| 
			
			| | 328 | திருத்தொண்டர் புராணம்  [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] | 
 
 |   |   |
 |  | துற்று வேண்டியவர்; சரிதக் குறிப்பு; : "பற்றினார்க்கென்றும் பற்றவன் - பாவிப்பார் மனம்பாவிக்   கொண்டானை" என்பதும் குறிக்கொள்க; மகிழ்ச்சியாற் பலதிறமும் பரவியநிலை; மேலும் "அல்லறீர்த்தருள்   செய்யவல்லானை"(5) "நண்ணினார்க்கென்று நல்லவன்றன்னை"(7) பந்தித்த வினைப்பற்றறுப்பானை(8)   என்பனவும் காண்க; - (3) மால்விடை - திரிபுர மெரித்தபோது விட்டுணு விடையாகி   இறைவரைத் தாங்கினார் என்பது வரலாறு; "தடமதில்க ளவை மூன்றுந் தழலெரித்த வந்நாளில்,   இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ"(திருவா); கனலா - கனலால் எரிய;  பெரியகம்பர் - அம்மையார்பூசித்த திருவேகம்ப நாதர்; மேலும் நல்லகம்பன்,   கள்ளக்கம்பன், வெள்ளக்கம்பன் என்ற மூன்று மூர்த்திகளும் உண்டு. பிரமனாற் பூசிக்கப்பட்டவர்  வெள்ளக் கம்பர்; "மலர்ப்பொகுட்டணை மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை"   (காஞ்சிப் புரா; திருவேகம்பப் படலம் - 86); விட்டுணுவாற் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர்;   "மருள்புரி கருத்தினான் மாய னேத்தலிற், கருதுமப் பெயரிய கள்ளக்கம்பனை" (காஞ்சிப் புரா;   திருவேகம்பப் படலம் - 87); உருத்திரனாற் பூசிக்கப்பட்டவர் நல்லகம்பர். "உருத்திர   னலத்தகு மொருமை பூண்டுயர், கருத்தொடும் வழிபடு நல்லகம்பனை" (88); இம்மூவரொடும் திருவேகம்பரும்   கூடி ஒருவரே நால்வகை உருவத்துடன் இங்குத் தனித் தனி வீற்றிருந்தருள்கின்றனர். "கருதரு நல்லனே   கள்ளன் வெள்ளனேர், தரு திருவேகம்ப னென்று தன்னொடு, மருமலர்க் கவிழிணர் மாவி னீழல்வர,   ழொருவனே நால்வகை யுருவ மேவினான்" (காஞ்சிப் புரா; திருவேகம்பப் படலம் - 89). மேல்   "நல்ல கம்பனை"(5), "கள்ளக்கம்பனை"(10) என்று அருளுதல் இவ்வொற்றுமை கருதிய   தென்க; - (4) குண்டலம் - மகரக்குழை யெனும் காதணி; வண்டு அலம்பு - அலம்புதல்   - சத்தித்தல்; - (5) அங்கம் - ஆறு அங்கங்கள்; -(6) கடல் வளரும் சங்கம்   - சங்குகள் உண்டாகும் பல விடங்களுள் கடலில் விளைவன சிறப்புடையன என்பது; கங்கையாளன்   - கங்கையைத் தரித்தவன்; கம் - பிரம கபாலம்; அதனைக் கையிலேந்தியவன் என்றலுமாம்;   -(7) நாம் - அடியவர்களுள்ளிட்ட நாம்; - (8) சிந்தித்து...திகழுஞ் சிவன்   - கண்பெறும் முன் நம்பிகள் நினைந்து கண்ட நிலைக்குறிப்பு; கந்தவார் சடை - சடைக்குக்   கந்தமாவது அதிற் கூடிய கொன்றை கூவிளம் முதலியவற்றாலாவது; கந்தம் - மணம்; -(9)  வரங்கள் பெற்று உழல் - வரங்கள் பெற்றும் நல்வழிச் சேராது உழன்ற; பெற்றும்   என்க - சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது; நிரந்தரம் - அழிவு; இல்லையாக; நிர்க்கண்டகன்   - கடிய தண்டம் விதித்தவன். கரங்கள் எட்டு - "எண்டோள் வீடுநின் றாடும் பிரான்றனை";   -(10) வழிபாடு செய்வாள் போல் - நித்தியமாய் நிகழும் அருட் பூசனையிருக்க, அற்றைக்கு   ஒரு நிமித்தம் பற்றி வழிபடுவாள் போல என்க; நின்றவாகண்டு....வெளிப்பட்ட - பூசித்துத்   தழுவிய வரலாறு; -(11) காண....என்று - பதிகக்குறிப்பு. |  |  | தலவிசேடம் : - கச்சித் திருவேகம்பம் - II - பக்கம் 1537 பார்க்க. |  | 3443 |                       | பாடிமிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப்         பாவையுடன் நீடியகோ லங்காட்ட நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
 சூடியவஞ் சலியினராய்த் தொழுதுபுறம் போந்தன்பு
 கூடியமெய்த் தொண்டருடன் கும்பிட்டங் கினிதமர்வார்.
 |  |  |  | 289 |  | 3444 |                       | மாமலையாண் முலைச்சுவடும் வளைத்தழும்பு மணிந்தமதிப் பூமலிவார் சடையாரைப் போற்றியரு ளதுவாகத்
 தேமலர்வார் பொழிற்காஞ்சித் திருநகரங் கடந்தகல்வார்
 பாமலர்மா லைப்பதிகந் திருவாரூர் மேற்பரவி,
 |  |  |  | 290 | 
 | 
 | 
 |  |