34திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

உள்ள திருக்கோயில்களையும் சென்று பணிந்து துதித்து; புற்றிடமாய்... உற்றிருந்தார் - புற்றிடங் கொண்டு நீங்காதெழுந்தருளிய பெருமானது திருவடிகளைப் பிரியாது இடையறாத இன்பம் பெற்று வீற்றிருந்தருளினார்.

45

இந்நான்கு பாட்டுக்களும் ஒரு முடிபுகொண் டுரைக்கநின்றன.
3196. (வி-ரை) சிறப்பித்தருளும் திருக்கடைக் காப்பு - முன் பாட்டிற் "சிறப்பித்தார்" (3195) என்றது பதிகத்துள் இன்ன திருப்பாட்டு என்று காட்டியருளியவாறு.
பிதாவாக - நினைந்த பெற்றி - மக்கள் "எனக்கொண்டு" (3193) என்று முன்கூறியபடி துணிந்த தன்மை; நினைதல் - துணிதல்; பெற்றி - தன்மை.
பெற்றியினால் தம்மை வைத்து - என்று கூட்டுக. வைத்தற்குக் காரணங் கூறியபடி; சிங்கடி யப்பன் என்ற தேவாரத்தின் கருத்தினையும் பொருளையும் விளக்கிக் காட்டியவாறுமாம்.
தம்மை வைத்தலாவது - தம் பெயரை அவ்வாற்றாற் கூறிப் புலப்படப் பொறித்தல் (முத்திரீ கரித்தல்); என்றே - ஏகாரம் சிறப்பு.
நிறப் பொற்புடைய இசை - நிறம் - இசைப்பாடுகள். "நிறம்பயி லிசையுடன்" (2139) "தாளநிலையில் எய்தவைத்த நிறம்" (சிலப். அரங். 26-36 உரை.) இப்பதிகம் தாள நிறைவின் அமைதிபெற வருதல் காண்க.
இறைஞ்சுவார் - இறைஞ்சுவாராகி; இறைஞ்சுவார் - எழுந்தருளி என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக.
பிறப்பித்தெடுத்த பிதாவாக - ஈன்று வளர்த்த தந்தையாராகவே; அவ்வாற்றால்வரும் பிதாவல்லாதிருந்தும் அவ்வாறு ஆகத் தம்மை ஆக்கிக் கொண்டு என ஆக்கச் சொல்லின் பொருள் விரித்துக்கொள்க. "அன்பினான் மகன்மை", பாலூட்டலான் மகன்மை, எடுத்தலால் (சுவீகாரம்) மகன்மை என்று பலவாறு வரும் மகன்மை - தந்தை - முறைகள் போலக் கொள்க. ஈண்டுப் பிறப்பித்தெடுத்த பிதாவாகத் தம்மை எண்ணித் துணிந்து கொண்ட முறையால் அப்பன் என்றார் என்பது.

42

திருநாட்டியத்தான்குடி
திருச்சிற்றம்பலம் பண் - தக்கராகம் 7-ம் திருமுறை
பூணா ணாவதொ ரரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை யுணர்வேன் பிறவே னாகிலு மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுத லொழியே னாட்டியத் தான்குடி நம்பீ.

(1)

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளு மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவா ரூர னுரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர் பாடநும் பாவம்பற் றறுமே.

(10)

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு : - அருளுரிமை "சிறப்பித்தார் கோட்புலியாரை" (3195) என்றும், "சிங்கடியாரை....தம்மை வைத்தருளி" (3196) என்றும் கூறியவாற்றால் ஆசிரியர் பதிகக் குறிப்புணர்த்தியமை கண்டு கொள்க.