| அணைய நினைந்தருளாய் - இறைவர் செயலெல்லாம் நினைப்பு மாத்திரை அளவானே நிகழ்வனவாதல் குறிப்பு; "இச்சாமாத்திரம் பிரபோ சிருட்டி" "நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத் தேரானை" (தேவா). |
| எழுந்தருளிப் புலவியினை அகற்றில் - எழுந்தருளி என்றது அருள் புரிந்து என்ற மட்டில் பொருள் தந்து நின்றது; அகற்றுதல் - நீக்குதல். |
| அகற்றில் உய்யலாம் அன்றிப் பிறிது செயல் இல்லை - உய்வதற்கு வேறுவழி இல்லை என்று உறுதிப்பொருள் தர உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் கூறினார். |
| என்னை உடையாய் - என்னை உடைமைப் பொருளாய் ஆளாகக் கொண்டமையால் என்று வேண்டுதலுக்குக் காரணங் குறித்தவாறு; இக்கருத்தே பற்றி மேலும் உரைத்தல் காண்க; "நான் உமக்கு - அடியேனாகில் நீர் எனக்கு தம்பிரானாரேயாகில்" (3482); "வலிய ஆட்கொண்ட பற்றென்" (3509); |
| பெருமானடிகள் தமை - பெருமானது திருவடிகளை; பெருமானாகிய அடிகளை என்று ஒரு சொல்லாகக் கொண்டுரைத்தலுமாம்; "அவர் எம்பெருமா னடிகளே" (தேவா). |
| என்னை யுடையா னினைந்தருளில் - என்பதும் பாடம். |
| 323 |
3478 | அடியா ரிடுக்கண் டரியாதா ராண்டு கொண்ட தோழர்குறை முடியா திருக்க வல்லரே? முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத் தொடியார் தழும்பு முலைச்சுவடு முடையார் தொண்டர் தாங்காணும் படியா லணைந்தார் நெடியோனுங் காணா வடிகள் படிதோய. | |
| 324 |
| (இ-ள்) அடியார்...வல்லரே? - அடியவர்களது துன்பங்களைத் தரிக்கலாற்றாத இறைவர் தமது அடியா ராதலோடு தம்மால் ஆளாகக் கொள்ளப்பட்ட தோழராகிய நம்பிகளது குறையினை முடிக்காமலிருக்க வல்லராவரோ?; முற்றும்...உடையார் - உலக முழுதும் ஈன்ற காமாட்சி யம்மையாரின் அழகிய தளிர்போலுங் கையிலணிந்த வளையின் தழும்பும் முலையின் சுவடும் உடைய இறைவர்; தொண்டர்....படிதோய் - விட்டுணுவும் காணாத திருவடிகள் நிலம் பொருந்தத் தொண்டராகிய நம்பிகள் காணும்படியால் வந்தணைந்தனர். |
| (வி-ரை) அடியார்....வல்லரே - இது கவிக்கூற்று; ஏகாரம் வினா; வல்லரல்லர் என எதிர்மறை குறித்தது. தொண்டர்காண அணைந்ததற்குக் காரணங் கூறியவாறு; அன்புடையாரை அறிவன் சிவன் என்பது இறைவரியல்பாக ஞானசாத்திரங் கண்ட உண்மை; குறை - வேண்டும் காரியம். |
| முற்றும் அளித்தாள் - உலக முழுதும் ஈன்றளித்த உமையம்மையார். |
| கைத்தொடியார்...உடையார் - திருவேகம்பர் அம்மையாரது வளைத் தழும்பும் முலைச்சுவடும் அணிந்த வரலாறு; திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (1143) பார்க்க. விரிவு காஞ்சிப் புராணம் தழுவக்குழைந்த படலமும், பிறவும் பார்க்க. |
| நெடியோனும் காணா அடிகள் படிதோயத் தொண்டர் தாங்காணும்படியால் அணைந்தார் என்க; தொணடர்தம் பெருமை கூறியபடி; படிதோய - நிலம் பொருந்த. தொண்டர் - நம்பிகள்; அவர் கண்டவாறு வரும் பாட்டிற் காண்க. |
| முற்றும்...உடையார் - இறைவரது கருணையின் எளிமை குறித்தது. |
| 324 |
3479 | தம்பி ரானா ரெழுந்தருளத் தாங்கற் கரிய மகிழ்ச்சியினாற் கம்பி யாநின் றவயவங்கள் கலந்த புளக மயிர்முகிழ்ப்ப | |