338திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  நின்றாய் என்க; ஆகி - உவமப் பொருள் தந்து நின்றது; அகரம் போல; -(8) பண்டே...பெற்றேன் - இறைவரது திருநாமத்தைப் பயில்வதற்கு மிக்க முன்னைத்தவம் வேண்டப்படும் என்பதாம்; செய்த பாக்கியம் - தவஞ்செய்து தேடிய பயன்; நாமம் - திரு வைந்தெழுத்து; இந்நாளில் இறைவன் றிருநாமத்தைப் பயிலுதற்குக் கூசுவோரும், பயிலாது நிற்பதோடன்றி, அதனைப் பழிப்போரும் பலராயினர். பயிலுவோர் சிலராக் காண்டும். இதன் காரணம் முன்னைத் தவப்பய னில்லாதாரே பலராதல் என்க. "இலர்பல ராகின்ற காரண நோற்பார், சிலர்; பலர் நோலா தவர்"(குறள்) என்பது பொய்யா மொழி; "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் றீவண்ணர் றிறமொருகாற் பேசாராகில்...அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற், பெருநோய்கண் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே" (தாண்) என்ற திருவாக்கு ஈண்டு நினைவு கூர்தற்பாலதாம்; -(9) மாணா உருவாகி - மாணி(வாமனன்) உருவாகி வந்து மண் கொண்ட பின் மாணா(மாணல்லாத - பெரிய) உருவு எடுத்து மண் அளந்தான்; நீள் நீள் - அடுக்கு மிகுதி குறித்தது; மிக நீண்ட; வாணார் - வாளார் என்பது எதுகை நோக்கி வாணார் என நின்றது; "நீணுதல் செய்தொழிய"(பிள். பிரமபுரம் - 9). "மாணி பால்கறந்தாட்டி வழிபட, நீணுல கெலா மாளக் கொடுத்தவன்" (குறுந். கோயில் - 4); பலவின்கனி ஈயது போல் - பலாப் பழத்தின் ஆசையாற் சென்று அதன் பிசின் ஒட்டி இறந்தொழியும் ஈப்போல; (பழமொழி) "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப் பழத் தீயினொப்பாய், விழைதருவேனை" (திருவா. நீத்-விண்-46); போல்வதன் முன் - பலாப் பழத்தில் ஒட்டி அகப்பட்ட ஈ இறப்பது போல இறந்து வீழ்வதன் முன்; கனி ஈ(ர்)ந்தது என்று பாடங்கொண்டு பெண்ணோயுற்ற வடிவுவமமாக உரைப்பாருமுண்டு. -(10) அடித் தொண்டு - சிவபூசை; தவநெறி; யானை - அயிராவதம்.
  தலவிசேடம் : - திருநெல்வாயிலரத்துறை - 2113-ன் கீழ்ப் பார்க்க. இத்தலத்து அருணகிரியார் திருப்புகழினுள் ஆளுடைய பிள்ளையார் இங்கு முத்துச் சிவிகை பெற்ற வரலாறு குறிக்கப்பட்டுளது. "கொச்சையிற் சதுர்வேதச் சிறுவ நிற்கருட்கவிகை நித்திலச் சிவிகை யைக்கொடுத் தருளீசன்."
3449
ரமர்திரு வரத்துறையைப் பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார் விரைமலர்த்தா டொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி யடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தா ரமர்ந்ததிரு வாவடுதண் டுறையணைந்தார்.
 

295

  (இ-ள்) பரமர்....போய் - இறைவரது திருவரத்துறையினைப் பணிந்து மேற்சென்று; பலபதிகள்...தெழுதேத்தி - பதிகள் பலவற்றிலும் சேர்ந்து இளைய இடபக் கொடியினை உயர்த்திய இறைவரது மணமுடைய மலர் போன்ற திருவடிகளைப் பணிந்து துதித்து; உரவு...ஆடி - பரந்த நீரையுடைய பெரிய காவிரியினைச் சேர்ந்து அன்பர்களுடனே நீராடி; அரவணிந்தார்....அணைந்தார் - பாம்பினை அணிந்த இறைவர் விரும்பி எழுந்தருளிய தண்ணிய திருவாவடுதுறையினை அணைந்தனர்.
  (வி-ரை) பலபதிகள் விரவி....ஏத்தி - திருநெல்வாயிலரத் துறையினின்றும் நம்பிகள்திருஎருக்கத்தம்புலியூரின் அணிமையில் நிவாநதியைக் கடந்து அங்கு நின்றும் நேர் தெற்கே செயங்கொண்ட சோழபுரம் வழியாகச் செல்லும் பாதை வழியே சென்று, திருஆப்பாடியின் அணிமையில் கொள்ளிடத்தைக் கடந்து காவிரியை அடைந்தனர் என்பது கருதப்படும்; இவ்வாறன்றித் திருநெல்வாயிலரத்துறையி