3475 | போந்து புகுந்த படியெல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற் றயர்வார் துயர்வேலை நீந்துந் துணையாம் புணைகாணார் நிகழ்ந்த சிந்தா குலநெஞ்சிற் காந்த வழிந்து தோய்ந்தெழார் கங்கு லிடையா மக்கடலுள். | |
| 321 |
| (இ-ள்) போந்து...விளம்புதலும் - (முன் கூறியபடி பரிசனங்கள்) போந்து நிகழ்ந்தபடி எல்லாவற்றையும் அழகிய குளிர்ந்த வயல்களை யுடைய திருமுனைப்பாடி நாட்டின் தலைவராகிய நம்பிகளுக்கு அறிவித்தலும்; வெருவுற்று அயர்வார் - (நம்பிகள்) அச்ச முற்று வருந்துவாராய்; துயர்வேலை...காணார் - துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுதற்குரிய துணையாகும் தோணிபோன்றாரைக் காணாமையின்; சிந்தாகுலம்...அழிந்து - நேர்ந்த மன வேதனை நெஞ்சத்தினைச் சுட மனமழிந்து; கங்குல் இடையாமக் கடலுள் - இராத்திரியின் நடுயாமமாகிய கடலுள்ளே; தோய்ந்து எழார் - முழுகி மேல் எழ மாட்டாராயினர். |
| (வி-ரை) புகுந்தபடி - நிகழ்ந்தவாறே; எல்லாம் - எல்லாச் செய்கைகளையும். |
| வெருவுற்று - எதிர்பாராது சடுதியில் நேரும் துன்பம் வெரு எனப்படும். |
| துயர் வேலை நீந்தும் புணையாம் துணைகாணார் - துன்ப மிகுதியினைக் கடலாகவும், அதனைக் கடத்தற்குத் துணையாவாரைப் புணைஆகவும் உருவகித்தார்; காணார் - உலகியல்பு கற்ற மாந்தர் சொல்லியும் பயனில்லாமையால் மனிதருள்ளே துணை செய்வார் பிறரிலர் என்பார் காணார் என்றார். |
| சிந்தா குலம் - சிந்தை ஆகுலம் என்பது ஒரு சொன்னீர்மைத்தாய் வந்தது. |
| ஆகுலம் - துன்பம்; காந்துதல் - வெதுப்புதல்; சுடுதல். |
| கங்குலிடை யாமக் கடலுள் தோய்ந்து எழார் - கங்குல் இடையாமம் - பாதியிரவு; நள்ளிரவு; அர்த்தயாமம் என்பது வடமொழி வழக்கு; கங்குல் இடையாமத்தைக் கடலாக உருவகித்தார் உலகுயிர்களை எல்லாம் தன்னுள் அகப்படுத்தி அவத்தை பேதங்களுட்படுத்தி யலைத்தலால்; மேல் வரும்பாட்டில் பிறங்கிருள்வாய் என்பதும் காண்க. தோய்தல் - அழுந்துதல். |
| 321 | 3476 | அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு வத்த யாமம் பணிமடங்கிப் பெருகு புவனஞ் சலிப்பின்றிப் பேயு முறங்கும் பிறங்கிருள்வாய் முருகு விரியு மலர்க்கொன்றை முடிமே லரவு மிளமதியுஞ் செருகு மொருவர் தோழர்தனி வருந்தி யிருந்து சிந்திப்பார், | |
| 322 |
3477 | "முன்னை வினையா லிவ்வினைக்கு மூல மானாள் பாலணைய என்னை யுடையாய்! நினைந்தருளா யிந்த யாமத் தெழுந்தருளி அன்ன மனையாள் புலவியினை யகற்றி லுய்ய லாமன்றிப் பின்னை யில்லைச் செய"லென்று பெருமா னடிக டமைநினைந்தார். | |
| 323 |
| 3476. (இ-ள்) அருகு....பிறங்கு இருள்வாய் - பக்கத்திற் சுற்றி யிருந்தவர்களும் துயின்று, திருவத்தயாம வழிபாடும் நிறைவேறிப், பெருகும் உலகத்தினுள்ளோர்களும் நடத்தல் ஒழிந்து, பேயும் துயிலும் மிக்க நள் இருளிலே; முருகு...தோழர் - மணம் வீசும் கொன்றை மலர்களைச் சூடிய சடைமுடிமேல் பாம்பினையும் இளம்பிறைச் சந்திரனையும் செருகும் ஒப்பற்ற இறைவரது தோழராகிய நம்பிகள்; தனி....சிந்திப்பார் - தனியே வருத்தத்துடன் இருந்து சிந்திப்பாராகி, |
| 322 |