| இங்கு நில்லாது விரைவில் எழுந்தருளிச் சென்று அவளது புலவியினை நீக்குவீராக என்று சொல்லித் தொழுதனர். |
| (வி-ரை) எல்லையில்லாக் களிப்பினராய் - இறையவரே தூது செல்ல ஒருப்பட்டருளினாராதலின் "முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ" (132) என்றபடி அச்செய்தி முற்றுப் பெற்றேவிடும் என்ற உறுதிப்பாட்டினால் தம் கருத்து முற்றியதாகவே கொண்டு அளவில்லா மகிழ்ச்சியினுட்பட்டனர். |
| தாளில்...நின்ற - அளவுகடந்தெழுந்த மகிழ்ச்சியின் மெய்ப்பாடுகள்; வல்ல பரிசெலாம் - தாம்வல்ல - தம்மாலியன்ற - ஆற்றாலெல்லாம். |
| நகை - நகைக்கு இருப்பிடமான பல்வரிசை குறித்தது. |
| முகில்சேர் மாடம் - உயர்ச்சி குறித்தது. |
| வெண்ணகைப் பரவை - என்றது இறைவர் தூதுவரக்காணும் பரவை புலவி நீங்கி மகிழ் கொள்ளுதல் ஒருதலை என்ற குறிப்பினாற் கூறியது. "அணிமுறுவல் அரும்பரவை" (294). |
| ஈண்ட - விரைவாக; நீக்கும் புலவி - என மாறிக் கூறியதும் விரைவுக் குறிப்பு. |
| 330 |
3485 | அண்டர் வாழக் கருணையினா லால கால மமுதாக உண்ட நீலக் கோலமிடற் றொருவ ரிருவர்க் கறிவரியார் வண்டு வாழு மலர்க்கூந்தற் பரவை யார்மா ளிகைநோக்கித் தொண்ட னார்தந் துயர்நீக்கத் தூத னாரா யெழுந்தருள, | |
| 331 |
3486 | தேவா சிரியன் முறையிருக்குந் தேவ ரெல்லாஞ் சேவித்துப் போவார் தம்மில் வேண்டுவார் போத வொழிந்தார் புறத்தொழிய ஓவா வணுக்கச் சேவகத்தி லுள்ளோர் பூத கணநாதர் மூவா முனிவர் யோகிகளின் முதலா னார்கள் முன்போத, | |
| 332 |
3487 | அருகு பெரிய தேவருட னணைந்து வருமவ் விருடிகளும் மருவு நண்பு நிதிக்கோனு முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்த தெருவும் விசும்பு நிறைந்துவிரைச் செழும்பூ மாரி பொழிந்தலையப் பொருவி லன்பர் விடுந்தூதர் புனித வீதி யினிற்போத, | |
| 333 |
3488 | மாலு மயனுங் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங் கால மிது"வென் றங்கவரை யழைத்தா லென்னக் கடல்விளைத்த ஆல மிருண்ட கண்டத்தா னடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப நீல மலர்க்கட் பரவையார் திருமா ளிகையை நேர்நோக்கி, | |
| 334 |
3489 | இறைவர் விரைவி னெழுந்தருள வெய்து மவர்கள் பின்றொடர அறைகொ டிரைநீர் தொடர்சடையி லரவு தொடர, வரிய விளம் பிறைகொ ளருகு நறையிதழிப் பிணையல் சுரும்பு தொடர,வுடன் மறைக டொடர, வன்றொண்டர் மனமுந் தொடர வரும்பொழுது, | |
| 335 |
3490 | பெருவீ ரையினு மிகமுழங்கிப் பிறங்கு மதகுஞ் சரமுரித்து மருவீ ருரிவை புனைந்தவர்தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் திருவீ தியினி லழகரவர் மகிழுஞ் செல்வத் திருவாரூர் ஒருவீ தியிலே சிவலோக முழுதுங் காண வுளதாமால். | |
| 336 |