| பொன்பூ.....புறம்பொழியார் - சயனத்திடை இனிதமர்த லாற்றாதபோது பூந்தவிசில் இருக்கலாம்; அஃது இயலாதாயின் எழுந்து நிற்றல் அன்றி மாளிகையினுள்ளாற் சுற்றி வருதல், அன்றிப் புறத்தே சென்று மனமாறுதல் என்றிவற்றிலொன்று செய்யலாம்; இவையெவையும் செய்யவு மாற்றாராயினர் என்பது. |
| மன் பூவாளி மழைகழியார் - முன் சொன்ன நிலைகளின் காரணம் கூறியவாறு; மன் - வெற்றியுடைய மதனனது; மதன் என்பதன் இடைக்குறை; பூவாளி - மலரம்புகள்; மழைகழியார் - மழைபோல அடர்ந்து பெய்யும் மதனம்புகளுக் குட்படாதபடி விலகமாட்டார். |
| மறவார் நினையார் - மறவார் - இந்நிலைகளுக் கெல்லாம் காரணமாகிய அவரை மறந்துவிடலாமோ எனின் - மறக்கவும் இயலாதவராயினார்; புலத்தல் காரணமாக வேனும் அவரது நினைவு அகலாதாயிற்று; நினையார் - மறக்க இயலாவிடின் நினைவில் வைப்பாரோ எனின் புலர்தலின் நினைக்கவுமாட்டார் என்க. "நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்". |
| என்செய்வார் - மென்பூ.......புறம்பொழியார் - என்றவை புறத் தொழில்கள்; மறவார் நினையார் - அகத்தொழில்; எனவே புறம் அகம் என்ற இரண்டாலும் எத்தொழிலும் செய்ய வியலாதபோது வேறென்னதான் செய்வார் என்றபடி. காரணம் பூவாளி மழைகழியாமையாம் என்று குறிக்க இடையில் வைத்தார்; என்செய்வார் - ஒன்றும் செய்ய இயலாமை என எதிர்மறை குறித்தது. கவிக்கூற்று. |
| என்பூடு......இடைப்பட்டார் - புறம் அகம் என்ற இரண்டு கருவிகளாலும் எத்தொழிலும் செய்ய இயலாதபோது அவர் நிலைதானென்னை? எனின்; அஃதின்னதாமென்றறிவித்தபடி; புலவியோ அன்றிப் பிரிவோ என்ற இரண்டு நிலைகளின் இடையிலே பட்டு நின்றனர் என்பதாம். புலவி - ஊடலின் மிகுதி. |
| இடைப்படுதலாவது புலவியுமாகாது பிரிவுமாகாது வருந்தும் நிலை; என்னை? கூடிய வழியன்றிப் புலவி நிகழாதாதலானும் இங்குக் கூட்டம் நிகழாமையானும் இது கைக்கிளையே யன்றிப் புலவியாகாது; மனத்தாற் பிரிதலில்லாமையானும் மன நினைவு இடையறாது நிகழ்தலின் உருவெளிப்பாடு முதலியவை உண்மையானும் பிரிவுமாகாது; பின்னை என்னையோ இவர் நிலை? எனின், இவையிரண்டினிடைப்பட்டதோர் தனித்த நிலை என்பதாம். |
| என்பு ஊடு உருக்கும் புலவி - புலவியின் இயல்பு குறித்தது; எலும்பையும் உருக்கும் தன்மை வாய்ந்தது என்க; என்பூடுருக்கு மென்பதைப் பிரிவினுடனுங் கூட்டுக. |
| இப்பாட்டுப் பிரிந்தார் மன நிலையினையும், வேறொரு பெண்ணை மணந்த நாயகனிலை கேட்ட நாயகியின் உள்ள நிலையினையும், இனிது விளங்க உரைக்கும் சதுரப்பாடுடைய மிக உயர்ந்த அகப்பொருட் சுவையுடையது; குறிக்கொள்க. |
| மிசையிரார் - வன்பூவாளி - நினையார் - வாய் விள்ளார் - என்பனவும் பாடங்கள். |
| 315 |
3470 | ஆன கவலைக் கையறவா லழியு நாளி லாரூரர் கூன லிளவெண் பிறைக்கண்ணி முடியார் கோயின் முன்குறுகப் பானல் விழியார் மாளிகையிற் பண்டு செல்லும் பரிசினாற் போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறநின்றார். | |
| 316 |
| (இ-ள்.) ஆன......நாளில் - முன் கூறியவாறு உளவாகிய கவலையுடன் கூடிய செயலறு நிலையினாலே மனமுடைந்து வருந்தும் நாளில்; ஆரூரர்.....குருக - நம்பி |