[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்341

  வன் என்றார்; -(7) விதிமுதலே - விதிக்கின்ற முதல்வன்; விதித்தல் - படைத்தல்; விதிமுகத்தால் மறைகளுள் கூறும் விதிவாக்கியங்களாகிய தர்மத்தைச்செய் - உண்மையைச் சொல் என்பன வாதியாக வருவனவற்றால் உலகத்தைச் செலுத்தும் முதல்வன் என்றலுமாம்; மெய்யன் - சத்துப் பொருள்; -(8) பரமேட்டி - அப்பாற்பட்டவன் - மேலானவன்; தீதிலா மலை - மலை, வெள்ள நீர் - யானை - சிங்கம் - பாம்பு முதலியவை உள்ள இடமாயிருந்தும் அவற்றை உடைய ஏனை மலைகள் தீமைக்கிடமாதல் போலத் தீமையில்லாத மலை; சேவகம் - வீரம்; "தந்திமேல் விடைமேலழகர் சேவகம் செய்தது" (திருவிளை. புரா); -(9) வழித்துணை - பிறவிப் பயணத்திற் றனித் துணையாய் உடன் வருபவர்; மருந்து - உடன் வந்து பிறவி நோய் தீர்ப்பவர்; மாசிலாமணி - தலச் சுவாமி பெயர்; ஈடு - இடப்பெறுதல்; தொழிற்பெயர்; ஆனை - பெருமை குறித்தது; -(10) சிங்கடியப்பன் - நம்பிகள் சரிதப் பகுதிக் குறிப்பு; அணுக்கன் - அகம்படித் தொண்டு செய்பவர்; தோழர் என்ற குறிப்புமாம்; சாதலும் பிறப்பும் - சாதலை முன் கூறினார், இப்போது பிறப்பு நேர்ந்து விட்டமையின் அடுத்து வருவது அதுவே யாதலின்; மேலே பிறப்பு என்றது இனிவரும் பிறவி.
  தலவிசேடம் : -திருவாவடுதுறை - III - பக்கம் 297 பார்க்க.
3451
திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி "யடியென்மே லுற்றபிணி
வருத்தமெனை யொழித்தருள வேண்டு"மென வணங்குவார்,
 

297

3452
ரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு வருள்புரிவார்
"விரவியவிப் பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளி"யென்னக்
கரவிறிருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார்.
 

298

  3451. (இ-ள்) திருப்பதிகம்...போய் - திருப்பதிகம் பாடியருளித் துதித்து வணங்கித் திருவருள் விடை பெற்று மேற்சென்று; விருப்பினொடும்...இறைஞ்சி - விருப்பத்துடனே திருத்துருத்திப் பதியினை அடைந்து இறைவரது திருவடிகளை ஆசையுடன் திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; அடியேன் மேல்...வணங்குவார் - அடியேன் உடம்பின் மேல் வந்த நோயின் துன்பத்தினை என்பால் நில்லாது தீர்த்தருள வேண்டும் என்று வணங்குவாராகி,
 

287

  3452. (இ-ள்) பரவியே...புரிவார் - துதித்து வணங்கிய நம்பிகளுக்கு இறைவர் திருவருள் புரிவாராய்; விரவிய...என்ன - பொருந்திய இப்பிணி முழுதும் தீர்வதற்குத் தனியாக நன்மையுடைய மலர்களில் வண்டுகள் பாடும் தீர்த்தத்தினையுடைய வடகுளத்திற் குளிப்பாயாக என்று அருளிச் செய்ய; கரவில்...புறப்பட்டார் - கரவில்லாத திருத்தொண்டராகிய நம்பிகள் கைகூப்பி வணங்கி புறப்பட்டருளினர்.
 

298

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3451. (வி-ரை) அருத்தி - ஆர்வம் - ஆசை; புக்குக் கழல் இறைஞ்சி என்க.