[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்385

  வும் ஒன்றுண்டோ?; நீர்....என்று - நீர் இந்த நடு இராத்திரியில் வந்து மேற்கொண்டு சொன்ன இக்காரியம் மிக அழகியதாம்"என்று சொன்னார்.
 

343

  இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3495. (வி-ரை) நீர் கரந்த வேணி கரந்தவர் - சொல்லணி; நீர் கரந்த - பெருநீரினை வெளிப்படாது உள்ளே அடக்கிவைத்த; கரந்தவர் - மறைத்தவர்; அர்ச்சகர் வேடமாய் வந்தாராதலின் சடையினையும் தாமாந்தன்மையினையும் கரந்தார்.
  நங்கை - பெண்களி லுயர்ந்தவரைக் குறிக்கும் மகடூஉச் சிறப்புப் பெயர்; "அவர் நங்கை பரவையார் - (293).
  செய்யின் - நான் வந்த காரியத்தை எடுத்து உரைக்கும்படி செய்வாயாகில்; உரைப்பது - உரைக்கப்படுவதாம்.
  அதனை - வந்த காரணத்தினை; முன்னம் அருளிச் செய்தால் என்க; முன்னம் என்பது குறிப்பெச்சம்.
  இங்கு எனக்கு இசையுமாகில் இசையலாம் - தேவரீர் வந்த காரியம் என்மனதிற் கிசையுமாகில் செய்ய இசையலாம்; மனதிற் கிசைதல் - மனம் பொருந்துதல்; மனதிற்குப் பொருந்தினும் தம்மாற் செய்தற் கியல்வது - செய்யக்கூடியதாதலும் வேண்டும்; அதனை மேல்வரும் பாட்டிற் "பின்னைய தியலுமாகில்" (3496) என்று கூறுதல் காண்க; இயல்வதாயினும் மனமிசையாதாயின் செய்யக்கூடாமையாதலின் அதனை முதற்கண் இங்குக் கூறினார்.
 

341

  3496. (வி-ரை) என்னினைந்து என்பால்அணைந்தது அதனை இன்ன தென்று - என்க; பின்னை - அதன்மேல்; அவ்வாறருளிச் செய்ததன்பின்; ஆம் - செய்யலாகும்; இசையலாகும்.
  நம்பி இங்கு வரவேண்டும்; அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டி வந்தது என்ன என்க. அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டி வந்தது என்பதுஇசையெச்சம்.
  வேண்டும் என்ன - வேண்டுதல் வேண்டாமையிலராயும், தம்பால் யாவரும் வேண்டுவன வேண்டுவதல்லது தாம் ஒருவரை எதுவும் வேண்டும் நிலையில்லாராயும் உள்ள இறைவர் இவ்வாறு வேண்டுவது பரவையாரது தவப்பெருமை! என்க.
  சால நம்பெருமை - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது; அற்றாயினும் உண்மைக் குறிப்பும் பட நிற்பதும் காண்க.
  வரப்பெற வேண்டும் - என்பதும் பாடம்.
 

342

  3497. (வி-ரை) பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவா ராகி; இது நம்பிகள் முன்னை நாள்களில் எல்லாம் சென்று வந்த முறைமை, திருவாரூரினின்றும் பிரிந்து எங்குச் சென்றாலும் அங்கங்கும் பொன்பெற்றுப் பண்டு போலத் திருவாரூருக்குப் பங்குனி விழாவுக்கு மீண்டுவரும் வழக்கு; இம்முறை அவ்வாறு பிழைத்துத் திருவொற்றியூர் சென்று சங்கிலித் தொடக்குண்டார் என்ற கருத்து மேல் உரைக்கப்படுதல் காண்க.
  சங்கிலித் தொடக் குண்டாருக்கு - சங்கிலித் தொடக்கு - சங்கிலியாரை மணந்து கட்டுண்டு - சங்கிலியாலே பிணைப்பட்டு என இருபொருள்படவந்த சிலேடை; சங்கிலி போன்று பிணைக்கும் சங்கிலியார் என்ற உவமத்தினையும் உள்ளுறுத்தி நிற்பது காண்க; "என்னா ருயிரு மெழின்மலருங் கூடப் பிணைக்குமிவன்" (3384), "சிந்தைநிறை காவா தவர்பாற் போய்வீழ" (3381), "என்னை யுள்ளந் திரிவித்தாள்"