348திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  தற்கு; மருவார்வத் துடன்மற்றைக் கண்தாரீர் எனவணங்கி" (3462) என்றும் வருவனவாற்றால் அப்பாடத்தின் பொருத்தம் ஆராயத்தக்கது.
  நின்று - மேலடி எடுத்துச் செல்லுதலை நிறுத்தி நின்று.
  நிலமிசை வீழ்ந்து - தலத்தினைக் கண்ட இடத்தே நிலமுற விழுந்து வணங்குதல் முறை; இங்கு அவசமானாரபோல விழுந்து என்ற குறிப்புமாம்.
  நெடிதுயிர்த்தல் - பெருமூச்செறிதல்; இஃது ஆற்றாமையுடன் கூடிய வருத்தத்தால் நிகழ்வது; முன் எல்லாம் இரண்டு கண்ணுடன் கண்டவர் இப்போது ஒரு கண்ணால் பார்க்க மன மாற்றாத வருத்தத்தால் நெடிதுயிர்த்தார்.
  நேர் இறைஞ்சி - எழுந்து நேர் நின்று வணங்கி; நகரை நேர் நோக்கி என்றலுமாம்.
  மயங்கு மாலை - சூரியன் அத்தமனமான பின், ஒளி மங்கி இருள் புகுதும் அந்தி வேளை; கண் மயங்கும் நேரம்; காட்டுமொளி குறைதலாற் கண்பார்வை மயங்கும் கண்ணின் மயக்கத்தை அது உளதாகும் நேரத்தின் மேலேற்றிக் கூறியபடி. இவ்வாறன்றி, மயங்குதல் - கலத்தல் என்று கொண்டு (இரவும் பகலும்) மயங்கின மாலைக்காலம் என்பாருமுண்டு.
  தூவாயார் - பரவையுண் மண்டளித் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவர் பெயர்; தூ - உண்ணுகின்ற; வாயார் - வாயினை உடையவர்; ஊழிப்பெரு வெள்ளம் திருவாரூர்மேற் பரவி மூழ்குவிக்காமை அவ்வெள்ளத்தினை உண்பவர் என்ற காரணம் பற்றி வந்த பெயர் என்பது வரலாறு.
  பரவையுண் மண்டளி - என்ற பெயர்ப் (பரவை - கடல்; உண் - பெருகி வாராமல் உண்கின்ற) பொருளும் காண்க. "தூவாயா!" என்ற இப்பதிகத் தொடக்கம் காண்க; அக்குறிப்புப்பட இப்பெயராற் கூறினார்; இதனையே "தூவாயா" என்றெடுத்தே (3557) என மேற் கூறுதலும் காண்க. தலவிசேடம் பார்க்க.
  முன்னம் - திருமூலட்டானத்தில் சென்று தொழுவதன் முன்னம்.
  குறிப்பு - திருவாரூரினுள் மயங்குமாலையிற் புகுதலும், துவாயாரை முன்னந் தொழுது பாடுதலும், அங்கு வேறிருந்து பின்னர்த் திருமூலத்தானத்துள் இடைதெரிந்து திரு அத்தயாமத்து இறைஞ்ச அணைவதும் ஆகிய இந்நிலைகள், நம்பிகள் திருவாரூருள்ளும் திருக்கோயிலுள்ளும் பிரானார் திருமுன்பும் அடியார்கள் திருமுன்பும் ஒரு கண்ணில்லாத அந்நிலையிற் சென்று காணவும் காணப்படவும் மனம் ஒருப்படாது வருந்திய தன்மை குறிப்பன.
  தூவாயார் - என்பதற்கு முன் உரைத்தவாறன்றித், தூ ஆயார் - பற்றுக் கோடாயினவர்; தூ - பற்றுக் கோடாதலை; "மனந்தூய்மை செய்வினை தூய்மையிரண்டு, மினந்தூய்மை தூவா வரும்" என்ற திருக்குறளானுணர்க; தூய்மையுடைய வேத சிவாகம வாக்கியராகலின் தூவாயா ரென்றலுமொன்று என்றுரைத்தனர் இராமலிங்கத் தம்பிரானார்.
 

302

3457
பொங்குதிருத் தொண்டருட னுள்ளணைந்து புக்கிறைஞ்சித்
துங்கவிசைத் திருப்பதிகந் "தூவாயா!" வென்றெடுத்தே
"இங்கெமது துயர்களைந்து கண்காணக் காட்டா"யென்
றங்கணர்தம் முன்னின்று பாடியருந் தமிழ்புனைந்தார்.
 

303

  (இ-ள்) பொங்கு....இறைஞ்சி - பெருகும் திருத் தொண்டர்களுடனே கூடிக் கோயிலின் உள்ளே சேர்ந்து திருமுன்பு புகுந்து வணங்கி; துங்க...எடுத்தே -