|
| 3462. (இ-ள்) திருநாவலுர் மன்னர் - திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள்; திருவாரூர்....இன்னமுதத்தை - திருவாரூரில் வீற்றிருந்த பெருமானைத் திருமூலட்டானத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகராகிய இறைவரை வாயினாற் பருகலாகாத இனிய அமுதம் போன்றவரை; கண்களாற் பருகுதற்கு - கண்களினாற் கண்டு அனுபவித்தற் பொருட்டு; மருவார்வத்துடன்....வணங்கி - பொருந்திய பேரன்பினோடும் "மற்றைக் கண் தாரீர்" என்ற கருத்துடன் வணங்கி; |
| 308 |
| 3463. (இ-ள்) "மீளா அடிமை" என்றெடுத்து - மீளா அடிமை என்று தொடங்கி; மிக்க....பெருமானை - மிகுந்த தேவர் கூட்டமெல்லாம் இறந்து படாதபடி தாம் விடத்தினை உண்டு அருளிச் செய்து நிலைபெற்றிருந்த இறைவரை; தாள்....என்று - உமது திருவடியை அன்புடன் பேணும் உண்மை யடியார்களுக்கு ஆகும் துன்பங்களை நீர் தரிக்க மாட்டீரே என்ற குறிப்புடனே; ஆளாம்....பாடினார் - அடிமையும் திருத்தோழமையும் ஆகிய திறத்தோடு அழகிய சொற்றிருப்பதிகத்தினைப் பாடியருளினார். |
| 309 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3462. (வி-ரை) பெருமானை - பிஞ்ஞகனை - அமுதத்தை - இவ்வாறு மூன்று திறத்தாற் கூறும் கருத்துப் பற்றி முன் (3434)லும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க. |
| பருகா இன் அமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு - இது முன் "பருகுமாறும்" என்ற பதிகப் பகுதிக்கு உரைவகுத்துக் காட்டியபடி; ஆண்டுரைத்தவை பார்க்க. |
| மருவு ஆர்வம் - கண்ணொன்றாற் கண்டு ஆராத ஆர்வம். |
| மற்றைக் கண் தாரீர் - மற்றைக் கண்ணாவது காஞ்சிபுரத்தில் பெற்ற இடக்கண்ணன்றி ஏனைய வலக்கண் - இது நம்பிகளது திருவுள்ளக் குறிப்பு. மேற்பாட்டில் "தாளாதரிக்கும்...தரியீர்" என்பது பதிகக் குறிப்பு - (பதிகம் - 2). |
| வீற்றிருக்கும் - என்பதும் பாடம். |
| 308 |
| 3463. (வி-ரை) மீளா அடிமை - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| மிக்க...பெருமானை - இக்கருத்தே பட "விண்ணாள்வா ரமுதுண்ண மிக்க பெரு விடமுண்ட, கண்ணாளா" (3440) என்று முன்னர்க் காஞ்சிபுரத்தின் நிகழ்ச்சியிலும் கூறும் குறிப்புக் காண்க. |
| தாளாதரிக்கு மெய்யடியார் - "மீளா வடிமை யுமக்கே யாளாய்....ஆளாயிருக்கு மடியார்" என்ற பதிகத்தை விளக்கியவாறு. ஆதரித்தல் - இடையறாது பேணி அன்பு செய்தல்; மெய்யடியார் - மெய் - இயற்கை யடைமொழி. |
| மெய் அடியார் தமக்கு ஆம் இடர் - ஆம் - அடியார்கள் தமது வினை தீர்ந்து உய்தற் பொருட்டு நீர் நியதியின்படி ஊட்டுவிக்க அவ்வாறு அவர்பால் வரலாகும்; இடர் - இடரையும்; நீரே ஊட்டுவிப்பினும் அதனை அவர் அனுபவித்தற்கண் அவர்படும் துன்பத்தையும் என்று உம்மைவருவிக்க. |
| தரியீர் - தரிக்கமாட்டாத கருணையுள்ளவரே! என்று துதிக்கும்படி; பதிகம் பார்க்க. |
| ஆளாந் திருத்தோழமைத் திறத்தால் - ஆளாந் தன்மையும், அதனுடன் பொருந்தவுள்ள திருத்தோழராந் தன்மையும் இரண்டும் விரவிப் பொருந்தும் வகை |