[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்355

  வன; (11) நித்தமாக - மறவாது; இடையறாது; சிங்கடியப்பன் - நம்பிகளின் சரிதக் குறிப்பு. சொன்ன - சொன்னவற்றை.
3461
வீழ்ந்தெழுந்து கைதொழுது முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றா லாராமன் மனவழிவார்
"ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின் றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக் கண்டார்" ரெனத்தாழ்ந்தார்.
 

307

  (இ-ள்) வீழ்ந்தெழுந்து...விம்மியே - முன் கூறியவாறு வீழ்ந்தபின் (நம்பிகள்) எழுந்து கை கூப்பித் தொழுது திருமுன்பு நின்று விம்மி விம்மி; வாழ்ந்த...மனமழிவார் - வாழ்வு பெற்ற மலர் போன்ற கண் ஒன்றினாற் கண்டு நிறைவு பெறாமல் மனமழிவாராகி; ஆழ்ந்த...தாழ்ந்தார் - மிக ஆழமாகிய துன்பக் கடலினின்றும் அடியேனை மேலே எழுந்தருள் செய்து விரும்பிய கருத்தை நிறைவாக்குவித்துக் கண்கொடுத்தருளுவீர் எனத் தாழ்ந்து வணங்கினர்.
  (வி-ரை) வீழ்ந்து - முன் பாட்டிற் கூறியவாறு நிலமிசை விழுந்ததன் பின்னர்.
  வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் - திருவொற்றியூரில் இழந்த கண்களிரண்டனுள் முலைச்சுவட்டுக் கோலமுடைய திருவேகம்பரை "காணக் கண்ணடியேன் பெற்றவாறே" என்றபடி இறைவரது திருக்கோலம் காணும் வாழ்வு பெறும் பொருட்டே அவ்வொரு கண் பெற்றமையால் அதனை வாழ்ந்த மலர்க்கண் என்றார்.
  கண் ஒன்று - இடது கண்; கண் ஒன்றால் - ஒரு கண்ணாற் கண்ட காட்சி.
  ஆராமல் - ஆர்த்திபெறாமல்; ஆர்தல் - நிறைவு - அமைதி; மனமழிதல் - மனம் உருகி நைதல்.
  ஆழ்ந்த...எடுத்தருளி - ஆழ்ந்த - நிலைகாணாதவாறு மிக ஆழமுடைய; நான் அழுந்திய என்றலுமாம்; கடல் - உருவகம்; கடல் என்றதற் கேற்ப எடுத்து என்றார். "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து"(சித்தி) என்றாற்போல.
  தாழ்ந்த கருத்தினை நிரப்பி - தாழ்தல் - விரும்புதல்; சபதம் பிழைத்த பெரும் பிழையினையும் பொறுத்தருள வேண்டுதலின் தாழ்வாகிய என்ற குறிப்புமாம்; இப்பொருளில் தாழ்ந்த (தாழ்வாகிய) கருத்தாயினும் அதனை என்று இழிவு சிறப்பும்மை விரிக்க. கருத்தாவது யாது? எனில் கண்தாரும் என்ற இதுவேயாம் என்றபடி.
  தாழ்ந்தார் - தாழ்ந்து வணங்கினார்.
 

307

3462
திருநாவ லூர்மன்னர் திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட் டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்"மற்றைக் கண்டாரீ" ரெனவணங்கி,
 

308

 

வேறு

3463
"மீளா வடிமை" யென்றெடுத்து மிக்க தேவர் குலமெல்லாம்
மாளா மேநஞ் சுண்டருளி மன்னி யிருந்த பெருமானைத்
"தாளா தரிக்கு மெய்யடியார் தமக்கா மிடர்நீர் தாயீ"ரென்
றாளாந் திருத்தோ ழமைத்திறத்தா லஞ்சொற் பதிகம் பாடினார்.
 

309