| 
			
			| | [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]  29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 345 | 
 
 |   |   |
 |  | பதிகக் குறிப்பு : - இறைவர் தம்பாற் செய்த அருளிப் பாட்டினை வியந்து போற்றி   அதனை உலகுய்யும்படி தொண்டர்களின் எதிரே பாடியது. (3454). |  |  | பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) இழிந்தருவி இழிந்து வரும் அருவி; வெடில் பட   - ஒலிக்குறிப்பு; வெடிபட - என்பது பாடமாயின் முழக்கம்; நறுமணமுமாம்; அன்னமாம்   - அன்னங்கள் விளையாடும்; அடியார் சொன்னவாறு அறிவார் - அடியார்கள் முன்னின்று முறையிடுமவற்றை   அறிந்து அருள்புரிபவர்; நம்பிகளது சரிதக் குறிப்பு; சொன்னவாறறிவார் - தலத்துச்   சுவாமி பெயர்க் குறிப்பும் காண்க; துருத்தியார்...வேள்விக்குடியுளார் - எதிர் எதிராகக்   காவிரியின் இருகரையிலும் உள்ளவை; தலவிசேடம் பார்க்க. (III - பக்கம் 288) மறக்குமாறு   என்னை - என்க; அடிகளை எம்பெருமானை - இடர் கெடுத்தானை நாயேன் மறக்குமாறென்னை?   என்று கூட்டுக; என்னை எவ்வாறு; எங்ஙனம்; மறக்குமாறில்லை என, வினா எதிர்மறை குறித்தது;   "இவர் தன்மையறிவாரார்?" (தேவா) என்புழிப் போல; செயப்படுபொருள் பின்னர் வந்ததும்,   மறக்குமாறின்மை முன் வைத்ததும் உறுதிப் பொருட்டு. இப்பதிகம் இவ்வாறு முடிபு கொள வைத்த தனிச்சிறப்புடையது;  பிணியிடர் - பிணியாகிய இடர் என்றும், பிணியால் வரும் இடர் என்றும் உரைக்க நின்றது;   -(2) கூடுமாறுள்ளன - அங்கங்குங் வந்து கூடும் கிளைநதிகளும் கால்களும்; வெள்ளத்தால்   வந்து சேரும் மற்றைப் பண்டங்களும் என்றலும் குறிப்பு; மேற்பாட்டுப் பார்க்க. மறித்தல்   - அழித்தல்; ஏனல் - தினை; ஐவனம் - மலையரிசி (683); குறிஞ்சிக்   கருப்பொருள்கள்; மாடு - பக்கம்; கோங்கம் - மருதம் - பெருமரங்கள்;   பொருது - அலைத்துப் பறித்து; குலை - செய்கரை; செடியனேன் - தீயவன்;   -(3) யானையின் கொம்பு - மலைபடு பண்டம்; குறிஞ்சிக்கரு; கூட்டெய்தி -   கூடிச் சேர்ந்து; தவம்...மூழ்க - போகர் - காமியம் பற்றித் தவநிலை. நிற்போர்;  யோகர் - சிவயோகியர்; புலரி - வைகறை; விடியல்; தொடர்ந்தடும் கடும்பிணி   - இடையில் கூடித் தொடர்ந்து வருத்தும் நோய்; -(4) சந்தனத்துண்டம் - சந்தன மரக்கட்டைகள்;  சந்தனம் - அகில் - மிளகு - குறிஞ்சிக் கரு; கறி - கார்ப்பு என்றலுமாம்;  அருவிகள் - பலமுகமாகவும் மலையினின்றும் பெருகி வந்து கூடும் நிலை; புன்புலங்கவர   - மலைச்சாரலில் உள்ள புன்புலக்கானங்களின் பொருள்களை வெள்ளத்தில் அலைத்துக்கொண்டு ஓட;  கடலுற விளைப்பதே கருதி - கடலைச் சார ஓடும் முகமாய்; "கருங்கடல் காண்பதே கருத்தாய்"   (7-8); கருத்து தற்குறிப்பேற்ற அணி; கைபோய் எறியும் - அலைகளை வீசும்;  ஆசு - குற்றம்; -(5) வேங்கை - குறிஞ்சிக்கரு; வேங்கை மலர்கள் மிக உதிர்ந்து   கிடத்தலின் அவற்றை அலைத்து வருதலை மலர் உந்தி என்றார். பொன்மலர் -   பொன்போன்ற நிறமுடைய மலர்; வேங்கைமலர்கள் பொன்னிறமுடையன; இழிந்திழிந்தருவி - பலபடியும் பல அருவிகள் வந்து கூடுதல் குறிப்பு;   சுழிந்திழி - வெள்ளத்தின் வேகத்தினால் நீர்ச்   சுழிகளுடன் வழிகின்ற; "மாலினுந் திச்சுழி மலர்தன் மேல்வரும், சால்வினால்" (54);   உற்றநோய்   - இடையில் வந்து பொருந்திய பிணி; "புதிய பிணி" (3453); பிதற்றுதல் - பலவாறும் போற்றுதல்;   இற்றையே - இன்றைக்கே - (குளத்தில் மூழ்கின) இப்பொழுதே; "அக்கணமே" (3453);   உற - அந்தமுற;   உறவு - பொருந்துதல் என்று கொடுரைத்தலுமாம்; - (6) பொன் - பொற் சன்னங்கள்; "செம்பொன்   வார்கரை" (57); பொன்னி என்ற பெயரும் காண்க. இதுபற்றி முன் (57) உரைத்தவை பார்க்க;   வரன்றி - மணலுடன் வாரிக்கொண்டு; உம் - அசை; நன்மலர் - கரையிருமருங்கும், மலை - காடு   இவற்றில் வரும் வழியிலுமுள்ள மலர்ச் சோலைகளின் மலர்கள்; அகழுமா அருங்கரை - வெள்ள நீர்   இருகரையினையும் கீண்டு ஓடுதல் குறிப்பு; வளம்படப் பெருகி - நீர்ப் | 
 | 
 | 
 |  |