3501 | தூதரைப் போக விட்டு வரவுபார்த் திருந்த தொண்டர் "நாதரை யறிவி லாதே னன்னுதல் புலவி நீக்கிப் போதரத் தொழுதே" னென்று புலம்புவார் பரவை யாரைக் காதலி னிசைவு கொண்டு வருவதே கருத்துட் கொள்வார், | |
| 347 |
3502 | போயவண் மனையி னண்ணும் புண்ணிய ரென்செய் தாரோ நாயனார் தம்மைக் கண்டா னன்னுதல் மறுக்கு மோதான் "ஆயவென் னயர்வு தன்னை யறிந்தெழுந் தருளி னார்தாஞ் சேயிழை துனிதீர்த் தன்றி மீள்வது செய்யா" ரென்று, | |
| 348 |
3503 | வழியெதிர் கொள்ளத் செல்வர்; வரவுகா ணாது மீள்வர் அழிவுற மயங்கி நிற்ப ரசைவுட னிருப்பர்; "நெற்றி விழியவர் தாழ்த்தா" ரென்று மீளவு மெழுவர்; மாரன் பொழிமலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்க ணுற்றார். | |
| 349 |
| 3509. (இ-ள்) தூதரை.....தொண்டர் - தூதராக இறைவரைப் போகவிட்டபின் அவர் செய்கை முற்றி மீண்டு வருதலையே எதிர் நோக்கியிருந்த தொண்டராகிய நம்பிகள்; நாதரை...புலம்புவார் - எனது தலைவராகிய இறைவரை அறிவில்லாத நான் நன்னுதலாகிய பரவையினது புலவி தீர்த்து வரும்பொருட்டு வணங்கி வேண்டினேன் என்று புலம்பிடுவார்; பரவையாரை....கருட்துட் கொள்வார் - பரவையாரைக் காதல்பெருக இசைவித்துக்கொண்டே மீள்வார் என்றே கருத்தினுட் கொள்வாராகி, |
| 347 |
| 3502. (இ-ள்) போயவள்.....என்செய்தாரோ - இங்கு நின்றும் சென்று அவளது மனையினைச் சேரும் புண்ணியராகிய இறைவனார் என்ன செய்தனரோ?; நாயனார்....மறுக்குமோதான் - இறைவரைக் கண்டால் நன்னுதலாகிய பரவைதான் மறுப்பாளோ?; ஆய என்....என்று - பொருந்திய எனது வருத்தத்தினை அறிந்து எழுந்தருளிய இறைவனார் அவளது சிறு கலகத்தினைத் தீர்த்தாலன்றி மீளமாட்டார் என்றுட்கொண்டு, |
| 348 |
| 3503. (இ-ள்) வெளிப்படை - தூதர் மீண்டு வரும் வழி நோக்கி எதிர்கொள்ளும்படி சிறிது தூரம் செல்வார்; அவர் வரக்காணாமையால் மீண்டு வருவார்; மணம் வருந்த மயங்கி நிற்பார்; சோர்வுடனே ஓர் புறம் இருப்பார்; நெற்றிக்கண்ணினையுடைய இறையவர் தாமதித்தார் என்று மீண்டும் எழுவார்; மதனன் பொழியும் மலரம்புகள் மழைபோல வந்து வீழ ஒதுங்குவார்; இவ்வாறு துன்பமுற்றனர். |
| 349 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| இவை இறைவர் தூதுபோய் மீளுமளவும் உள்ள இடையில் கால நீட்டிப் பில் தரிக்கலாற்றாது நின்ற நம்பிகளின் மன அலைவும் மெய்ப்பாடுகளும் குறித்தன. |
| 3501. (வி-ரை) பரவையாரை.....கருத்துட் கொள்வார் - பரவையாரை இசைவுபடுத்தியே இறைவர் மீள்குவர் என்று துணிந்தனராதலின் நாதரைத் தூது விடுத்த அதற்கு இரங்கிப் புலம்புவாராயினர். |
| அறிவிலாதேன் - தகாத செயலாதலின் அறிவில்லேன் என்றார்; பின்னரும் "பிழையுடன் படுவாராகி" (3542) என்பது காண்க. |