|
  |  |  | 
  | 3192 |                       | ஆனா விருப்பின் மற்றவர்தா மருமை         யான்முன் பெற்றெடுத்த தேனார் கோதைச் சிங்கடியார் தமையு மவர்பின் றிருவுயிர்த்த
 மானார் நோக்கின் வனப்பகையார் தமையுங் கொணர்ந்துவன்றொண்டர்
 தூநாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமுந் தொழுதுசொல்லுவார்.
 |  | 
  |  | 38 | 
  | 3193 |                       | "அடியேன் பெற்ற மக்களிவ; ரடிமை யாகக்         கொண்டருளிக் கடிசேர் மலர்த்தா டொழுதுய்யக் கருணை யளிக்க வேண்டு"மெனத்
 "தொடிசேர் தளிர்க்கை யிவரெனக்குத் தூயமக்க"ளெனக் கொண்டப்
 படியே மகண்மை யாக்கொண்டார் பரவை யார்தங் கொழுநனார்.
 |  | 
  |  | 39 | 
  |  | 3191. (இ-ள்) செங்கோலரசன்....கோட்புலியார் - செங்கோன்மையுடைய சோழ அரசனது   அருள் உரிமையுடைய சேனாதிபதியாகிய கோட்புலியார்; நங்கோமானை...இறைஞ்சி - நமது பரமாசாரியராகிய   தலைவரைத் திருநாவலூரின் மன்னவரை நட்புரிமையினாலே தமது அரண்மனையில் திருவமுது செய்வித்து   வணங்கி; தலைசிறந்த...போற்றுவார் - பெருகும் கடல் போன்ற மிகச் சிறந்த   பெருவிருப்புடையராகி மேலும் துதிப்பாராகி;. | 
  |  | 37 | 
  |  | 3192. (இ-ள்) ஆனா விருப்பின் மற்றவர் - குறையாத அப்பெரு விருப்பினாலே அக்கோட்புலியார்;     தாம்...கொணர்ந்து - தாம் அருமையாக முன்னே பெற்றெடுத்த தேன் பொருந்திய மாலையணிந்த     சிங்கடியார் என்னும் மகளாரையும் அவர் பின்னே, திருமகள்போற் பெற்ற மான்போலும் மருண்ட     பார்வையுடைய வனப்பகையார் என்னும் அம்மையாரையும் அழைத்துக்கொண்டு முன் வந்து; வன்றொண்டர்...பணிவித்து     - வன்றொண்டராகிய நம்பிகளது தூய புதிதான தாமரை போன்ற பாதங்களில் வணங்கும்படி செய்து;     தாமும் தொழுது சொல்லுவார் - தாமும் வணங்கிச் சொல்வாராகி, | 
  |  | 38 | 
  |  | 3193. (இ-ள்) "அடியேன்...வேண்டும்" என - "இவர்கள் அடியேன் பெற்றெடுத்த மக்கள்;   இவர்களை அடிமையாக ஏற்றுக்கொண்டருளித் தேவரீரது மணமுடைய மலரடிகளைத் தொழுதுய்ந்திருக்கும்படி   கருணை புரியவேண்டும்" என்று சொல்ல; பரவையார் தங் கொழுநனார் - பரவையாரது கணவனாராகிய நம்பிகள்;   தொடிசேர்....எனக்கொண்டு - "தொடிகளை யணிந்த தளிர்போன்ற கையினையுடைய இவர்களிருவரும்   எனக்குத் தூய்மையுடைய மக்களேயாவார்கள்" என்று திருவுளம் பற்றி ஏற்றுக் கொண்டு; அப்படியே...கொண்டார்   - அவ்வாறே மக்கண் முறைமையாகும்படி கொண்டருளினார். | 
  |  | 39 | 
  |  | இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3191. (வி-ரை) செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதியாம் கோட்புலியார் - "ஏயர்   கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்" (3159) என்றதும், ஆண்டுரைத்தவையும்   பார்க்க. | 
  |  | செங்கோல் அரசன்- சோழன்; அரசன் பெருமை கூறியபடி; அருள்உரிமைச் சேனாபதி -   அருள் - அரசனது அருளுக்குத் தகுதியுடையராய்; உரிமை - வழி வழி மரபின் வரும் உரிமை   பெற்ற சேனாபதித் தன்மை. | 
  |  | உரிமைச் சேனாபதியாம் - இக்குடியினின்றே சேனாபதிகளை அரசர் தேர்ந்தெடுக்கும் உரிமை   குறித்தது; ஏனாதிநாதர் மன்னர்க்கு வாட்படை பயிற்றும் தொல்குடித் தாயத்தின் வந்தார் என்ற   வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது; அரு |