[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்283

  குதல் என்று கொண்டு மின்னும் இடைக்கொப்பாகாது மயங்கும் என்றுரைத்தலுமாம்.
  விதி உடன்பாடு எதிர் விளம்பார்....ஒதுங்கி - இஃது மிக உயர்வாகிய தன்மை நவிற்சியணி; விதி - இறைவரது திருவருள் முறைமை; விதிக்கு என நான்கனுருபு விரிக்க; உடன்பாடு - அதற்குத் தாம் உடன்பட்ட நிலையினை; உடன்பாட்டினை; இரண்டனுருபு தொக்கது; எதிர்விளம்பார் - தமது நாயகராக வரும் நம்பிகளின் எதிரில் வெளிப்படச் சொல்லாதவராகி; விளம்பார் - எதிர்மறை வினை முற்றெச்சம்; சொல்ல மாட்டாதவராய் என்றதும் குறிப்பு.
  ஒன்றிய...ஒதுங்கி - எதிர் விளம்பாமைக்கும் ஒதுங்குதலுக்கும் காரணம் பெண்மைக்கு குணமாகிய நாணம் என்றதாம்; மடவார் - சேடியர். மடவாருட னொதுங்குதல் - அவர்கள் கூட்டத்தினுடன் ஒதுங்கி மறைந்து கொள்ளுதல்.
  எதிர் விளம்பாமையும் நாணுடன் ஒதுங்குதலும் முதலியன தலைவனைக்கண்ட போது தலைவியர்கள்பால் நிகழ்வன; ஈண்டு மொழிபெற வருந்துதல் - மொழி பெறாதுகூறல் - நாணிக் கண்புதைத்தல் - குறையுற்று நிற்றல் - முதலாக வரும் அகப்பொருட்டுறைகள் நினைவு கூர்தற்பாலன.
  விதியுடன்பட்டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின், விதியினை உடன் பட்டாராயினும் அதனை எதிரிற் கூறமாட்டாராய் என்க. இதற்கு இவ்வாறன்றி, விதியாகிய உடன்படுதலும் எதிர்மறுத்தலும் கூறாதவராய் என்று உரைவகுத்தனர் இராமலிங்கத் தம்பிரானார்.
  "விதியுடன்பாட் டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின் விதிப்படி உடன்பட்டமையால் எதிர் மொழி கொடாராய் என்றுரைக்க" என்பதும் மேற்படி தம்பிரானாருரை.
 

256

3411
ங்கவர்தம் பின்சென்ற வாரூர "ராயிழையீர்!
இங்குநான் பிரியாமை யுமக்கிசையும் படியியம்பத்
திங்கண்முடி யார்திருமுன் போதுவீ!" ரெனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக் கேட்டதா தியர்மொழிவார்,
 

257

3412
"எம்பெருமா! னிதற்காக வெழுந்தருளி, யிமையவர்கள்
தம்பெருமான் றிருமுன்பு சாற்றுவது தகா" தென்ன
நம்பெருமான் வன்றொண்டர் நாதர்செய லறியாதே
"கொம்பனையீர்! யான்செய்வ தெங்?"கென்று கூறுதலும்,
 

258

3413
மாதரவர் "மகிழ்க்கீழே யமையு"மென, மனமருள்வார்
"ஈதலரா கிலுமாகு மிவர்சொன்ன படிமறுக்கில்;
ஆதலினா லுடன்படவே யமையு"மெனத் துணிந்"தாகிற்
போதுவீ"ரெனமகிழ்க்கீ ழவர்போதப் போயணைந்தார்.
 

259

  மகிழின் கீழே சபதம்
3414
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
"மேவாதிங் கியானகலே" னெனநின்று விளம்பினார்
மூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
 

260