360திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  முகமலர்ச்சி யடைந்து உள்ளம் தம் வசமிழந்து பரவசப்பட்டு இறைவரது திருவடி மலர்களின் மேல் பணிந்து வீழ்ந்தனர்.
  (வி-ரை) பூத முதல்வர் - சிவபூத கணங்களுக்கு நாயகர்; உயிர்களுக்கெல்லாம் ஒரு தனி நாதராகிய பசுபதி என்றலுமாம்.
  காதல்புரி வேதனை - காதல் காரணமாக வரும் துன்பம். வேதனைக்கு - வேதனையை நீக்க.
  கருணைத் திருநோக்களித்தருளி - "அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்க மெய்த"(753); முன்னர் நம்பிகளைக் கண்ணிழப் பித்ததும் இறைவரது கருணையேயாம்; ஆனால் அது மறக்கருணை; இப்போது செய்தது அறக்கருணை நோக்கம்.
  கண் கொடுத்தருள் - கண்பார்வை கொடுக்க.
  செவ்வே விழித்தலாவது குருடர் பார்க்கும் பார்வை போலன்றிப் பொருள்களை நேரே மலர்ந்து பார்க்கும் செவ்விய பார்வை.
 

310

3465
விழுந்து மெழுந்தும் பலமுறையான் மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப் பாடி யின்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலு மம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தினருளைப் பருகித் திளைக்கின்றார்;
 

311

3466
கால நிரம்பத் தொழுதேத்திக் கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வருநம்பி நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலு மயனு முறையிருக்கும் வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய வன்பருடன் றேவா சிரியன் மருங்கணைந்தார்.
 

312

  3465. (இ-ள்) விழுந்து...பரவி - நிலம் பொருந்த விழுந்தும் பின் எழுந்தும் பல முறைகளாலும் பொருந்திப் பணிந்து மிகவும் துதித்து; எழுந்த...அழுந்தி - மேன்மேல் அதிகரித்து எழுந்த மகிழ்ச்சியினாலே ஆடியும் பாடியும் இன்பப் பெருக்கில் மூழ்கியும்; இரண்டு....திளைக்கின்றார் - இரண்டு கண்களாலும் அழகிய பொற்புற்றினிடமாக முளைத்தெழுந்த செழிய குளிர்ந்த பவளம்போன்ற சிவக்கொழுந்தாகிய இறைவரது திருவருளைப் பருகி அனுபவத்தில் மூழ்கினவராகி,
 

311

  3466. (இ-ள்) காலம்....ஏத்தி - அந்த வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரை தொழுது துதித்து; ஞாலம்....நம்பி - உலக முய்யும் பொருட்டுத் திருவவதரித்த நம்பிகள்; கனக மணி மாளிகைக் கோயில் - பொன்மயமாகிய அழகிய அப்பூங்கோயிலின் திருமாளிகையினை; விருப்பால்....புறம் போந்து - விருப்பத்தினால் வலமாகச் சுற்றிவந்து விட்டுணுவும் பிரமனும் முறைகிடந்து காத்திருக்கும் திருவாயிலினைக் கடந்து புறத்திற் போந்து; சீலமுடைய...அணைந்தார் - தவவொழுக்க முடைய அன்பர்களுடனே தேவாசிரியனின் பக்கத்தே அணைந்தனர்.
 

312

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
  3465. (வி-ரை) விழுந்து...அழுந்தி - கண்பெற்ற பெருமகிழ்ச்சியினால் நிகழும் அளவுபடாத மெய்ப்பாடுகள்.
  பலமுறையான் - அட்டாங்க பஞ்சாங்க திரியாங்கமாகவும், அவையும் பலமுறையாகவும்.