|
| 3419. (இ-ள்.) "நம்பியாரூரனுக்கு...அளிப்பீர்" என்று உணர்த்துதலும் - நம்பியாரூரனுக்கு நங்கையாகிய சங்கிலியை இவ்வுலகத்திலே நமது கட்டளையினாலே சடங்குகளுடன் கல்யாணஞ் செய்து தேவருலகத்துள்ளோரும் அறியும்படி கொடுப்பீர்களாக என்று உணர்த்தியருளுதலும்; தம்பிரான்....மேற்கொண்டெழுவார் - தம்பெருமானது திருத்தொண்டர்கள் அவ்வருளிப் பாட்டினைத் தலை மேலே தாங்கி எழுவார்களாகி, |
| 265 |
| 3420. (இ-ள்.) மண்ணிறைந்த...திருத்தொண்டர் - உலகில் நிறைந்த பெருஞ் செல்வத்தினை உடைய திருவொற்றியூரில் நிலைபெற்று வாழும் எண்ணிறைந்த திருத்தொண்டர்கள்; எழில் பதியோருடன் ஈண்டி - அழகிய அந்தத் திருப்பதியில் உள்ளவர்களுடனே கூடிவந்து; உள்நிறைந்த...செய்தளித்தார் - மனநிறைந்த மகிழ்ச்சியுடனே தேவர்கள் கற்பக முதலிய தேவதருக்களின் மலர்களை மழைபோலப் பொழியக் கண் களிகொள்ள நிறைந்த பெரிய சிறப்புக்களுடன் கல்யாணத்தைச் செய்து முடித்தனர். |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3418. (வி-ரை.) அன்றிரவே - சபதவினை முற்றிய அன்றிரவிலேயே. |
| இரவு - வைகறையில் சபதவினை முற்றிய பின்னும் புலருமுன்னும் எஞ்சியிருந்த இராப்பொழுது. |
| வினைமுடித்தருள - ஒற்றிகொண்டார் - தொண்டர்க்கு - மன்றல் வினை செய்வதற்கு மனங்கொள்ள அன்றிரவே - உணர்த்துவார் - என்று கூட்டி உரைத்துக் கொள்க. |
| ஆதிபுரி - திருவொற்றியூரின் முதற்பெயர்; ஒற்றிகொண்டார் - ஆதிபுரியா யிருந்தும் அதனை ஒற்றியாக உகந்து கொண்டவர் என்றது கவிநயம். |
| ஒற்றிகொண்டார் - ஆதிபுரியாகிய ஒற்றியூரை உகந்திடங் கொண்டவர் என்க. ஆதிபுரியை ஒற்றிகொண்ட சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்டவராகிய வன்றொண்டர்; ஆதிபுரி - திருவொற்றியூர் என்பது முன்னுங் குறித்தது காண்க. "எண்ணில் பெருமை ஆதிபுரி" (3354). |
| ஆட்கொண்ட - வன்றொண்டர் - புரிந்தவினை - முடித்தருள - தம்மால் வலிந்து ஆளாகக்கொள்ளப்பட்ட வன்றொண்டராயின காரணத்தால் அவர் எண்ணிய வினையை முடித்துக் கொடுத்தருள வேண்டிய கடமைப்பாடுபற்றி என்பது குறிப்பு. |
| தொண்டர்க்கு - மன்றல் வினை செய்வதற்கு - மனங்கொள்ள உணர்த்துவார் - முடித்தருளக்கொண்ட தமது அருளின் நினைவினை (சங்கற்பத்தை) நிறைவேற்று வதற்காக அந்த மணவினையைச் செய்வதற்குத் தமது திருவொற்றியூர்த் தொண்டர்க்கு அறிய உணர்த்துவாராகி; மன்றல்வினை - கல்யாணச் சடங்குகள்; மனங்கொள்ள - தெளிவுபட; உணர்த்துவார் - கனாவில் பலர்க்கும் ஒருங்கே தோன்றி ஆணையிடுதல்; 1068; 2094 - 2097 - என்ற இவை முதலியவை பார்க்க. |
| உணர்த்துவார் - உணர்த்துவாராகி; முற்றெச்சம். |
| உணர்த்துவார் - உணர்த்துதலும் - தொண்டர் - எழுவார் - (3419) - பதியோருடன் ஈண்டிச் - செய்தளித்தார் - (3420) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. |
| 264 |
| 3419. (வி-ரை) "நம்பி...அளிப்பீர்!" - இது இறைவர் திருவொற்றியூர்த் திருத்தொண்டர்களுக்குக் கனவில் உணர்த்தி யருளிய ஆணை; நம்பி - ஆடவரிற் சிறந்தோன்; |