386திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (3382) என்பன முதலியவை காண்க. திருவொற்றியூரினின்றும் பிரியாமைக்குச் சபதத்தாற் கட்டுண்ட சரித நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்த பிறவும் குறிப்பு.
  இங்கு ஒரு சார்வு உண்டோ? - சார்வு - சாரத்தக்க பற்று; சார்வு - சாரும் பொருள்.
  அழகிது - இகழ்ச்சிக் குறிப்பு. நீர் - இதனை மேற்பூண்டு வரத்தகாத நீர் என்பதும், கங்குலின் - வரத்தகாத நேரம் என்பதும், வந்து சொன்ன - சொல்லவும் தகாததனைச் சொன்ன என்பதும் குறிப்பு. 3499 பார்க்க.
 

343

3498
நாதரு மதனைக் கேட்டு "நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கண் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி
நோதக வொழித்தற் கன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய வடா" தென வருளிச் செய்தார்.
 

344

  (இ-ள்) நாதரும் அதனைக் கேட்டு - இறைவரும் அம்மொழியைக் கேட்டு; நங்கை நீ.....நீங்கி - நங்கையே! உன்பால் நம்பி செய்த குற்றங்களை மனத்துள் வையாது, பொருந்திய புலவியினை நீங்கி; நோதகவு.....வேண்டிக் கொண்டது - துன்பஞ் செய்யும் தன்மையினை நீக்குதற் கல்லவோ உன்னை நான் வேண்டிக் கொண்டேன்; ஆதலின்....அருளிச் செய்தார் - ஆதலாலே நீ என் சொல்லினை மாறுபாடு செய்தல் தகாது என்று அருளிச் செய்தனர்.
  (வி-ரை) நங்கை நீ - செற்றந் தணிப்பதற்கு நங்கை - என உயர்ச்சிக் குறிப்புப்பட விளித்தவாறு. நம்பி - என்று கூறியதும் அக்குறிப்பு.
  ஏதங்கள் - அவை பலவாயினும் அவை எல்லாம் மனத்துக் கொள்ளாதொதுக்கற்பாலன என்பது குறிப்பு.
  நோதகவு - நோவுறுத்தலின் தன்மை; நோ - துன்பமுறுதல்; முதனிலைத் தொழிற் பெயர். தகவு - தன்மை; நோவுதக என்பர் அடியார்க்கு நல்லார்.
  "நான்.......அடாது" என - நான் வேண்டிக்கொண்டதன் பொருட்டாதல் மறுத்தல் செய்ய அடாது. செய்ய - செய்தல். நோதக வொழிதற்கு - என்பதும் பாடம்.
 

344

3499
ருமறை முனிவ ரான ஐயரைத் தைய லார்தாம்
"கருமமீ தாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும்
பெருமைக்குத் தகுவ தன்றா; லொற்றியூ ருறுதி பெற்றார்
வருவதற் கிசையே னீரும் போ"மென மறுத்துச் சொன்னார்.
 

345

  (இ-ள்) அருமறை......தையலார்தாம் - அரிய மறைமுனிவராய் வந்த இறைவரை நோக்கிப் பரவையாரும்; கருமமீதாக....தகுவதன்றால் - குறித்த செயலிதுவேயாக மேற்பூண்டு நீர் இந்த வாயிலின்கண் வருவது மேலும் உமது பெருமைக்குத் தக்கதன்றாகும்; ஒற்றியூர்......போமென - ஒற்றியூரின்கண் நிலைபேறு உடைய உறுதியினைப் பெற்ற அவர் இங்கு வருவதற்கு நான் இசையமாட்டேன்; நீவிரும் போமின் என்று; மறுத்துச் சொன்னார் - எதிர்மறுத்துக் கூறினர்.
  (வி-ரை) மறை முனிவரான ஐயர் - ஆன - ஆக்கச்சொல் அவ்வேடம் பூண்டு வந்த என்ற பொருடந்து நின்றது; ஐயர் - பெருமையுடையோர்; யாவர்க்கும் மேலாம் பெருமையுடைய இறைவரைக் குறித்து நின்றது.