; சென்று கிடைத்து என்றது முற்பட்டுச் செல்ல வேண்டியதும் கிட்டுவதும் உன் செயலாக நிகழ்தல் வேண்டுமென்றதாம்; இவ்விரவே என்றதுசபதம் நிகழும் காலம் குறித்தது - "காலமது வாகவே" (3409) என்பது காண்க; மணம் புணர்தற்குச் - சபதம் செய்க என்றது மணம் புணர்தற்கு இன்றியமையாத முற்செயலாக என்றதாம்.
  நிகழ்வ தொரு - என்பதும் பாடம்.
 

245

3400
"என்செய்தா லிதுமுடியு மதுசெய்வ னியா;னதற்கு
மின்செய்த புரிசடையீ! ரருள்பெறுதல் வேண்டு"மென,
முன்செய்த முறுவலுடன் முதல்வரவர் முகநோக்கி
"யுன்செய்கை தனக்கினியென் வேண்டுவ?" தென் றுரைத்தருள,
 

246

3401
ம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்றொண்டர்
"நம்பரிவர் பிறபதியு நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக் கிதுவிலக்கா" மெனுங்குறிப்பாற்
றம்பெருமான் றிருமுன்பு தாம்வேண்டுங் குறையிரப்பார்.
 

247

3402
சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார்
"மங்கையவ டனைப்பிரியா வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தா லப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டு" மெனத்தாழ்ந்தார்.
 

248

  3400. (இ-ள்.) என் செய்தால்...யான் - எந்தச் செயலைச் செய்தால் இத்திருமணம் முற்றுப்பெறுமோ அதனை யான் செய்வேன்; மின்செய்த புரிசடையீர் - மின்னொளி விளங்கும் புரித்த சடையினையுடைய இறைவரே!; அதற்கு அருள் பெறுதல் வேண்டுமென - அதற்குத் தேவரீரது திருவருளை அடியேன்பெற வேண்டும் என்று சொல்ல; முன் செய்த...முகநோக்கி - முன்னாற் றோன்றும் புன்சிரிப்புடனே முதல்வராகிய இறைவர்அவரது முகத்தினை நோக்கி; உன் செய்கை....வேண்டுமென்று - சபதம் செய்வதாகிய உனது செயலை நீ முடித்தற்கு இனி என்ன வேண்டுவது என்று; உரைத்தருள - வினாவியருள,
 

249

  3401. (இ-ள்.) வம்பணி....வன்றொண்டர் - கச்சு அணிந்த இளமுலையாராகிய சங்கிலியாருக்குத் தம் மணத்தை ஒப்புக் கொடுத்த வன்றொண்டர்; நம்பர் இவர்....குறிப்பால் - நம்பராகிய இறைவர் இவர் பிறபதிகளிலும் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களை அங்கங்கும் சென்று சென்று கும்பிடுதலே கடனாகவுடைய எனக்கு இது தடையாகும் என்று கொண்ட திருவுள்ளக் குறிப்