[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்299

  கண்ணுற முன் - அகக்கண்ணினாலே யன்றிப் புறக்கண்ணாலும் முன் பொருந்த என்பது.
  போலக் கருதினார் - கருத்தில் ஊன்றிய நோக்கினாலே அக்காட்சி புறக்காட்சி நிகழ்ந்தது போலவே யிருந்தது; உருவெளிப்பாடு முதலிய அகப்பொருட்டுறைகள் காண்க. மேல் இதனைத் தொடர்ந்து பிரிவாற்றா நிலையில் அருளும் திருப்பதிகமும், அதனை ஆசிரியரது "மிக நினைந்து ஏசறவாய்" என்று விளக்கியருளும் நிலையும் காண்க. "எத்தனைநாள் பிரிந்திருக்கே னென்னாரூ ரிறைவனையே" (தேவா).
  கண்டுகொண்டார் - என்பதும் பாடம்.
 

271

3426
பூங்கோயி லமர்ந்தாரைப் புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினா னினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயனுணர்வார்
"ஈங்குநான் மறந்தே"னென் றேசறவான் மிகவழிவார்,
 

270

3427
மின்னொளிர்செஞ் சடையானை வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் "பத்திமையு மடிமையையுங் கைவிடுவான்"
என்னுமிசைத் திருப்பதிக மெடுத்தியம்பி யிரங்கினார்.
 

272

  3426. (இ-ள்.) பூங்கோயில்....நினைவாரை - பூங்கோயிலினுள் விரும்பி வீற்றிருப்பவரைப், புற்றினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவரை, இடையறாத பெருவிருப்பத்தினாலே தம்மை நினைந்திருக்கும் அடியவர்களைத் தாம் நினைந்திருப்பவரை; பாங்காக...பயனுணர்வார் - முறைமையாகத் தாம் முன்னாட்களிற் பணிய அதனால் வரும் சிவானந்தமாகிய பெரும்பயனை உணர்ச்சியிற் கொள்பவராகி; ஈங்கு நான்...மிக அழிவார் - இவ்விடத்து நான் மறந்திருந்தேன் என்று வருந்தி மிகவும் மனமழிவாராகி.
 

272

  3427. (இ-ள்.) மின் ஒளிர்....மகிழ்ந்தானை - மின்போல ஒளிவிடும் சிவந்த சடையினை உடையவரை, வேதங்களின் முதல்வராக உள்ளவரை, நிலைபெற்ற புகழை உடைய திருவாரூரினை மகிழ்ந்தவரை; மிகநினைந்து - (பிரிவாற்றாமையால்) மிகவும் நினைந்து; பன்னிய சொல்....இரங்கினார் - பலமுறையும் அடுக்கிய சொற்களையுடைய "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்" என்று தொடங்கும் சொல்லும் பொருளுமுடைய பண் பழம்பஞ்சுரத்தின் இசைபொருந்திய திருப்பதிகத்தினை எடுத்துப் பாடி இரங்கினார்.
 

273

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3426. (வி-ரை.) பூங்கோயில்...நினைவாரை - ஈண்டுக் கூறியவை மூன்றும் புற்றிடங்கொண்ட பிரானாராகிய திருமூலட்டான நாதரை நினைந்த வகை; மேற்பாட்டிற் கூறும் (3427) மூன்றும் வீதிவிடங்கராகிய தியாகேசரை நினைந்தவகை. மேற்பாட்டில் (3427) வரும் மூன்றும் ஒருமையாற் கூறியது தோழமையால் தம்முடன் ஒன்றித்து நிகழும் தன்மையுடையார் என்ற குறிப்புமாம். பதிகத்துள் "இறைவனையே" என்று ஒருமையாற் போற்றியதும், "துரிசுகளுக்கு உடனாகி" என்றதும், பிறவும் கருதுக.