| இழையெனமா சுணமணிந்த விறையவனைப் பாடினார் மழைதவழு நெடும்புரிசை நாவலூர் மன்னவனார். | |
| 280 |
| (இ-ள்.) பிழை....எடுத்து - "பிழையுளன பொறுத்திடுவர்" என்று தொடங்கி; மழைதவழும்...மன்னவனார் - மேகங்கள் தவழ்தற்கிடமாகிய உயர்ந்த மதில்களையுடைய திருநாவலூரின் தலைவராகிய நம்பிகள்; பெண்பாகம்....பாடினார் - உமையம்மையாரை ஒரு பாகத்தில் இருத்தலை விரும்பிய பெருமானை, திருவெண்பாக்கத்தினை மகிழ்ந்தவரை, சங்கராபரணம் என்று அடியார்போற்றப் பாம்பினை அணிந்த இறைவரைப் பாடினார். |
| (வி-ரை.) பிழை...எடுத்து - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| பெண்பாகம்....இறையானை என்றது கருணைக்கிருப்பிட மாதலையும், வெண்பாக்கம் மகிழ்ந்தான் என்றது வெளிப்பட்டருளியுள்ள இடத்தினையும் மாசுணம் அணிந்தான் - என்றது தீமையையும் நன்மையாக ஏற்றுக்கொள்ளும் நிலையினையும் உட்குறிப்பாகக் கொண்டு நம்பிகள் தமது குறையினை விண்ணப்பித்த குறிப்புக்களாம். "ஒண்ணுதலி பெருமானார்" (6), "சேயிழையோ டுடனாகி" (4), "நுண்ணிடையான் பாகமா" (5), "வாரிடங்கொள் வனமுலையா டன்னோடும்" (8), "இங் கிருந்தாயோ" (9) "வெண்பாக்க மிடங்கொண்ட" (11), "விடநாகன்" "பையரவா" (2-3) என்பன பதிகம்; விழை - விரும்பும்; இழை - சங்கராபரணம்; மாசுணம் - பாம்பு. |
| மழை -அதற்குக் காரணமாகிய மேகம் என்ற பொருளில் வந்தது; ஆகுபெயர்; புரிசை - மதில். |
| 280 |
| திருவெண்பாக்கம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் |
| "பிழையுளன பொறுத்திடுவ" ரென்றடியேன் பிழைத்தக்காற் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்! "குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோ?"வென்ன உழையுடையா னுள்ளிருந்து "உளோம்போகீ" ரென்றானே. | |
| (1) |
| "பொன்னவிலுங் கொன்றையினாய்! போய்மகிழ்க்கீ ழிரு"வென்று சொன்னவெனைக் காணாமே "சூளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே! யிங்கிருந்தா யோ?"வென்ன ஒன்னலரைக் கண்டாற்போ "லுளோம்போகீ" ரென்றானே. | |
| (9) |
| மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந் தோன்றவருள் செய்தளித்தா யென்னுரைக்க"வுலகமெல்லா மீன்றவனே! வெண்கோயி லிங்கிருந்தா யோ?"வென்ன வூன்றுவதோர் கோலருளி யுளோம்போகீ ரென்றானே. | |
| (10) |
| ஏராரும் பொழினிலவு வெண்பாக்க மிடங்கொண்ட காராரு மிடற்றானைக் காதலித்திட்ட டன்பினொடுஞ் சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த ஆரூரன் றமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |